Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Sunday, December 29, 2013

டில்லி முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால்

டில்லி மாநில முதல் அமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர், அரவிந்த் கேஜ்ரிவால், இன்று பதவியேற்றார். டில்லியின் ராம்லீலா மைதானத்தில் திறந்த வெளியில் நடந்த விழா ஒன்றில் அவர் டில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஊழலுக்கெதிராகப் பிரச்சாரம் செய்து டில்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த , ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், கேஜ்ரிவால், பதவிப் பிரமாண வைபவத்துக்கு ரெயிலில் வந்தார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜுங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் ஆறு பேர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தருகிறது.

ஆந்திரா ரெயில் தீ விபத்தில் 23 பேர் பலி

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட,குறைந்தது 23 பேராவது இதுவரை இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. ஆந்திர பிரதேசம் மாநிலம் வழியாகச் சென்று கொண்டிருந்த நன்டெட்-பெங்களூரு எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தவர்களில் பலர் ரெயிலைச் சூழ்ந்த கரும்புகையினால் மூச்சடைப்பிற்கு உள்ளானதாக காவல் துறையினர் கூறுகிறார்கள். இந்தியாவில் ரெயில் விபத்துக்கள் ஏற்படுவது சகஜம் ( பழைய படம்) தற்போது அணைக்கப்பட்ட இந்தத் தீ எப்படி மூண்டது என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இன்று காலை இந்திய நேரப்படி 3.30 மணி அளவில் குளிரூட்டப்பட்ட (ஏ.சி) பெட்டியில் இந்தத் தீ மூண்ட போது அதில் 60க்கும் அதிகமான பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். மிகுந்த பனி மற்றும் பனிப்புகையினாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தவர்களின் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை . இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 மில்லியன் பயணிகளை ஏந்திச் செல்லும் சுமார் 9000 பயணிகள் ரயில்களை கொண்ட இந்திய அரசுக்கு சொந்தமான ரயில் சேவைகளில் விபத்துகள் நடப்பது சகஜமானதாகும். கடந்த வருடம் ஆந்திரத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் வரை இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்து : இரு பல்கலைக் கழக கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டனa

எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் இரண்டு பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு தீ வைத்ததாக அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அல்-அஸார் பல்கலைக்கழகத்தின் கெய்ரோ வளாகத்தில் மாணவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். கெய்ரோவின் தெற்கு மின்யா மற்றும் நைல் டெல்டா ஆகிய இடங்களில் வெள்ளியன்று பொலிஸார், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களுடன் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான முஹமட் மோர்சி அவர்கள் கடந்த ஜூலையில் இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல், அந்தக் கட்சி மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த அமைப்பு கடந்த புதன்கிழமை முதல் முறைப்படி ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா : ''ஒரு குழந்தை'' திட்டம் தளர்த்தப்படுகிறது

சீனாவில் '' ஒரு குழந்தை'' திட்டத்தை தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கணவன் மற்றும் மனைவி, இருவரில் ஒருவர் தமது குடும்பத்தில் தான் மாத்திரமே, ஒரே குழந்தையாக இருந்தால், அந்தத் தம்பதி இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அனுமதிக்கும் தீர்மானத்தை தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு நிறைவேற்றியுள்ளது. இந்த மாற்றத்துக்கான கொள்கை, நவம்பரில், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை அடுத்து அறிவிக்கப்பட்டிருந்தது. கடூழிய முகாம்கள் மூலமான மறுகல்வி வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான ஒரு பிரேரணைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மீண்டும் போலியோ பணியாளர் கொலை

பாகிஸ்தானின் வடமேற்கு ஹைபர் பக்துன்ஹாவா மாகாணத்தில் இரு ஆயுததாரிகள் ஒரு போலியோ பணியாளரைச் சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெஷாவார் நகரின் எல்லைப் பகுதியில் இருந்த தடுப்பு மருந்து நிலையத்தில், ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி நுழைந்தபோது, மேலும் ஒரு மருத்துவமனைப் பணியாளரும் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலை யார் நடத்தினரகள் என்று தெரியவில்லை, ஆனால், தலிபான்களே போலியோ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் சிறுவர்களை மலடாக்குவதாகவும், போலியோ பணியாளர்கள் உளவாளிகளாகச் செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். போலியோ தொற்றுகின்ற நாடாக இன்னமும் உலகில் உள்ள மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். அண்மைக்காலமாக அந்த நோய் தொற்றுவது அதிகரித்தும் உள்ளது.

