Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, October 28, 2013

இஸ்ரோ தலைவர்: மற்ற நாடுகளோடு விண்வெளிப் போட்டி இல்லை

பெங்களூரு:மற்ற எந்த நாடுகளுடனும் இந்தியா விண்வெளிப் போட்டியிடவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், (வரும் மாதம்) நவம்பர் 5-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

பீகார் மக்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் துரோகம்:பிரமாண்ட கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கு

பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதல்வராகவும், பா.ஜ.,வின், சுஷில் குமார் மோடி, துணை முதல்வராகவும், பதவி வகித்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, பா.ஜ.,வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத, நிதிஷ் குமார், பா.ஜ.,வுடனான, கூட்டணியை முறித்தார். இதனால், சுஷில் குமார் மோடி உள்ளிட்ட, நிதிஷ் குமார் அமைச்சரவையில் அங்கம் வகித்த, பா.ஜ.,வினர், ராஜினாமா செய்தனர். நரேந்திர மோடியை ஆதரித்தால், பீகாரில், தங்களுக்கு சிறுபான்மையினரின் ஓட்டு கிடைக்காது என்பதற்காக, நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்ததாக, பீகார் மாநில, பா.ஜ.,வினர் அதிருப்தி தெரிவித்தனர்.நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுப்பதற்காக காத்திருந்தனர். இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, பாட்னாவில், காந்தி மைதானத்தில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில், நேற்று கலந்து கொண்டார்.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, 1 லட்சம் பேர், வந்திருந்ததாக, பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

கூட்டணி பற்றி பேச வரவில்லை: விஜயகாந்த்

இலங்கையில், நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. நமது உணர்வுகளை மீறி இந்தியா பங்கேற்குமேயானால், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்தது போல் ஆகிவிடும். இலங்கை தமிழர்களை காக்க கடந்த, 2009ல், லோக்சபா தேர்தலை புறக்கணிக்கும்படி, அரசியல் கட்சிகளை கேட்டு கொண்டேன். ஆனால், இதை ஏற்காத கட்சிகள், இன்று காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும்படி கூறுகின்றன. நான், டில்லியில் யாருடனும் கூட்டணி பேசுவதற்காக வரவில்லை. தமிழ் மக்களுக்கு, ஆதரவாக குரல் கொடுக்கதான் வந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்

புலம்பெயர் தேசங்களில் சிங்களம் புதிய வியூகம் - தமிழ் செல்பேசி நிறுவனத்தைக் குறிவைக்கும் கே.பி குழு!

புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழர்களைக் கண்காணிப்பதற்கும், தாயகத்தில் உள்ள உறவுகளுடன் அவர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கும் ஏதுவாக ஐரோப்பாவில் இயங்கும் முன்னணி தமிழ் செல்பேசி நிறுவனம் ஒன்றைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் கே.பி குழுவினரை சிங்களம் களமிறக்கிவிட்டுள்ளது. ஐரோப்பாவில் இயங்கும் குறிப்பிட்ட செல்பேசி நிறுவனத்தின் உரிமையாளர்களை அணுகியிருக்கும் கே.பியின் கையாட்கள், அந் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செல்பேசி அட்டைகளைப் பயன்படுத்தி தாயகத்தில் உள்ள தமது உறவுகளுடனான தொலைபேசி உரையாடல்களை பெருமளவான புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் மேற்கொண்டு வரும் நிலையில் அந் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் ஊடாக அதன் வசமுள்ள புலம்பெயர்வாழ் தமிழர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெறுவதற்கும், அவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதற்கும் சிங்களம் திட்டமிட்டிருப்பதாக தெரிய வருகின்றது. அத்துடன் வெளிநாடுகளில் கே.பியின் பினாமிகளின் வசமும், ராஜபக்ச சகோதரர்களின் பினாமிகளின் வசமும் இருக்கும் பணத்தை சட்டபூர்வமான முறையில் கொழும்பிற்கு எடுப்பதற்கான பணப் பரிவர்த்தனைப் பாதை ஒன்றை திறப்பதற்கும் இந் நிறுவனத்தை சிங்களம் பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான இடைத்தரகர்களாக கடந்த காலங்களில் யேர்மனி, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு சென்று கே.பியை சந்தித்த ‘மெத்தப்படித்த கனவான்கள்’ சிலரும் உள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சனல் 4 க்கு அனுமதி மறுப்பு

கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெருமளவில் வெளியிட்டு முடிக்கப்பட்டுள்ளன. எனினும் மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க கொழும்புக்கு வருவதற்கு விண்ணப்பித்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கமெரா கலைஞருக்கு மட்டுமே இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்தது. ஊடகங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்தின் டுவிட்டாரில் வழங்கியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ள சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோனத்தன் மில்லர் இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்று வினவியுள்ளார். தமது விண்ணப்பம் இன்னும் நிராகரிக்கப்படவில்லை என்றாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஒரே பிரித்தானிய ஊடக வலையமைப்பு தமது வலைமைப்பே என்று சனல் 4 தொலைக்காட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

மாவீரர்களுக்கு கல்லறை கட்டக் கோரினால் கைது; கோத்தபாய

உயிரோடு வாழும் எந்தவொரு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளியும் முப்பதாண்டுப் போரில் இறந்தவர்கள் நினைவாக கல்லறைகளை அமைக்கக் கோரினால், கைது செய்யப்படுவார் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவீரர் துயிலுமில்லங்களைப் புனரமைக்க சாவகச்சேரிப் பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, “விடுதலைப் புலிகள், உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம். அவர்கள் சட்டபூர்வமாக முன்னிலைப்படுத்தப்படும் இடத்தில் இல்லை. அவர்கள் நினைவாக போர் நினைவுச் சின்னங்களை அமைக்க எவருக்கும் உரிமை இல்லை.யாரேனும் அதைச் செய்வார்களேயானால், கைது செய்யப்படுவர். இளைஞர்களுக்குத் தவறாக வழிகாட்ட முற்படும் இவர்கள், ஏனைய முன்னாள் விடுதலைப் புலிகளைப் போலவே, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர். வடக்கு மாகாணம் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பெறவே முடியாது. அது நடைமுறைச்சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணங்களுக்கு காணி அதிகாரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில்,வடக்கு மாகாண முதல்வரும், மாகாணசபையும், காணி அதிகாரங்களைப் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர வேண்டும். ஏனைய மாகாணங்களுக்கு தனியான காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், எதற்காக வடக்கு மாகாணசபைக்கு மட்டும் தனியான சிறப்பு காவல்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும்? வடக்கு மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபரே கூறியுள்ளார். காவல்துறை அதிகாரங்களில் எதற்கு வடக்கு மாகாணசபைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? சட்டம் ஒழுங்கு, காவல்துறையை கையாளும் பொறுப்பு மத்திய அரசுக்கும், சிறிலங்கா அதிபருக்குமே உள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்கும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் வடக்கு மாகாணசபை காவல்துறைக்கு உதவலாம். ஆனால், வடக்கு மாகாணசபைக்குத் தனியான காவல்துறை தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

சிறிலங்கா பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் -அமெரிக்கா

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தவாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார். ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. அமெரிக்காவின் தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது. எனினும், அமெரிக்காவின் தடையை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக ஈரானிய மசகு எண்ணெயை சிறிலங்கா வாங்குவதாக, அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்தே, அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபரிடம் அமெரிக்கத் தூதுவர் சிசன் கையளித்த சிறப்புச் செய்தியில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா உடனடியாக நிறுத்தத் தவறினால், பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இராஜதந்திர மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. -