Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 30, 2014

இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் துறையில் பணி

இந்திய ராணுவத்தில் டெக்னிகல் பிரிவில் குறுகிய கால நிலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண் என்ற இரு பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 119 (ஆண்கள் -100, பெண்கள் -19) பணியிடங்களுக்கான துறைகள்: சிவில், ஆர்க்கிடெக்சர், மெக்கானிகல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், ஏரோனாடிக்ஸ், ஏவியேஷன், மெட்டலர்ஜி, எக்ஸ்ப்ளோசிவ்ஸ், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்யூனிகேஷன், புட் டெக்னாலஜி, ஐ.டி., வயது: 20 - 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.10.1987 முதல் 01.10.1994க்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: தேர்ந்தெடுக்கும் பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உடற்தகுதி: உயரம் ஆண்கள் குறைந்த பட்ச உயரம் 157.5 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி., நேர்காணல் மற்றும் குரூப் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2014 மேலும் முழைமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் டிரெய்னி பணி

பெங்களூரில் செயல்பட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிகல் பிரிவுக்கான டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 01. பிட்டர் - 12 02. மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி - 05 03. எலக்ட்ரீசியன் - 08. 04. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 08 வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 20 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2014 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Principal BMR Training institute , S.V.Road Baiyappanhalli Depot, Bangalore 560038 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பெல் நிறுவனத்தில் பொறியியாளர் பணி

நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்., எனப்படும் பெல் நிறுவனத்தில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு மெக்கானிக்கல் பிரிவில் காலியாக உள்ள பொறியாளர்களை பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலி கம்யூனிகேஷன், மெக்கானிகல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதல் வகுப்பில் பி.இ., அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஏற்கெனவே பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ்ஷிப் முடித்தவர்களும், இத்துறையில் 6 மாத பணியனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.bel-india.com/sites/default/files/Advertisement-ContractEngineer-Mil.Com.SBU.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கான எஸ்.எஸ்.சி பொது எழுத்துத் தேர்வு

மத்திய அரசு தொடர்புடைய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி. எனற அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து விவரங்கள் கீழ்கண்டவாறு: சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, வெளியுறவுத்துறை அமைச்சகம், சி.பி.டி.டி., சி.பி.இ.சி., டைரக்டரேட் ஆப் என்போர்ஸ்மெண்ட் அண்டு ரெவின்யூ, அஞ்சல் துறை, சென்ட்ரல் பீரோ ஆப் நர்காடிக்ஸ் உள்ளிட்ட மத்திய அரசுத் துறை பலவற்றில் உள்ள அப்பர் டிவிஷன் கிளார்க், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் மற்றும் அஸிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்கான தேர்வை எஸ்.எஸ்.சி அறிவித்துள்ளது. வயது வரம்பு: குறைந்தபட்சம் 18ஆகவும், அதிகபட்ச வயது விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 26 அல்லது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் வெவ்வோறான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்த பட்ச கல்வித்தகுதி பட்டப் படிப்பு ஆகும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்கும் முறை: http://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் உரிய மண்டல அலுவலக்த்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீஸ் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் அனுப்பவ வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu-600006 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/CGLE-2014%20Notice.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்….

