Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, June 28, 2014

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது அமெரிக்கா!

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்கா வழங்குகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ------------------------------------------------------------------------------------ பொது மக்களின் புரட்சி படைக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. தங்களது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் அதிபர் பஷர் அல்– ஆசாத் அரசுக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------ இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களின் புரட்சி படைக்கு ரூ. 3 ஆயிரம் கோடியை அமெரிக்கா வழங்குகிறது. அதன் மூலம் அவர்கள் அதிநவீன போர்க்கருவிகள் வழங்கவும், அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------ அதற்கான ஒப்புதலை அமெரிக்க பாராளுமன்றத்தில் பெற அதிபர் ஒபாமா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக அல்கொய்தா ஆதரவு பெற்ற ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் உள்ளனர். ------------------------------------------------------------------------------------ அவர்கள் ஈராக்கில் முன்னேறி வருகின்றனர். புரட்சி படையை பலப்படுத்துவதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தையும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மீதான தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் முறியடிக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ----------------------------------------------------------------- பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒன்றிணைந்த செயலாளர் ரன்கே சிங் இதனைத் தெரிவித்துள்ளார்

சிறிலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைக்கு சிறுவர்கள் விநியோகம்

சிறிலங்காவிற்கு செல்கின்ற சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைகளுக்காக சிறுவர்களை விநியோகித்து வந்துள்ளமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதுடன் இவ்வியாபாரத்துடன் தொடர்புபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நடைபெற்ற விசாரணைக்கமைய இரண்டரை வருடத்திற்கு முன்பிருந்தே இவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்தார். ------------------------------------------------------------------------- சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பிரான்ஸ் நாட்டவரொருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதற்கு அமைய சிறிலங்கா சிறுவர்களையும் இதற்காக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் அவரிடமிருந்து சிறிலங்கா சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நிர்வாணப் புகைப்படங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து பிரான்ஸ் காவல்துறையினரால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------- அத்தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதிகார சபையின் விசேட பொலிஸ் பிரிவினர் இந்த வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். அத்துடன் இதுவரை 5 பிள்ளைகளிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளைத் தேடி சாட்சியங்களை பதிவு செய்ய முயற்சித்து வருகின்றனர். ------------------------------------------------------------------------- அப்பிள்ளைகளைத் தேடி கண்டு பிடித்து அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரான்ஸ் பொலிஸாரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.