Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, March 30, 2013

தமிழ் ஈழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு: தமிழக சட்டசபை தீர்மானத்தை ஏற்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி, மார்ச் 30- இலங்கை விவகாரம் தொடர்பாக கடந்த 27-ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ் ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை 'நட்பு நாடு' என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்ததீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், ஒரு தனியார் டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற் றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:-தமிழக சட்டசபை தீர்மானத்தைநீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? பதில்:-தமிழகத்தில், மற்ற கட்சிகள் மட்டுமின்றி எங்கள் கட்சியினரிடமும் கடுமையான உணர்வுகள் நிலவுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த உணர்வுகள், உலகில் பலரும் கொண்டுள்ள உணர்வுகளுடன் உடன்பட்டுள்ளன. அதே சமயத்தில், இலங்கையுடன் நாங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. கேள்வி:-இலங்கையை நட்பு நாடு அல்ல என்று அறிவிப்பீர்களா? பதில்:-இல்லை. கேள்வி:-பொருளாதார தடை விதிக்க பரிசீலிப்பீர்களா? பதில்:-இல்லை. கேள்வி:-தமிழ் ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருவீர்களா? பதில்:-இல்லை. கேள்வி:-அப்படியானால், சட்டசபை தீர்மானத்தின் 3 அம்சங்களையும் நிராகரிக்கிறீர்களா? பதில்:-இந்த கோரிக்கைகளை ஏற்கும் கேள்விக்கே இடம் இல்லை. அது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது அல்ல. மற்ற மாநிலங்களின் நிலை என்ன? மற்ற சட்டசபைகளும் உள்ளன. அவையெல்லாம் இதைஆதரிக்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரித்தால், அது வேறு விஷயம். ஒரு மாநிலம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஆதரித்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அந்த மாநிலம் சொல்வதை எல்லாம் நாங்கள் ஏற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு மத்தியமந்திரி சல்மான் குர்ஷித் கூறினார்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு

தூத்துக்குடி,மார்ச்.30- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வாயு வெளியேறுவதால் ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். காற்று மற்றும் நீர் மாசுபடுவதாக ஸ்டெர்லைட் ஆலை மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆலையை மூட வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வந்தது. இதனையடுத்து ஆலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆர்.டி.ஓ.,விற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஆலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் பரிந்துரை செய்ததை அடுத்து, ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையில் முதல் கட்டமாக ஆலைக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து முற்றிலுமாக ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் கலவரம்

மார்ச் 30- உலகத்திற்கே அமைதியைப் போதித்த புத்தரின் கோட்பாடுகளைப் பின்பற்றும் புத்த மதத்தினர், தற்போது வன்முறையில் ஈடுபடத்துவங்கியுள்ளனர். மியான்மரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், வியாழன் அன்று இரவு, இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு அருகே உள்ள பெப்பிலியானா என்ற இடத்தில், முஸ்லிம் ஒருவரின் கடை அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.