ஏழு கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் கிட்டதட்ட ஒருகோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய புள்ளி விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலையை எதிர்பார்த்து இவ்வளவு பேர் காத்திருப்பதற்கு காரணங்கள் என்ன? காத்திருக்கும் அவ்வளவு பேருக்கும் அரசால் வேலையை உருவாக்கித் தர முடியுமா? ஏன் இவர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ? அரசு வேலைக்காக ஓரிரு ஆண்டுகள் காத்திருக்கலாம். ஆனால் ஓரேயடியாக 52 வயது வரையெல்லாம் காத்திருக்கிறார்கள். திருவில்லிபுத்தூரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனது 52ஆது வயது வயதில், சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த வார்டு உதவி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 1992-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த இவரின் கனவு நனவாகி இருக்கிறது. இவரைப்போல ஒன்றல்ல. இரண்டல்ல. 90 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்களில் 45 லட்சம் பேர் பெண்கள். இது தவிர, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 31 லட்சம் பேர். பிளஸ் 2 முடித்தவர்கள் 22 லட்சத்து 66 ஆயிரம் பேர். இளநிலை கலை முடித்தவர்கள் 3 லட்சத்து 38 ஆயிரம். இளநிலை அறிவியல் முடித்தவர்கள் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர். பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர். பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர். இதில், பொறியியல் பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்தோருக்கு ஜூன் 2001ம் ஆண்டு வரையும், சிவில் என்ஜினியரிங் முடித்தோருக்கு மே 2004 வரையும், மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தோருக்கு 1999 வரையும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இன்றைக்கும் அதிகரித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசு வேலை கிடைக்க சாத்தியமில்லை என்றே தெரிகிறது. பல்வேறு அரசுத் துறைகள் தங்களுக்குத் தேவையானவர்களை தேர்வாணைய போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கின்றன. அதனால் வேலைவாய்ப்பகத்தின் பணி முன்பைவிட தற்போது குறைந்தே இருக்கிறது. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பலர், அந்தப் பணிக்கு கூடுதலான கல்வித் தகுதியோடு இருக்கின்றனர். காவல்துறை, தீயணைப்புத்துறை போன்றவற்றுக்கான சீருடைப் பணியாளர் தேர்வு, ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் போன்றவற்றிலும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது. இவர்களில் பொறியியல் பட்டதாரிகளும் அடக்கம். வேலைவாய்ப்பு உள்ளதா..? 12ம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் பலரும் பொறியியல் படிப்புக்கு சென்றுவிடுவதால், பிற துறைகளில் திறமையுள்ளவர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்ஜினியரிங் தவிர, அனிமேஷன், பிசியோதெரபி, கடல் சார் படிப்புகள், சட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், மீடியா, சுற்றுலா மற்றும் பி.ஏ. பொருளியல், பி.எஸ்சி., பி.காம்., போன்ற பல்வேறு கலை அறிவியல் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள். ஆனாலும் அரசுப்பணி மீதான விருப்பமும், உறுதியும் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவ்வளவு பேருக்கும் வேலை என்ற வாய்ப்பை உருவாக்க முடியாத நிலையும் இருக்கிறது.
ஆண்டு தோறும் பொறியியல் படிப்பை படித்து முடிப்பவர்கள் மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களாக இருக்கிறார்கள். இத்தனை லட்சம் பேருக்கும் அரசால் ஆண்டுதோறும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமா? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கிறது? 1997ம் ஆண்டு தமிழகத்தில் 90ஆக இருந்த, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி 535 ஆக உயர்ந்திருக்கிறது. 2007ம் ஆண்டில், 277 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் இரண்டரை லட்சமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டேகால் லட்சமாக உள்ளது. இதில்10 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் தான் உண்மையான வேலைத் திறன் பெற்றுள்ளனர் என்கிறது ஆய்வு. மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்.20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் தனியார் நிறுவனங்கள் வேலைக்கான நேர்காணலை, வேலைவாய்ப்பகத்தில் நடத்ததுகின்றன. அப்போது 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 1,500 பணியிடங்கள் வரை நிரப்பப்புகின்றன. இதே போல் கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் முடித்து வெளிவரும் லட்சக்கணக்கானோரும் வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்தப்பட்டியலை சேர்த்தால் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும்.

2002 கலவரங்கள் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து தவறானது: பாஜக கண்டனம்

டெல்லி: 1984 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த கலவரங்கள் பற்றி ராகுல் தெரிவித்த கருத்துக்கு பாஜக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘1984ம் ஆண்டில் நடந்த கலவரத்தில் அரசு சம்பந்தப்படவில்லை. ஆனால், குஜராத் தில் 2002ல் நடந்த படுகொலையில் அரசே ஈடுபட்டது' எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக ‘விவரம் தெரியாமல் ராகுல் பேசுகிறார். 2002ல் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த குஜாரத் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு முயற்சிக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து பாஜக தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவமனையில் இருந்து தான் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு இடத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் 2002 குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால்,1984ஆம் ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித்தான் ராகுல் காந்தி சொல்கிறாரோ என தெரியவில்லை '' எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தகவல் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘காங்கிரசில் உள்ள அதிகார மையத்தின் காரணமாக, அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டார். இப்போது, அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று துதி பாடப்படுகிறது. ஆனால், மோடியின் வளர்ச்சி அதற்கு நேர்மாறானது. ஏழ்மையில் பிறந்து வளர்ந்த அவர், தனது கடின உழைப்பு, நிர்வாகத் திறமை போன்றவற்றால் பிரதமர் வேட்பாளர் அளவுக்கு உயர்ந்து வந்துள்ளார்'' என்றார்.

நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசும் மத்திய அமைச்சர் பிரபுல் படேல்

டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிதான் 2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்கு பொறுப்பு எனக் கூறியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி டைம்ஸ் நவ் செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி கேள்வி கேட்டபோதும், மோடிதான் குஜராத் கலவரத்துக்குப் பொறுப்பு என மீண்டும் மீண்டும் ராகுல் கூறினார். ராகுலின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், யாருடைய பேட்டி குறித்தும் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. எந்த ஒரு பிரச்சனைக்குமே இறுதித் தீர்வாக இருப்பது நீதித்துறைதான். அரசியலுக்கும் மேலானது நீதித்துறைதான். அப்படிப்பட்ட நீதித்துறை அளிக்கும் ஒரு தீர்ப்பை நாம் மதித்தாக வேண்டும். அதை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார். காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான பிரபுல்படேல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கல்வி குறித்து யுனெஸ்கோ எச்சரிக்கை

ஐநாவின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, உலகில் அனைத்து சிறார்களும் ஆரம்பப் பள்ளிக் கல்வியை பெறுவதற்கு இன்னமும் 70 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகும் என்று கூறியுள்ளது. ஆனால், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இதனை எட்டிவிட முடியும் என்று உலகத் தலைவர்கள் உறுதி எடுத்திருந்தனர். 5 கோடி 70 லட்சம் பிள்ளைகள் இன்னமும் பள்ளிக்கூடத்துக்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். வறியவர்களும், ஆப்பிரிக்க பெண் பிள்ளைகளும் கல்வி வசதியைப் பெற 2086 ஆம் ஆண்டாகிவிடும் என்றும் அது கூறியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் என்று இந்த அறிக்கையை எழுதிய பௌலின் ரோஸ் கூறியுள்ளார். ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் கணக்குப் போடும் திறன் கிடைக்கவில்லை என்று யுனெஸ்கோவின் அறிக்கை கூறுகிறது. மூன்றில் ஒரு பங்கு நாடுகளில், கால் பங்குக்கும் மேலான ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி தரப்படுவதில்லை என்றும் அது கூறியது. மிகவும் மோசமான நிலைமை நீடிக்கும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில், குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே படித்தல் மற்றும் கணிதம் ஆகிய இரு விஷயங்களின் அடிப்படையான அம்சங்கள் தெரிந்திருக்கின்றன என்று இஸ்லாமாபாதில் இருக்கும் அதேவேளை இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா மற்றும் தன்சானியா போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில், கல்வியை அடைவதில் முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை இந்த விடயத்தில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. 35 வருடமாக போரைச் சந்தித்து வருகின்ற ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பள்ளிக்கூடங்களை ஒருவாறாகத் திறக்கத் தொடங்கியுள்ளது. வறிய நாடுகளைப் பொறுத்தவரை அங்குள்ள கால்வாசி இளையவர்கள் கல்வி கிடைக்காமலேயே இருக்கிறார்கள்.

சீன நிலா உலாவி வாகனத்தில் கோளாறு

சீனா, கடந்த மாதம், நிலாவில் இறக்கிய உலாவி வாகனமான " ஜேட் ரேபிட்"டில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்று அரச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. நிலவின் சிக்கலான மேற்பரப்புச் சூழல் காரணமாக ஜேட் ரேபிட் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. 1976க்குப் பின் நிலவில் இறங்கிய முதல் விண்கலனான ஜேட் ரேபிட், சுமார் மூன்று மாதங்கள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த மாதம் முன்னதாக, சீனாவின் பீஜிங் வான் கட்டுப்பாட்டு மையம், இந்த விண்கலன் அதன் இயந்திரக் கையைக் கொண்டு, நிலவின் மேற்பரப்பை வெற்றிகரமாக ஆராய்ந்ததாகத் தெரிவித்திருந்தது. இந்த கலனை சரி செய்யும் முயற்சிகளை விஞ்ஞானிகள் எடுத்து வருவதாக ஷின்ஹுவா நிறுவனம் தெரிவித்தது. நிலா சூரியனின் ஒளியைப் பெறாத 14 நாட்களில் நிலவில் இரவு நீடிக்கும் வேளையில், சூரிய ஒளித் தகடுகளின் மூலம் மின்சக்தியை உருவாக்கி இயங்கும் ஜேட் ரேபிட் கலன், இயங்காமல் போகும் என்று அந்தச் செய்திகள் கூறின.

சர்ச்சையில் சிக்கிய சாப்பாட்டுக்கடை

பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாதில் ஒரு உணவகத்தை திறந்தார் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு சமயல் கலைஞர். வியாபாரம் நடந்ததோ இல்லையோ பிரச்சினைகள் மட்டும் உடனடியாக எழுந்தன. முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் கூறி, பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கு உணவு வழங்க ‘ல மெசோ(ன்)’ உணவகத்தில் சமயலுக்கு பொறுப்பானவர் மறுத்துவிட்டார்.
அந்த உணவகத்தில் மதுவும், ஹலால் முறைப்படி தயாரிக்கப்படாத உணவும் அங்கு விற்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த உணவகம் கூறுகிறது. ஆனால் ஆச்சரியமளிக்காத வகையில், பல பாகிஸ்தானியர்கள் இது குறித்து கோபமடைந்தனர். உடனடியாக டிவிட்டரில் பெரிய கருத்து மோதல், கூச்சல் குழப்பங்கள் கண்டனங்கள் ஆகியவை மேலோங்கின.முடிவில் மாற்றமில்லை"இஸ்லாமாபாதில் திறக்கப்பட்டுள்ள ஒரு உணவகத்தில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதியில்லை என்று கூறுவது சரியல்ல என்று கூறி உள்ளூர் பத்திரிக்கையாளர் டிவிட்டரில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். நிறவெறிக் கொள்கையை அந்த உணவகம் முன்னெடுக்கிறது என்று அந்தச் செய்தியாளர் டிவிட்டரில் கூற பிரச்சினை மேலும் சிக்கலானது. அந்த உணவகத்தின் முடிவானது நகைப்புக்குரிய, முட்டாள்தனமான, நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்று அல்மைடா எனும் அந்தச் செய்தியாளர் தெரிவித்தார். ஆனாலும் அந்த உணவகத்தின் உரிமையாளரோ தமது கருத்தில் எந்த மாறுதல் இல்லை என்றும், அந்த உணவகம் ஒரு கிளப்பாக மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உணவு வழக்கங்களுக்கு ஏற்ற வகையில், தமது சாப்பாட்டுக்கடையில் உணவு இல்லை என்பதாலேயே அந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறுகிறார். அடுத்த சில நாட்களில் இந்த உணவகம் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறும் ஒரு கிளப்பாக மாறவுள்ள நிலையில் அது பிரச்சினைகளைக் கடந்து வெற்றிகரமாக நடக்குமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்விக்குறி.

