Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, February 18, 2014
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு ரத்தாகுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரிய பேரறிவாளன் உள்பட மூன்று பேரின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 3 பேரின் சார்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தூக்குத்தண்டனையை ரத்து செய்ய கோரி முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தங்களது கருணை மனுக்கள் மீது நீண்ட காலமாக முடிவு எடுக்காமல் இருப்பதால், தண்டனையை குறைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கு முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீண்ட காலதாமதம் செய்யப்படுவது குறித்து அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வழக்கில் இந்த காலதாமதம் காரணமாக தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது. இதன் அடிப்படையில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரது தூக்குத்தண்டனையும் குறைக்கப்படலாம் என தமிழார்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment