Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, December 27, 2013

எஸ்.ஏ.ஆர்-401 என்ற இயந்திர மனிதன்

அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு வேலை செய்யும் வகையில் ரஷியா 2014ஆம் ஆண்டு இயந்திர மனிதனை அனுப்பி விடும். ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவின் விண்வெளி வீரர் பயற்சித் தளத்தில் எஸ்.ஏ.ஆர்-401 என்ற இயந்திர மனிதன் காட்சிக்கு வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அமெரிக்க நாசா விண்வெளி மையத்தின் இயந்திர மனிதன்களுடன் இணைந்து அது வேலை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
சந்திரன் மண்டலத்தில், காற்று மற்றும் நீர் குறைவாக இருப்பாதல், தாவரங்கள் வளர்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு சந்திரனில் காய்கறிகள் போன்ற பல தரவரங்களைப் பயிரிடப் போவதாக, அமெரிக்க நாசா விண்வெளி மையம் அண்மையில் அறிவித்தது. மனிதர் வரலாற்றில் இத்தகைய முயற்சி இதுவே முதல்முறை என்பது குறி்ப்பிடத்தக்கது. தாவரங்கள் சந்திரனில் வளர்ப்பது வெற்றியடைந்தால், மனிதர் அங்கு பல பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக வாழலாம் என கருதப்படுகிறது.

மத்திய ஆபிரிக்க வன்முறைகளில் 40 பேர் பலி

மத்திய ஆபிரிக்காவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நாற்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதி காக்கும் படையினர் மீது கிறிஸ்தவ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் ஆறு அமைதி காக்கும் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆபிரிக்க ஒன்றிய மற்றும் பிரான்ஸ் படையினர் மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மத்திய ஆபிரிக்காவில் கிறிஸ்தவ முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த 4000 படையினரும், பிரான்ஸைச் சேர்ந்த 1600 படையினரும் மத்திய ஆபிரிக்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இஸ்ரேல் மற்றம் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ள உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலிய ஜனாதிபதி சிமோன் பெரஸ் மற்றும் பலஸ்தீன தலைவர் முஹமட் அப்பாஸ் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். விவசாயம், சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில் வாய்ப்பு ஆகிய துறைகளில் குறித்த நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இஸ்ரேலிய ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

இலங்கையின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்ய US நடவடிக்கை: நிஷாதேசாய் பிஸ்வால் இலங்கை செல்வார்:

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை செல்லவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொட்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அமெரிக்க துணை செயலாளராக நியமனம். அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்குழு அனுமதியளித்ததை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அந்நாட்டின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க துணைச் செயலாளராக தேசாய் பிஸ்வால் என்பவரைநியமிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஜுலை மாதம்பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரை தொடர்பாக அந்நாட்டுசெனட் சபையின் வெளியுறவுக் குழுவில்விவாதிக்கப்பட்டது. விவாதத்துக்கு பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரதுநியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அவர், அமெரிக்க துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுக! மன்மோகனுக்கு வைகோ தொலைநகலில் கடிதம் -

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழகச்செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுக! அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, வணக்கம். சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி பிள்ளை ஆகியோருடன், மகா தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று, புனித அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, நேற்று (25.12.2013) பகல் 1.30 மணி அளவில், இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். மூவரையும் கைது செய்த இராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரனையும், பசுபதி பிள்ளை அவர்களையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர். செய்தியாளர்கள், உலகம் முழுமையும் பயணிப்பதற்கும், மக்களோடு கலந்து உரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால், இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும், செய்தியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை; உயிர் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும். சண்டே டைம்Þ ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கே, அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவர்கள், இக்கூற்றை உறுதிப்படுத்தி உள்ளார். எனவே, மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையில் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன். தாங்கள் உடனடியா நமது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி, தங்கள் அன்புள்ள, (வைகோ)

இலங்கை அதிகாரி தகவல் : கைது செய்யப்பட்ட தமிழ் பிரபாகரன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவாரா?

இலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக நிருபர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருவதாக அவரை கைது செய்ய உத்தரவிட்ட ராணுவ அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி முடித்த பின் அவர் அந்நாட்டின் குடியமர்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த மகா. தமிழ் பிரபாகரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேமராவை ஆராய்ந்த போது, அதில் அவர் ராணுவ முகாம்களை மட்டும் குறிப்பாக படம்பிடித்துள்ளது தெரியவந்தது. சுற்றுலா பயணியான அவர் ஏன் ராணுவ முகாம்களை படம் பிடிக்கவேண்டும்? என்று ரோஹன கேள்வி எழுப்பினார். அவர் கைது செய்தப்பட்டது குறித்து இந்திய தூதரகத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பெரும்பாலும் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக அதிகார்ப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா: சென்னையில் நேரடி ஒளிபரப்பு

டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. டெல்லியில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவை சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆம்ஆத்மி கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோடம்பாக்கம் பிரதாப் பிளாசாவில் உள்ள அரங்கில் பதவி ஏற்பு விழா நேடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கிய ஆய்வுக் கப்பல்

அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருக்கும் ரஷ்ய ஆய்வுக் கப்பல் செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மேனியாவின் தலைநகர் ஹோபார்ட்டிலிருந்து சுமார் 1,500 கடல் மைல்கள் தெற்கேயிருந்து கடுமையான காற்றால் கொண்டு வரப்பட்ட தடிமனான ஐஸ் கட்டிகளால், ரஷ்ய ஆய்வுக் கப்பலான, 'அக்கெடெமிக் ஷோக்கால்ஸ்க்கி' , சிக்குண்டிருக்கிறது. 'போதிய உணவிருக்கிறது, ஆபத்தில்லை ஆனாலும் , அந்தக் கப்பலில் போதிய உணவு இருப்பதால், குழுவினருக்கு எந்தவித உடனடி ஆபத்தும் இல்லை என்று குழுவின் தலைவர்கள் க்ரிஸ் டர்னி மற்றும் க்ரிஸ் போக்வில் ஆகியோர் கூறினார்கள். பனியால் சிக்குண்டிருக்கும் நிலையிலும், கப்பலில் உள்ள ஆய்வுக்குழுவினர், கடல் வெப்பநிலையைப் பதிவு செய்வது, கடல் நீரில் உப்புத்தன்மையை அளப்பது போன்ற ஆய்வுகளைத் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடல் வழி ஆய்வாளர் டக்ளஸ் மாசன் பயணித்த அதே வழியில் பயணித்து, இந்த நூறாண்டுகளில் சுற்றுச்சூழலின் பல அம்சங்கள் எந்த அளவுக்கு மாறியிருக்கின்றன என்பதை ஆராய்வதை தங்களின் ஆராய்ச்சி நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம் : ஸ்டாலின் திட்டவட்டம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , நாகர்க்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’ திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம்’’ தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டனி தொடரும் திட்டவட்டமாக கூறினார். அவர் மேலும், தேமுதிகவுடன் கூட்டணியா என்பது பற்றி கலைஞர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

ஆசஷ் 4–வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 164/9

மெல்போர்ன், டிச. 27– ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் 4–வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது . முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சில் திணறியது. தொடக்க வீரர்கள் கேப்டன் கூக் 27 ரன்னிலும், கார்பெர்ரி 38 ரன்னிலும் அவுட் ஆனார். அதன்பின் ஜோரூட் (24), பெல் (27), ஸ்டோக்ஸ் (14), போர்ஸ்போ (10) ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 226 ரன் எடுத்து இருந்தது. பீட்டர்சன் 67 ரன்னுடனும், பிரிஸ்னன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டத்தின் 2–வது ஓவரில் முதல் பந்தில் பிரிஸ்னன் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஜான்சன் கைப்பற்றினார். அதன்பின் ஜான்சன் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன. பீட்டர்சன் (71 ரன்), ஸ்டூவார்ட் பிராட் (11) ஆகய இருவரையும் வெளியேற்றினார். கடைசி விக்கெட்டை (பனேசர்) லயன் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 255 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. ஜான்சன் 5 விக்கெட் கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா அணி விளையாடியது. தொடக்க வீரர் வார்னர் 9 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும், கேப்டன் கிளார்க் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன் இருந்தது. அதன்பின் ரோஜர்ஸ்– ஸ்டீவன் சுமித் நிதானத்துடன் விளையாடியது. சுமித் (19) ரன் ரோஜர்ஸ் (61) பெய்லி (0) ஜான்சன் 3 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. ஹடின் 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருக்கிறார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் தாமதம்