"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை"

யுனெஸ்கோ அமைப்பு உலகளவில் பல நாடுகளில் தொடக்கக் கல்வியின் நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது. தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் இலங்கையில் கல்வியின் நிலை மேம்பட்டுள்ளது என்று அரசு அவ்வப்போது தெரிவித்து வரும் சூழலில், மலையகப் பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வியின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று பல்தரப்பினர் கூறுகின்றனர். நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் வசிக்க்கும் மலையகப் பகுதிகளில் கல்வியின் தரம் ஐம்பது, அறுபது வருடங்கள் பின்தங்கியுள்ளது என்று கூறுகிறார், மலையகத்தின் சமூக விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவரும் ஓய்வுபெற்ற உயரதிகாரியுமான தர்மலிங்கம் மனோகரன்.
பள்ளிகள் உண்டு ஆனால் தரமில்லை'மலையகப் பகுதிகளில் 800க்கும் மேலான பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், ஐந்து அல்லது ஆறு பள்ளிக்கூடங்களே தரம் வாய்ந்ததாக உள்ளன என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தேசிய மட்டத்தில் சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக மலையகப்பகுதியில் இது முற்றாக இல்லை எனும் சூழலே பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.மலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பல வளங்கள் வழங்கப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டும் அவர், தோட்டப்பகுதிகளில் ஆசிரியர் நியமனங்கள் தொழிலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம் என்றும் மேலும் கூறுகிறார். பெருந்தோட்டத்துறையைச் சார்ந்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் கூட இதில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

கருணா மற்றும் பிள்ளையானை விசாரிக்கக் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கூறகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த பிரேரணையொன்றை காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான எம். எச். ஏ . நசீர் மற்றும் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி ஆகியோர் முன்வைத்தனர். காத்தான்குடி பிரதேசத்திலிருந்து காணாமல் போன முஸ்லிம்களை மையப்படுத்தி, அவரால் முன் வைக்கப்பட்ட அந்த பிரேரணையில், கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இடங்களை அடையாளங்கண்டு, புதை குழிகளை தோண்டுதல், மனித எச்சங்கள் அங்கு காணப்பட்டால் அவற்றை அடையாளம் கண்டு, சமய ஆசாரங்களின் அடிப்படையில் மரண சடங்குகளை மேற்கொள்ளல், கடத்தப்பட்டு கொல்லப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடுகளை வழங்குதல் மற்றும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரை அடையாளங்கண்டு, விசாரணைக்கு உட்படுத்தவும், உரிய தண்டனைகளை வழங்கவும் கோருதல் போன்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன. தங்களால் நகர சபையில் முன் வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக ஏ. எல். எம் . சபில் நழீமி குறிப்பிடுகையில், ''முஸ்லிம்கள் காணாமல் போன சம்பவங்களுடன் விடுதலைப்புலிகளே தொடர்புபட்டிருந்தார்கள். அவ்வேளை இவர்கள் இருவரும் அந்த அமைப்பில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் அது பற்றிய தகவல்களை ஆணைக்குழுவினால் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியும் என முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்'' எனக் கூறினார். தங்களால் முன் வைக்கப்பட்ட இந்த பிரேரணை சபையில் நிராகரிக்கப்பட்டாலும் ஆணைக்குழுவிடம் தங்களின் யோசனைகளும் கருத்துக்களும் நேரடியாக முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ். எச். அஸ்பர், தமிழோசையுடன் பேசுகையில், குறித்த அரசியல்வாதிகளின் பெயரை, சக உறுப்பினர் தனது பிரேரணையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்றும் உரையாற்றும் போது மாத்திரந்தான் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் கூறுகின்றார். தமது பிரதேசத்திலிருந்து காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இவர்களால் முன் வைக்கப்பட்ட பிரேரணை அரசியல் நோக்கம் கொண்டது எனக் கருதி சபையால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார். இவை குறித்து துணை அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் கருத்தை எம்மால் உடனடியாகப் பெறமுடியவில்லை.