திருகோணமலை: வெடிபொருள் வெடித்து சிறுவன் பலி, 2 சிறார்கள் காயம்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை- குச்சவெளி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 5 வயது சிறுவன் ஒருவன் பலியானதோடு மேலும் இரண்டு சிறார்கள் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார். குச்சவெளியில் செந்நூர் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறார்களும் உயிரிழந்த சிறுவனின் 10 வயது சகோதரனும் 3 வயது சகோதரியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது தமது வீடு அமைந்துள்ள காணிக்குள் இந்தச் சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடைத்த மர்ம பொருளொன்றில் அவர்கள் ஆணி அடித்து பார்த்துள்ளனர். அதன்போதே அந்தப் பொருள் வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறார்கள் மூவரும் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளான். மற்யை இருவரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக காவல்துறை கூறுகின்றது. அதேவேளை குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னொரு வெடிபொருள் வெடிப்புச் சம்பவத்தில் யானையொன்றும் காயமடைந்துள்ளது. வெடிபொருளொன்றை உட்கொள்ள முயன்றபோதே யானை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களால் யானை மீட்கப்பட்டு வனஜீவராசிகள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

'மாத்தளை புதைகுழி எலும்புகளை சீனாவுக்கு அனுப்பக் கூடாது

இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஜேவிபி கிளர்ச்சி ஒடுக்கப்பட்டபோது காணாமல்போனவர்களின் உடல்களே மாத்தளை புதைகுழியில் கிடைத்திருக்கலாம் என்று உறவினர்கள் நம்புகின்றனர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சீனா, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணுவதனால் அதன் பரிசோதனை முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று அவர் கூறினார். மாத்தளை புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன. சீனாவில் நடத்தப்படும் இரசாயன பரிசோதனை மூலம் நீதி கிடைக்காது என்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் கருதுவதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சீனா தவிர்ந்த ஜனநாயக மரபுகளைப் பேணுகின்ற வேறொரு நாட்டில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார். மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 154 மனித மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன. 1988-89 காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சி ஒடுக்கப்பட்டபோது காணாமல்போனவர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்

மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் தொடங்கின

இலங்கையின் வடமேற்கே வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அண்டிய மாந்தை சந்திக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில், சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் வைத்தியரத்ன தலைமையிலான சட்ட வைத்திய அதிகாரிகள், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை மாணவர்கள், உடற்கூறியல் நிபுணர், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பொலிசாரின் உதவியோடு இந்தப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். முதற்கட்டமாக, மனித உடல் எச்சங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நிலத்தைத் தோண்டும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றன. எனினும் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படாத போதிலும், மேலும் மனித உடல் எச்சங்கள் அவ்விடத்தில் இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. புதைகுழியை தோண்டும் பணிகள் நாளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் அதியுயர் பாதுகாப்பு பிரதேசம் முன்னர் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்திலேயே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமராத காரணத்தினால் இநதப் பகுதி பற்றைக் காடாகக் காணப்படுகின்றது. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித உடல் எச்சங்களுக்கு உரியவர்கள் யார், அவர்கள் எப்படி- யாரால் இங்கு புதைக்கப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கையும் அதையொட்டிய விசாரணைகளும் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தண்ணீருக்கு பதில் பெட்ரோல் வைத்தார்கள்”: தமிழ் பிரபாகரன்

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல்ரீதியில் துன்புறுத்தியப்பட்டதாக தெரிவித்தார்