டர்பன், டிச. 27- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் சீக்கிரமே முடித்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முரளி விஜய் 91 ரன்களுடனும், புஜாரா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். முரளிவிஜய் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலையிலேயே மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேகமூட்டம் இருந்ததால் போதிய வெளிச்சமும் இல்லை. ஏராளமான ரசிகர்கள் குடை பிடித்தபடி காத்திருந்தனர். ஆனால் வானிலை சீராக இல்லாததால் முன்கூட்டியே அதாவது உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. பின்னர் மழை சற்று குறைய ஆரம்பித்து வெளிச்சம் வரத் தொடங்கியது. எனவே, உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முசபர் நகர் நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் மரணம்'

செப்டம்பர் மாதம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த, இந்து- முஸ்லிம் கலவரங்களை அடுத்து, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 34 குழந்தைகளாவது இறந்திருப்பார்கள் என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் இறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் குளிரால் இறந்தார்கள் என்று ஊடகங்கள் கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். குழந்தைகள் நிமோனியாக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் இறந்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செப்டம்பர் மாதம் நடந்த கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர். கடந்த பத்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான கலவரம் இது தான் என்று கருதப்படுகின்றது. இந்தக் கலவரங்களில் சுமார் 50,000 பேர், அதில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள், வீடற்றவர்களாயினர். குறைந்தது 85 பேர் காயமடைந்தனர்.நிவாரண முகாம்களில் நிலை ( பழைய படம்) ஒரு இளம் பெண் துன்புறுத்தப்பட்டதை எதிர்த்த 3 ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவம் தூண்டிய இந்த கலவரத்தினால் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிவாரண முகாம்களில் 12 வயதிற்கு உட்பட்ட 34 குழந்தைகள் இறந்துள்ளதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தையும், நிமோனியாவால் 4 குழந்தைகளும், வயிற்றுப்போக்கால் மற்றும் சில குழந்தைகளும் இறந்துள்ளனர் என்று உத்தரப் பிரதேசத்தின் உயர் அதிகாரி ஏ.கே.குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர், முகாமை விட்டு வெளியே சிகிச்சைக்காக அரசாங்க மருத்துமனைகளுக்கோ அல்லது சிகிச்சைக்காக பெற்றோர்களினால் வேறு இடத்திற்கோ கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனத் தலைமையமைச்சரின் சந்திப்பு

2013-12-19
24வது சீன-அமெரிக்க வணிக மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சீனாவுக்கு வந்துள்ள அமெரிக்க வணிக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர், வர்த்தகப் பிரதிநிதி மைக்கேல் ஃபுரோமான், வேளாண் துறை அமைச்சர் தாமஸ் வில்சாக் ஆகியோரை சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 19ஆம் நாள் பிற்பகல் பெய்சிங்கில் சந்தித்துரையாடினார்.

சீன-அமெரிக்கப் போர்க் கப்பல்களின் சந்திப்பு பற்றிய தகவல்

சீன மற்றும் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் தென் சீனக் கடலில் சந்தித்தது குறித்து, சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திப் பணியகம் குறிப்பிடுகையில், சீனப் போர்க் கப்பல் இயக்க விதிமுறைகளுக்கிணங்க செயல்பட்டு, உரிய முறையில் சமாளித்துள்ளது. அத்துடன், இரு நாடுகளின் பாதுகாப்பு துறைகள் இயல்பான வழிமுறைகள் மூலம் தொடர்புடைய தகவல்களை எடுத்துக் கூறி, பயன்தரும் முறையில் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளன என்று இப்பணியகம் தெரிவித்தது.
மேலும், சில செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தொடர்புடைய செய்திகள் உண்மைக்குப் பொருந்தியதாக இல்லை என்றும் இச்செய்திப் பணியகம் தெரிவித்தது.