பன்குவியில் இடம் பெறும் இனக் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஜேர்மன் முனைய வேண்டும்-

மத்திய ஆபிரிக்கக் குடியரசின் தலை நகரான பன்குவியில் (Banqui) இடம் பெறும் இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜேர்மன் நாடும் அங்குள்ள துருப்பினரைப் பலப்படுத்தும் வகையில் நேரடியாகச் செயற்பட வேண்டுமென, ஜேர்மனின் பெண் பாதுகாப்புச் செயலர், உர்சுலா (Ursula) கூறியுள்ளார். தினமும் இடம்பெறும் கொலைகளையும், வன்முறைகளையும் தொடர்ந்து சகித்த வண்ணம் இருப்பது தவறு என்றும், மனிதாபிமான அடிப்படையில் அவற்றைத் தடுக்க நேரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய ஆபிரிக்காவில் கடமையிலிருக்கும் பிரெஞ்சுப் படையினருக்குப் பக்கபலமாக ஜேர்மன் துருப்பினர் தரையிறக்கப்பட வேண்டுமென்கிறார். ஏற்கனவே நூறு ஜேர்மன் துருப்பினர் மாலி (Mali) தேசப்படையினருக்குப் பயிற்சி அளிக்குமுகமாக அங்கு செயலில் அமர்த்தப்பட்டுள்ளனரென்றும், அவர்களைப் பலப்படுத்த வேண்டிய தேவை பற்றித் தற்போது பேசப்படுவதாகவும் கூறினார். ஜரோப்பிய ஒன்றியம் அங்கு வருகின்ற February மாதத்தில் 600 துருப்பினரை அனுப்ப இருப்பதாகவும், பிரெஞ்சு (French) அரசாங்கம் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஜேர்மன் துருப்பினரையும் அங்கு அனுப்புவதற்கான நிலையை ஏற்படுத்துதல் அவசியமென்றும் கூறியுள்ளார். இரண்டாம் உலக மகாயுத்த முடிவிற்குப் பின்னான காலப்பகுதிகளில், ஜேர்மன் அரசு உலகில் எங்கும் எக்காரணம் கொண்டும் துருப்பினரைப் போருக்குப் பயன்படுத்தக் கூடாதெனும் அமுலில் இருந்த சட்டம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் சக்தியிழக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும், ஜேர்மன் போரில் கலந்துகொள்ளாத கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தமையைக் கருத்திற் கொண்ட ஒரு சில ஆளும் கட்சிப் பாராளுமன்ற அங்கத்தவர்களும், தற்போதைய கூட்டாட்சியில் இடம் பெறும் SPD கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் பலம் வாய்ந்த ஜரோப்பாவைக் கட்டியெழுப்பப் படையினரின் கூட்டு உழைப்பு முக்கியமெனத் தான் கருதுவதாகப் பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். ஜேர்மன் படையினர் தரை இறக்கப் போவதில்லை என ஏற்கனவே கூறிய முதல் மந்திரி அங்கலா மேக்கல் மெளனமாக உள்ளார். அம்மெளனத்தின் அதிகார அர்த்தம் புரியவில்லையெனப் பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி-

ஜோன் கெரியின் பேர்ளின் விஜயம் ஜேர்மனின் கோபாவேசத்தை தணிக்குமா?

