Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, October 26, 2013
வெங்காயம் திருட்டை தடுக்க ரகசிய காமிராவில் கண்காணிப்பு: குஜராத் வியாபாரிகள் ஏற்பாடு
ஆமதபாத், அக். 26–
வெங்காயத்துக்கு நாடெங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெங் காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி, காஷ்மீரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100–க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் காய்கறி கடைகளில் வெங்காயம் திருடப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
குஜராத் மாநிலத்தில் மதுவா நகரில் உள்ள மார்க்கெட்தான் வெங்காயம் விற்பனைக்கான பெரிய மார்க்கெட்டாகும். இந்த மார்க்கெட்டில் மட்டும் தினமும் சுமார் 25 கிலோ வெங்காயம் திருட்டு போய் விடுவதாக தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் மதுவா மார்க்கெட்டில் புகுந்த மர்ம மனிதர்கள் 2 மூட்டை வெங்காயத்தை எடுத்து சென்று விட்டனர். இதையடுத்து அந்த மார்க்கெட் முழுவதும் ரகசிய காமிராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இரவு–பகலாக கண்காணிக்கும் இந்த காமிராக்கள் மூலம் வெங்காயம் திருட்டை தடுக்க முடியும் என்று காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர வெங்காயம் இருப்பு வைக்கப்படும் குடோன்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif
பீகாரில் நாளை மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்: 14 ரெயில்களில் தொண்டர்கள் வருகை
பாட்னா, அக்.26–
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
நேற்று அவர் ஜான்சி நகரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ராகுலின் சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நரேந்திரமோடி பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிக, மிக பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன.
பீகார் மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை 150 அடி நீளத்துக்கு முழுவதும் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேடை மீது 30 அடி நீளத்துக்கு எலக்ட்ரானிக் ஸ்கிரீன் வைத்துள்ளனர்.
மோடி கூட்டத்தில் கலந்து கொள்ள பீகார் முழுவதும் இருந்து பா.ஜ.க.வினர் பாட்னா நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதற்காக பீகாரின் பல பகுதி களில் இருந்து 14 சிறப்பு ரெயில்கள் பாட்னாவுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் நாளை காலை பாட்னா வந்து சேரும்.
ரெயில்கள் தவிர 3 ஆயிரம் பஸ்களும் விடப்பட்டுள்ளன. எனவே பாட்னாவில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கடந்த 17 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தன. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிதீஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்த கூட்டணி பிளவுக்கு பிறகு முதன்முதலாக பீகாருக்கு நாளை மோடி செல்கிறார். எனவே நாளைய கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மோடி வருகையை முன்னிட்டு பீகாரில் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் மோடி பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பீகார் முழுவதும் மோடி இலவச டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் பாட்னா நகரம் இன்றே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாட்னாவில் உள்ள எல்லா ஓட்டல், விடுதி அறைகள் நிரம்பி விட்டன. பாட்னாவில் எங்கு பார்த்தாலும் மோடி படம் போட்ட போஸ்டர்கள், கட்–அவுட்டுகள் நிறைந்துள்ளன.
இதனால் பாட்னா கூட்டத்தில் நாளை மோடி என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
நேற்று அவர் ஜான்சி நகரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ராகுலின் சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நரேந்திரமோடி பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிக, மிக பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன.
பீகார் மாநில அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடை 150 அடி நீளத்துக்கு முழுவதும் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேடை மீது 30 அடி நீளத்துக்கு எலக்ட்ரானிக் ஸ்கிரீன் வைத்துள்ளனர்.
மோடி கூட்டத்தில் கலந்து கொள்ள பீகார் முழுவதும் இருந்து பா.ஜ.க.வினர் பாட்னா நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதற்காக பீகாரின் பல பகுதி களில் இருந்து 14 சிறப்பு ரெயில்கள் பாட்னாவுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் நாளை காலை பாட்னா வந்து சேரும்.
ரெயில்கள் தவிர 3 ஆயிரம் பஸ்களும் விடப்பட்டுள்ளன. எனவே பாட்னாவில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும் பா.ஜ.க.வும் கடந்த 17 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தன. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிதீஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்த கூட்டணி பிளவுக்கு பிறகு முதன்முதலாக பீகாருக்கு நாளை மோடி செல்கிறார். எனவே நாளைய கூட்டத்தை மிக, மிக பிரமாண்டமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மோடி வருகையை முன்னிட்டு பீகாரில் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் மோடி பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பீகார் முழுவதும் மோடி இலவச டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் பாட்னா நகரம் இன்றே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாட்னாவில் உள்ள எல்லா ஓட்டல், விடுதி அறைகள் நிரம்பி விட்டன. பாட்னாவில் எங்கு பார்த்தாலும் மோடி படம் போட்ட போஸ்டர்கள், கட்–அவுட்டுகள் நிறைந்துள்ளன.
