Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, February 26, 2014

நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: 'இலங்கை உறவு காரணம்'

நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: 'இலங்கை உறவு காரணம்' No Fire Zone veil ban in India: Sri Lanka due to relationship ' YOU CAN SEE THE LINK IN ENGLISH& HINDI http://nofirezone.org/watch

நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: 'இலங்கை உறவு காரணம்'

சேனல் 4 - பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்படங்களையும் உள்ளடக்கிய விதத்தில் நோ பயர் சோன் தயாரிக்கப்பட்டது

மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாமல் இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளை கொண்ட மூன்றாவது அணி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------- இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருப்பதை போன்ற மாயையை அவர்கள் உருவாக்கியுள்ளதாக குற்றம் கூறியுள்ள, இந்த 11 கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் செவ்வாயன்று புதுடில்லியில் நடைபெற்றது
மூன்றாவது அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவையும் இடம்பெறுகின்றன.-------------------------------------------------------------------------------------------முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் கரத், புதியதாக அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியில் இடதுசாரிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தள், மதசார்பற்ற ஜனதா தள், பிஜு ஜனதா தள், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அசோம் கானா பரிஷத் போன்ற 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். "மக்களின் நம்பிக்கைக்குரிய அணி" >------------------------------------------------------------------------------------------- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத மூன்றாவது கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் தற்போது உருவாகியுள்ளதாக கூறிய பிரகாஷ் கரத், இந்த மூன்றாவது அணி மக்களின் நம்பிக்கைக்குரிய அணியாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார். >------------------------------------------------------------------------------------------- அசோம் கானா பரிஷத் கட்சியின் தலைவர் பிரப்புல்லா குமார் மகந்தா மற்றும் பிஜு ஜனதா தள் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். >------------------------------------------------------------------------------------------- இதனை தொடர்ந்து, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, 11 கட்சிகளை கொண்டு உருவாகியுள்ள இந்த மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார். >------------------------------------------------------------------------------------------- மதசார்பற்ற மற்றும் ஊழலை எதிர்க்கும் சிந்தனையோடு உருவாகியுள்ள இந்த கூட்டணியில், ஒத்த கருத்துகளை உடைய மற்ற கட்சிகளும் இணைத்து முறையான ஜனநாயக ஆட்சியை உருவாக்க ஒன்றுபட வேண்டும் எனவும் கோரினார். பிரதமர் வேட்பாளர் யார்? >------------------------------------------------------------------------------------------- ஏற்கனவே பிஜேபி தனது பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்துள்ளது, அதுபோல காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் ராகுல் காந்தியை முன்வைத்து தேர்தல் பிரச்சாரங்களை செய்து வரும் சூழலில், இந்த மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் பிரகாஷ் கரத்திடம் கேள்வி எழுப்பினார். >------------------------------------------------------------------------------------------- அதற்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எதுவும் அறிவிக்கப்படமாட்டது என்றார். >------------------------------------------------------------------------------------------- தேர்தல் முடிவுக்கு பிறகே பிரதமர் குறித்த முடிவுகள் எட்டப்படும் எனவும் கூறினார். >------------------------------------------------------------------------------------------- தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட இந்த மூன்றாவது அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சில தலைவர்களும், தங்களது பிரதமர் கபவை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்த மூன்றாவது அணியில் இணைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சீனாவுக்கு புதிய தேசிய விடுமுறை நாட்கள்

ஜப்பானுடன் கடந்த 1930 மற்றும் 40களில் இடம்பெற்ற போரை குறிக்கும் முகமாக சீன அரசாங்கம் இரு புதிய தேசிய விடுமுறை நாட்களை கொண்டு வர உத்தேசித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------- சீனாவில் தற்போது ஜப்பானுக்கு எதிரான எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ------------------------------------------------------------------------------------------------- 1945 ஆம் ஆண்டு ஜப்பான் அதிகாரபூர்வமாக சரணடைந்ததையும், நான்ஜிங் படுகொலைகளையும் குறிக்கும் முகமாகவும் இந்த விடுமுறை திட்டம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- 1937 ஆம் ஆண்டு ஜப்பான் துருப்புகள் சீனாவை ஆக்கிரமித்த பின்னர், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பொது மக்களை ஜப்பான் கொன்று விட்டதாக சீனா கூறுகிறது. ------------------------------------------------------------------------------------------------- ஆனால் இவ்வாறு சீனா கூறுவதை ஜப்பான் தேசியவாதிகள் மறுத்து வருகின்றனர்.

ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறந்தவுடன் இறப்பு'

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் குழந்தைகள் தாங்கள் பிறந்த முதல் நாளிலேயே இறந்து விடுவதாக ஒரு குழந்தைகள் நல தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- உலகின் அனைத்து பெண்களும் சுகாதார சேவைகளைப் பெற முடிந்தால் , உலகம் முழுவதும் ஏற்படும் இந்த மரணங்களில் பாதிக்கும் அதிகமான மரணங்களை தடுக்க முடியும் என்று ‘சேவ் த சில்ட்ரன்’ எனப்படும் குழந்தைகள் நல தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- குறைப் பிரசவமும், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களும் முக்கிய அபாயங்களாகக் கருதப்படுகின்றன. ---------------------------------------------------------------------------------------------------- சரியான பயிற்சி பெற்றவர்களின் உதவி இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40 மில்லியன் பெண்கள், பிரசவிக்கும் நிலமையை மாற்ற அரசாங்கங்களை அந்த நிறுவனம் கோரியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------- இந்த நிலமையுள்ள மோசமான நாடுகளை சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு அதில் குறிப்பாக தெற்கு சுடானில் வாழும் 10 மில்லியன் மக்களுக்கு உதவி புரிய வெறும் 300 மருத்துவத் தாதிகளே உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜெயலலிதா

மக்களவை தேர்தலுக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். ------------------------------------------------------------------------------------------------- இந்த விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- அத்துடன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும், தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்பபட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அ.தி.மு.க வலியுறுத்தும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு:-

திருகோணமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலை முருகாபுரியின் மூன்றாம் மைல்கல் பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை இராணுவத்தினர் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். ஐந்து ரி56 ரக துப்பாக்கிகள், ஒரு இயந்திர துப்பாக்கி, மகசீன்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் - பஜக

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மூன்று மாத காலப்பகுதியில் தீர்வு வழங்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியை அமைத்து மூன்று மாத காலப்பகுதிக்குள் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாம் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய போது இலங்கையுடன் சுமூகமான உறவுகளைப் பேணியதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் உரிய முறையில் நடந்துகொள்ளத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மத்திய பிரிவுகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது – கோதபாய

எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளா கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சில நாடுகள் இலங்கைக்கு எதிராக ராஜதந்திர ரீதியான முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் மேற்குலக நாடுகள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன், இந்தியாவிற்கு விஜயம் செய்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளத் தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், நியூயோர்க்கில் கடமையாற்றி வரும் ஐக்கிய நாடுக்ள அமைப்பு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் இராணுவத்தை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் உயிரைப் பணயம் வைத்து போராடிய படைவீரர்களை எந்தவொரு புத்திசாதூரியமான அரசாங்கமும் வீட்டுக்கு அனுப்பி வைக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்தின் எண்ணிக்கை குறைப்பானது பாரியளவில் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். படைவீரர்களை வீட்டுக்கு அனுப்பி அதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பி;ன்னரான நல்லிணக்கப் பணிகளில் படைவீரர்கள் சிறந்த முறையில் பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுக்கும் நோக்கில் வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.