Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, October 27, 2014
அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவ வளாகம் ஆப்கன் படையிடம்
தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆயுதப்படையினர் பயன்படுத்திவந்த பெரும் இராணுவ வளாகம் ஒன்று உள்நாட்டு பாதுகாப்புப் படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
தாலிபன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தக் கட்டட வளாகம் ஆப்கன் படைகளிடம் கையளிக்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளைக் குறைக்கும் நடவடிக்கையின் முக்கிய கட்டமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------
பாஸ்ச்யன் படைத்தளத்தில் இன்று நடந்த நிகழ்வில் பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் நேட்டோ கொடிகள் இறக்கப்பட்டு, ஆப்கன் கொடி மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
ஹெல்மண்ட் மாகாணத்தில் பிரிட்டன் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதை இன்றைய நிகழ்வு உணர்த்துவதாகவும், இது பிரிட்டன்- ஆப்கன் வரலாறுகளில் முக்கிய அத்தியாயம் என்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் ஃபாலோன் கூறினார்.
---------------------------------------------------------------------------------------
ஆப்கானுக்குள் நுழைந்தது முதல் பிரிட்டன் இதுவரை 453 படையினரை இழந்துள்ளது.
---------------------------------------------------------------------------------------
இதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் ஆப்கன் படையினரில் நாலாயிரம் பேர் பலியாகியுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா-சீனா-இலங்கை: முக்கோண மோதலில் நடப்பது என்ன?
-------------------------------------------------------------------------------------
சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த சமயத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்த செயலை இந்திய பெருங்கடற்பரப்பில் இந்திய கடற்படை ஆதிக்கத்துக்கு எதிரான சவாலாக இந்தியா பார்க்கும் என்கிறார் இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி கர்ணல். ஹரிஹரன்.
-------------------------------------------------------------------------
இது குறித்த தனது தீவிர கவலையை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்ததாக சென்னையில் இருந்து வெளியாகும் ''தி ஹிந்து'' பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.
------------------------------------------------------------------------
சென்றவாரம் இந்தியா வந்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் கவலைகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் ''தி ஹிந்து'' செய்தி தெரிவிக்கிறது.
-----------------------------------------------------------------------
இந்தியாவின் கவலையின் பின்னணி குறித்து இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயரதிகாரி கேனல் ஹரிஹரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
Subscribe to:
Posts (Atom)