வருகின்ற வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி (John Kerry) பேர்லின் செல்கிறார். இவர் அமெரிக்க ஜரோப்பிய வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதோடு, 31.01 லிருந்து 2 February வரை முன்ஷனில் (München) இடம் பெறவுள்ள பாதுகாப்பு உச்சி மாநாட்டிலும் (Security Conference) கலந்து கொள்வார்.
ஜேர்மன் முதல் மந்திரியின் தொலை பேசி உரையாடல் ஒட்டுக்கேட்ட சம்பவத்தில் குழப்பம் அடைந்திருக்கும் இரு நாட்டு உறவையும் மீண்டும் பலப் படுத்த முயல்வாரென அரசியல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவால் இழைக்கப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட செயல், நம்பிக்கைத் துரோகம் வாய்ந்ததெனவும், உளவு பார்ப்பதில்லையெனும் ஒப்பந்தம் ((No-Spy-Agreement) கைச்சாத்திடப்படும் வரையில் சமாதானப்படுத்தும் எச்செயலும் விரும்பும் விளைவைத் தராதெனவும் ஜேர்மன் பாராளுமன்றப் பேச்சாளரான ஸ்ரெவெ(F)ன் சைபேட் (Steffen Seibert) கூறுகிறார். John Kerry பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் வேளை, மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம் பெறும் கலவரம் பற்றியும், அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளின் பங்களிப்பினது முக்கியத்துவம் பற்றியும் கலந்துரையாடப்படும். இந்த வேளையில் ஜேர்மன் பாதுகாப்புச் செயலர், துருப்புக்களை மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் தரையிறக்க எடுக்கும் எத்தனிப்பு, நேர் எதிர் வாதங்களால் உச்ச சுரம் பெறுமெனவும் நம்பப்படுகிறது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி-

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்:-

தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவை:-
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகpன்றது. இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை அகற்றும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்து பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளையும் அண்மித்து விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பெரும்பாலான முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்று ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவை:- தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைக்கப் போவதில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29.01.14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ´இம்முறை மாகாண சபைத் தேர்தலை ஒரு சனிக்கிழமையில் நடத்த தீர்மானித்துள்ளோம். 14.7 மில்லியன் வாக்காளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். அதில் மேல், தென் மாகாண தேர்தலில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர்வரை இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்கள் செயலகத்தால் எந்த வேட்பாளரினதும் வேட்பு மனு அநாவசியமாக நிராகரிக்கப்பட மாட்டாது. வேட்பு மனு முறையாக பூர்த்தி செய்யப்படாதிருப்பின் மாத்திரமே நிராகரிக்கப்படும். கொழும்பில் 1400 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் கம்பஹாவில் 1315 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் களுத்துறையில் 615 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் காலியில் 704 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் ஹம்பாந்தோட்டையில் 405 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் மாத்தறையில் 440 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படும். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் 7 - 17 வரையான உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு 55 ஆயிரம் உத்தியோகத்தர்களை கடமைக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம். கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் இம்முறையும் பயன்படுத்தப்படும். வேட்பு மனுவில் போலி பெயர்கள் இடம்பெறாதிருக்க தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழை சமர்பிப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது´ என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். முன்னர் விண்ணப்பங்களை ஏற்பதற்கான கடைசி நாள் பெப்ரவரி 7ஆம் திகதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த மாகாண சபை தேர்தலில் பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளையும் சில இடங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'மரத்தாலான வாக்குப் பெட்டிகள் செலவு கூடியவை. இதனால் மீள்சூழற்சிக்குள்ளான பிளாஸ்ரிக் கழிவை பயன்படுத்தி செய்யப்பட்ட பெட்டிகளை பயன்படுத்துவோம். இது செலவு குறைந்தாக இருக்கும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

தனி மனித சுதந்திரம் சீரழியாத வகையில் வளர்ச்சியை நோக்கிய செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும்-

