Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 31, 2013

Happy new year 2014

பர்மாவில் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: 5 பேர் விடுதலை

பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மார் அரசாங்கம் ஐந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது. நாட்டின் கடைசி அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்துவிடுவதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்துவரும் அதிபர் தெயின் செய்ன், இந்த ஆண்டின் இறுதிக்குள் எல்லா அரசியல்கைதிகளையும் விடுதலை செய்துவிடுவதாக உறுதியளித்திருந்தார். ஐம்பது பேர்வரையில் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவர்கள் அடுத்துவரும் நாட்களில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யார் விடுதலைக்குள் அடங்குவார்கள் என்ற பட்டியலை அரசாங்கம் அறிவிக்கவில்லை. ஆனால், வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவர்களும் அரசியல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டுள்ளவர்களும் இந்த பொதுமன்னிப்பு நடைமுறைக்குள் அடங்குவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இராணுவ பின்புலத்தைக் கொண்ட அரசாங்கத்தால் 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த பொதுமன்னிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு உதவ கியூபா உறுதி அளித்துள்ளது:-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா, உதவுவதாக உறுதியளித்துள்ளது. 'எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக, கொள்கை அடிப்படையிலான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதனால், கியூபா அதை எதிர்க்கின்றது என கியூப தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார். இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகும். இது ஒரு நாட்டின் மீது தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிப்பதாகும் இது சர்வதேச சட்டத்தின் உண்மைப் பொருளாகாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க முடியாத நிலையில் கியூபா உள்ளதென்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தாலிய நகரமொன்றில் அதிகளவில் இலங்கையர்கள் வாழ்கின்றனர்

இ;த்தாலிய நகரமொன்றில் அதிகளவில் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தாலியின் பாலர்மோ என்னும் நகரில் அதிகளவில் இலங்கையர்கள் குடியேறியுள்ளனர். ஏனைய வெளிநாட்டவர்களை விடவும் இலங்கையர்கள் அதிகளவில் குறித்த நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த நகரில் 30000 வெளிநாட்டுப் பிரஜைகள் வாழ்ந்து வருவதாக மாநகரசபை அறிவித்துள்ளது. இதில் அதிகளவானவர்கள் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டில் பாலர்மோவின் மொத்த சனத்தொகையில் 17.1 வீதமானவர்கள் இலங்கையர்கள் என புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் அடிமைக் கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐ.தே.க குற்றச்சாட்டு:-

அரசாங்கம் அடிமைக் கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் புதிய அடிமைக் கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். டொலர்களை அடிபப்டையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் மீண்டும் சீனி தனியார் கம்பனி99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள்

கரும்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71 ஆயிரத்து 716 ஏக்கர் காணிளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராயன்குளம், நயினாமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் 24 ஆயிரத்து 340 ஏக்கர் காணிகளும் மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகுதிகளில் 5185 ஏக்கர் காணிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பகுதியில் 80 ஹெக்டெயர் காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளது. கரும்புச் செய்கைக்காக காணி சுவீகரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தற்போதைய நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை ஊடகவியலாளாகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் – SAFMA

இலங்கை ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் காணப்படுவதாக தெற்காசிய சுதந்திர ஊடகப் பேரவை தெரிவித்துள்ளது. முழு அளவில் கருத்துச் சுதந்திரமுடையவர்களாக இலங்கை ஊடகவியலாளர்கள் செயற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஊடக சுதந்திர நிலையில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2013ம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை 162ம் நிலையை வகிக்கின்றது. மொத்தமாக 179 நாடுகளில் இலங்கை 162ம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடக்குமுறைகள் காரணமாக 80க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அதிகளவில் ஊடக அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

நான்கு இலங்கையர்கள் தனுஸ்கோடியில் கைது:-

நான்கு இலங்கையர்கள் இந்தியாவின் தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய பயண ஆவணங்கள் எதுவும் இன்றி இவர்கள் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படகு மூலம் தனுஸ்கோடி கடற்பரப்பை சென்றடைந்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிர்மலன், அவரது மனைவி நிசாந்தினி, மகன் டிக்ஸன் மற்றும் படகை செலுத்திய கந்தசாமி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்றோர் தமது திருமணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் தாம், இந்தியாவிற்கு சென்றதாக குறித்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் அல்- ஜசீரா ஊடகவியலாளர்கள் கைது

பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டே எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-ஜசீரா செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் குழுவினர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அல் ஜசீரா தொலைக்காட்சி வலையமைப்பின் கெய்ரோ பணியகத் தலைமை செய்தியாளர் மொஹமட் ஃபாதல் ஃபாஹ்மியும் பிபிசியின் முன்னாள் பிராந்திய செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டேவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.மொஹமட் ஃபாதல் ஃபாஹ்மி கனேடிய பிரஜை. பீட்டர் கிரெஸ்டே ஆஸ்திரேலியப் பிரஜை. இருவரையும் உடனடியாக விடுவிக்குமாறு அல்ஜசீரா கோரியுள்ளது. கடந்த வாரம் ஒரு பயங்கரவாத அமைப்பாக ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருடன் சட்டவிரோத சந்திப்புகளை நடத்தியுள்ளதாகத்தான் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் மொஹமட் மோர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டது முதல் எகிப்தில் ஊடகங்களுக்கான சூழல் மிகவும் மோசமாக மாறிவிட்டது. இராணுவ ஆட்சியாளர்கள் நாட்டைப் பொறுப்பேற்றப் பின்னர் இஸ்லாமியவாத ஊடகங்கள் பல மூடப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

'சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கடற்படை முகாமுக்குள் ஓடினார்'

இலங்கையில் திருகோணமலை மாவட்டம்- குச்சவெளி பிரதேசத்தில் 4 வயது பெண் சிறுமி, கடற்படைச் சிப்பாய் என சந்தேகிக்கபடும் நபரொருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த நபர் கடற்படை முகாமில் பணியாற்றும் சமையல்காரர் என்று இலங்கை காவல்துறை கூறுகிறது. திரியாய் கடற்படை முகாமுக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் வீட்டிற்கு கறிவேப்பிலை தேவை எனக்கூறி வந்துள்ள இந்நபர், சிறுமியைத் தூக்கி மடியில் இருக்கச்செய்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதனை அவதானித்த சிறுமியின் 12 வயது சகோதரி சத்தம்போட்டு தாயை வரவவழைக்க, அந்நபர் கடற்படை முகாமுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் குழந்தையின் தந்தை கூறுகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய நபரை ஒரு வருடமாக சீருடையிலும் சிவில் உடையிலும் தான் கண்டுள்ளதாக கூறும் குழந்தையின் தந்தை, சம்பவத்தின் போது சிவில் உடையில் தான் அவர் வந்ததாகவும் தெரிவிக்கின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கடற்படைச் சிப்பாய் என குழந்தையின் தந்தை சந்தேகம் வெளியிட்டாலும், இலங்கை காவல்துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண அந்நபர் முகாமின் சமையல்காரன் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக திருகோணமலை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அந்நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை கூறுகின்றது.

மறைந்த நம்மாழ்வார் உடல் கரூர் அருகே 'வானகம்' வேளாண் பண்ணையில் அடக்கம் செய்யப்பட உள்ளது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நம்மாழ்வார் (74). மே 10, 1938ல் பிறந்த அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. (விவசாயம்) பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள வேளாண் மண்டல ஆய்வு நிலையத்தில் 1963 ஆம் ஆண்டில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து 6 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயன உரம், ரசாயன பூச்சிக் கொல்லி பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகினார். தொடர்ந்து, வேளாண்மையில் வீரிய மிக்க விதைகள், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு எதிராகவும், இயற்கை வழி வேளாண்மையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். மேலும், பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான மாற்றுக் கருத்துகளையும் நம்மாழ்வார் முன் வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2002 ஆம் ஆண்டில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், 2003 ஆம் ஆண்டில் பூம்புகாரிலிருந்து கல்லணை வரையும், புதுக்கோட்டையிலும் நடைபயணம் சென்றார். இதுபோல, வாழ்நாள் இறுதிவரை அவர் மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும், இயற்கை விவசாயத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும் பாடுபட்டு வந்தார். கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார். இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. 253 அமைப்புசாரா அமைப்புகளுக்கு அமைப்பாளராகவும் இருந்தார், இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும், மீனா என்ற மகளும் உள்ளனர், பேரிகை என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார், சமீப காலமாக மத்திய அரசு அறிவித்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்தும், கிராமப்புற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களாக, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அத்திவெட்டி கிராமத்தில் உள்ள, லெனின் என்பவர் வீட்டில் தங்கி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலம் பாதித்தது. திங்கள்கிழமை இரவு, 8 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மரணமடைந்தார். அவரது உடல், கரூர் மாவட்டம், சுருமான்பட்டி, 'வானகம்' வேளாண் பண்ணையில் 01.01.2014 புதன்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரது உடல் தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

என்னைப்போல யாரும் கஷ்டப்படக் கூடாது! பூரண மதுவிலக்கு கோரி 4ம் வகுப்பு மாணவி உண்ணாவிரதம்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 4ம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மதுரையைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி ஜோதிமணி. இவர், தனது தந்தை மோகன் ராஜ் உடன் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் மாணவி ஜோதிமணி கூறியதாவது, "எனது அப்பா குடிபழக்கத்துக்கு ஆளானார். அவர் அந்த பழக்கத்திற்கு ஆளானபோது எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது. எனக்கு ஸ்கூல் பீசு கூட கட்டமுடியல. ஸ்கூல் படிப்ப நிறுத்தலாமா என்ற நிலைமைக் கூட வந்தது. இப்ப எங்க அப்பா நல்லாயிட்டாரு. எங்க அப்பா குடிக்கிறதில்ல. எங்க குடும்பத்தைப் போல வேறு எந்த குடும்பமும் கஷ்டப்படக் கூடாது. என்னைப்போல எந்த பசங்களும், யாரும் கஷ்டப்படக் கூடாது. எந்த பசங்களும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. அதுக்காகத்தான் இந்த உண்ணாவிரதம். எங்க அப்பா போல மற்ற அப்பாக்களும் இந்த பழக்கத்தை நிறுத்திவிட்டு என்னைப் போன்ற குழந்தைகளை நன்றாக பாத்துக்கனும். தமிழக அரசும் தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்" என்றார். மோகன் ராஜ் கூறுகையில், நான் குடிப்பழகத்தில் இருந்து மீண்டுள்ளேன். என்னைப்போல அந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் மீளவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று மதுவிற்பனை கூடிக்கொண்டே இருக்கிறது, அரசே குடி குடி என்று சொல்வதைப்போல இருக்கிறது, குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளது என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழக அரசும் மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும். மக்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறும் தமிழக முதல் அமைச்சர், இந்த மதுவிலக்கையும் அமுல்படுத்தவேண்டும் என்றார்.