Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, November 16, 2013
வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை!
வடகொரியாவில் திருட்டுத்தனமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த 80 பேருக்கு பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தென் கொரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி திருட்டுத்தனமாக பார்த்த 80 பேருக்கு வடகொரியா அரசு மரண தண்டனை விதித்தது.
இதனையடுத்து கடந்த 3ம் திகதி 7 நகரங்களில் அந்த 80 பேர் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, துறைமுக நகரான வான்சனில் சுமார் 10,000 பொது மக்களை விளையாட்டு அரங்கம் ஒன்றுக்கு அரசு அதிகாரிகள் வரவழைத்துள்ளனர்.
இவர்கள் முன்னிலையில் இந்த கொடூர தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்! தொல்.திருமாவளவன்
தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ் சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்கா பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை.
சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப்படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரியவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினைவிடத்தை எழுப்பியவர்களுக்கு போதிய காலக்கெடுவையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து ! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை
கொழும்பு: இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து, ஒளிவு, மறைவற்ற, நேர்மையான விசாரணையை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்றும், வரும் மார்ச் மாதத்திற்குள் இதை செய்யாவிட்டால், இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும் என்றும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு சுற்று சுவர் இடிப்பு சீமான் மதுரையில் ஆர்ப்பாட்டம்!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டமையினை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்.
தஞ்சாவூர் அருகே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் இடம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததாக கூறி நினைவு முற்றம் அகற்றப்பட்டது.
இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் கலந்து கொண்டு பேசியதாவது:–
தமிழ் சமுதாயத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்று சுவர் இடித்து அகற்றப்பட்டது. பழ.நெடுமாறனை கைது செய்ததும் கண்டனத்துக் குரியதாகும்.இந்த இடிப்பு நிகழ்வுக்கு முன்தினம் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இச்சுவரை இடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்க வில்லை. இதை சட்டப்படி எதிர்கொள்வோம்.
காமன்வெல்த் மாநாட்டிற்கான எதிர்ப்பை திசை திருப்புவதற்கே முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டு இருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது. ஈழப் போர் நடக்கும்போதும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும் ஒருவர் கூட பதவி விலகவில்லை. இதில் கருணாநிதி ஜெயலலிதா என பேதம் இல்லை. எந்த அதிகாரம் நம்மை அடிமையாக்குகிறதோ அந்த அதிகாரத்தை இனிவரும் காலத்தில் இல்லாமல் ஆக்குவோம்.
‘விரைந்து போர்க்குற்றங்களை விசாரிக்குக: தவறினால் பன்னாட்டு விசாரணை!’ – சிங்கள அரசுக்கு பிரித்தானியப் பிரதமர் எச்சரிக்கை
இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தோன்றும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘விரைந்து போர்க்குற்றங்களை விசாரிக்குக: தவறினால் பன்னாட்டு விசாரணை!’ – சிங்கள அரசுக்கு பிரித்தானியப் பிரதமர் எச்சரிக்கை
நவ 16, 2013
1
இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தோன்றும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் முகாமில் வைத்து வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கென்று கடந்த காலங்களில் சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு விசாரணைக் குழுவும் உருப்படியான தீர்ப்பை வழங்கியதில்லை என்பதை சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ சுட்டிக் காட்டிய பொழுது அதற்குப் பதிலளித்த பிரதமர் கமரூன், இராணுவத்தினரைப் பயன்படுத்தி விசாரணைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டிருப்பதாகப் பதிலளித்துள்ளார்.
http://www.channel4.com/news/sri-lanka-jaffna-tamil-david-cameron-chogm-protest-video
‘விரைந்து போர்க்குற்றங்களை விசாரிக்குக: தவறினால் பன்னாட்டு விசாரணை!’ – சிங்கள அரசுக்கு பிரித்தானியப் பிரதமர் எச்சரிக்கை
நவ 16, 2013
1
இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை விரைவாக சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தோன்றும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் முகாமில் வைத்து வெள்ளிக்கிழமை சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு பிரித்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கென்று கடந்த காலங்களில் சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட எந்தவொரு விசாரணைக் குழுவும் உருப்படியான தீர்ப்பை வழங்கியதில்லை என்பதை சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ சுட்டிக் காட்டிய பொழுது அதற்குப் பதிலளித்த பிரதமர் கமரூன், இராணுவத்தினரைப் பயன்படுத்தி விசாரணைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டிருப்பதாகப் பதிலளித்துள்ளார்.
http://www.channel4.com/news/sri-lanka-jaffna-tamil-david-cameron-chogm-protest-video
சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பொது மக்கள் சற்றும் எதிர்பாராத வேளையில் காவல்துறையினர் மனிதாபிமானமின்றி மேற்கொண்ட இந்தத் தாக்குதல்களால் பல பெண்கள் உடற்காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)