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், நடுத்தர மனிதர்களைப் பலப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தவும் வல்ல இலகுவான சில வழிகளை எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளதாக தேசத்தின் நிலமை பற்றிப் (State of the Nation Address) பேச ஆரம்பிக்கையில் பராக் ஒபாமா மிகவும் நிதானமாகக் குறிப்பிட்டார்.
தான் எல்லோருடனும் சேர்ந்து கடைமையாற்ற ஆவலோடும் ஆயுத்தமாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேவைப்படும் இடமெல்லாம் எதிர்கட்சியினரைப் புகழத் தவறவில்லை. தேவைப்படின் சட்டத்தின் அனுசரனையின்றி செயல் புரிய உள்ளதாகவும் கூறினார். தனி மனித சுதந்திரம் சீரழியாத வகையில், இவ் வருடமானது முழுமையான வளர்ச்சியை நோக்கிய செயற்பாடுகளை உள்ளடக்கிய தாகவிருக்குமென்றும் குறிப்பிட்டார். அதிகுறைந்த மணித்தியால சம்பளம் தற்போதுள்ள 7.25 US $ இலிருந்து 10.10, US. Dollar ஆக உயர்த்தப்படுமென்றும், சகல மாநிலங்களின் உதவியிடனும் காபனீர் ஒக்சைட் கட்டுப் பாட்டிற்கான புதிய திட்டம் கொண்டு வரப்படுமென்றும், உடல் நல சுகாதாரத்திட்டங்களுக் கெதிராகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவ்வித நல்ல விளைவுகளையும் தர முடியாத எதிர்ப்புக்களைக் காண்பிப்பதை நிறுத்த வேண்டுமென்றும், ஈரான் நாட்டோடு இடம் பெறும் அணு ஒப்பந்தத்தில் வருங்காலங்களில் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தான் வீட்டோ (Veto) அதிகாரம் கொண்டு தடுக்க விருப்பதாகவும், தேசிய அலுவலகத்தின் உளவு பார்க்கும் அலுவலகக் கடைமைகள் புனரமைப்புச் செய்யப்படுமென்றும், தற்சமயம் 26 கிழமைகளுக்குத் தரப்படும் வேலை இல்லாதோருக்கான உதவிப் பணம் (Unemployement Benifit) குறிப்பிட்ட கால எல்லையைக் கொண்டு நீடிக்கப்படு மென்றும் கூறினார். இப் பேச்சு இளஞர்களால் விரும்பி வரவேற்க்கப் பட்டதாக Wall Street Journal குறிப்பிடுகிறது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி-
வட மாகாண சபை முல்லைத்தீவு, மாங்குளத்தில் இருப்பதுவே எமது விருப்பமாகும். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும், மாங்குளம் பிரதேசமே மத்தியில் அமைந்துள்ளது. ஆயினும் அந்தப் பகுதியில் நிலத்திற்கு கீழ் பாரிய கற்கள் இருப்பதால் அங்கு நீர்ப்பற்றாக்குறை காணப்படுவதாக கூறப்படுகிறது. மாங்குளத்தில் நீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்குமானால் வட மாகாண சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய திணைக்களங்களையும் யாழப்பாணத்தில் இருந்து மாங்குளத்திற்கு கொண்டு வர முடியும். கொரிய நிபுணர்கள் மாங்குளத்தில் நீர் மற்றும் கட்டட நிர்மாணங்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமது அய்வினை பூர்த்தி செய்ததும் அது பற்றிய முழுமையான அறிக்கையை இன்னும் ஓரிரு மாதங்களில் என்னிடம் கையளிப்பார்கள். அவ்வாறு தென் கொரிய நிபுணர்களினால் கையளிக்கப்படும் அறிக்கையில் மாங்குளத்தில் வட மாகாண சபையை நிர்மாணிப்பதற்குரிய சாதகமான விடயங்கள் தெரிவிக்கப்பட்டால் வட மாகாண சபையை மாங்குளத்திற்கு இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்வோம். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் கூடுதலான இழப்புக்களை சந்தித்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு மாகாண அமைச்சர் ஒருவரை நியமிக்காவிட்டாலும் பிரதி தவிசாளர் பதவியை இந்த மாவட்டத்திற்கே வழங்கியுள்ளோம்.
வட மாகாண சபை ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் புதிதாக நிருமாணிக்கப்பட்ட இருமாடி பாடசாலைக் கட்டடத் திறப்பு விழா நேற்று (29.01.14) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஊடகவியளாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாடசாலையின் அதிபர் அருட் சகோதரி ஏ.எம்.ஜே.நீற்றாவின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் அவுஸ்ரேதிலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் றொபின் மூடி, யுனிசெபின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மக்கூலி, மாகாண சபையின் அதிகாரிகள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.