இதனால் பாட்னா கூட்டத்தில் நாளை மோடி என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் நில நடுக்கம்: புகுஷிமா அணு உலைக்கு பாதிப்பு இல்லை
டோக்கியோ, அக். 26–
ஜப்பானில் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் சுனாமி (ராட்சத) அலைகள் ஏற்பட்டன. அவை வழக்கத்தை விட சுமார் 3 அடி உயரத்துக்கு சீற்றத்துடன் எழும்பி வந்து கரையில் சிறிதளவு தாக்கின.
அதை தொடர்ந்து ஜப்பானின் அவசர சேவை மையம் கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதிகாலை நேரத்திலும் வீடுகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இங்குதான் புகுஷிமா அணு உலை உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு பூகம்பமும், சுனாமியும் தாக்கியதில் அணு உலைகள் வெடித்து சேதம் அடைந்தன.
அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சினால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்த முறை சுனாமி தாக்குதலின்போது புகுஷிமா அணுஉலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே ராட்சத அலைகள் குறைந்து விட்டதால் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து புகுஷிமா அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதித்த நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஜப்பானில் நேற்று 7.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
டெல்லியில் 10தொகுதிகளில் தேமுதிக போட்டி?
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட திட்டமிட்டிருப்பதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து நாளை ஆலோசனை செய்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் பிரச்சாரம் காங்கிரசுக்கு ஆதரவாக:காங். செய்தி தொடர்பாளர் பிரமோத் குஹாலியா
மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கான தேர்தல் நவம்பர் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி போபா-ல் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரமோத் குஹாலியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் பிரச்சாரம் செய்கிறார். சச்சின் பேச உள்ள 9 பொதுக் கூட்டத்துக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார்.
பொதுநலவாய மாநாட்டில் 13 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு?
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும்.
இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று கனடா ஏற்கனவே நேரடியாக அறிவித்து விட்டது.
பிரித்தானியா தலைமையிலான அரச தலைவர்கள் கொழும்பு மாநாட்டில் பங்கேற்க உள்ள போதிலும் பொதுநவாய அமைப்பின் இணக்கப்பாடுகளை முழுமையாக மீறியுள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பதற்காகவே கொழும்பு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சிறிய நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களிடம் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிச்சை கேட்டு வருவதாக சிங்கள இணைதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனிடையே பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்துள்ளதுடன் திறைசேரியில் உள்ள முழு பணத்தையும் மாநாட்டுக்காக செலவிட்டு வருகிறது.
இதனால் அரச நிறுவனங்களின் செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிதி நெருக்கடியை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.
அரச நிறுவனம் ஒன்றின் தேவைக்காக 50 ஆயிரம் ரூபாவைக் கூட பெற முடியாத நிலைமை காணப்படுவதாக அரச நிறுவனம் ஒன்றின் அதிகாரிகள் தெரிவிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தின் செலவுகளுக்காக கிடைக்க வேண்டிய 50 மில்லியன் ரூபா பணம் கிடைக்காத நிலையில் நாடாளுமன்ற உணவகத்திற்கு அவசியமான உணவு பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த இணையதளம் கூறியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் விக்கி பங்கேற்கக்கூடாது
பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் யாழ்.நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்று மணி நேரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வு முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இதில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு அமைச்சின் கீழான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன், புளொட்
தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகமும் மாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சு மூன்று மணி நேரம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டது.
அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுப்பது தொடர்பாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன்போது அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாதென்றே வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது; திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி , பதில் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா எழுந்து, ஒரு தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் கூறியிருப்பதாவது: 2009ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவித்து ஒரு இன படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது. இதற்கு தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதில் இருந்தும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டன. இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் 8.6.2011 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுநாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்து 25.3.2013 அன்று பிரதமரை கேட்டுக் கொண்டேன். இது மட்டுமல்லாமல் 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், இலங்கை நாட்டை ‘நட்பு நாடு‘ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும், தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ‘தனி ஈழம்‘ குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானம் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்மீதும் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்று தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்கு கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது; இதுபோன்ற நடவடிக்கை இலங்கை தமிழர்கள் மீது நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும் என்றும் கோடிட்டுக்காட்டி ஒரு விரிவான கடிதத்தை பிரதமருக்கு 17.10.2013 அன்று எழுதியுள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளை தெரிவிக்கும் வகையிலும், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார். “தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநா ட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநா ட்டில் கலந்து கொள்ளக் கூடாது. இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பேரரசை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’’ என்று தீர்மானத்தை முன்மொழிந்து ஜெயலலிதா பேசினார். இதையடுத்து தனபால் (பேரவை தலைவர்), பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), மு.க.ஸ்டாலின் (திமுக), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு), கோபிநாத் (காங்கிரஸ்), ஜவஹருல்லா (மமக), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமக), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)