Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, June 30, 2014
சிங்கள மனித உரிமை அமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் தமிழ்பெண்கள்
அமெரிக்காவின் பிரபல நடிகையான அன்யலினா ஜொலி அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னர் இலண்டனில் யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தடை செய்யவதற்கு ஒரு மாநாட்டினை நடத்தியிருந்தார்.
இம்மாநாடானது 2009ம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பெருமளவு பெண்கள் இராணுவத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுதிய சம்பவங்களின் பின்னர் தான் இப்படியான ஒரு மாநாடு நடத்துவதற்கு காரணமாய் அமைந்தது.
-------------------------------------------------------------------------------
இம்மாநாட்டில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோரை பார்வையிட அன்யலினா ஜொலி அவர்கள் விரும்பி இருந்தார். இதனை இலங்கையில் உள்ள சிங்கள மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-----------------------------------------------------------------------------------
ஆனால் அவர்கள் ஒரு தமிழரைக்கூட அன்யலினா ஜொலி அவர்களை சந்திக்க விடவில்லை. சிங்களவர்களை மட்டுமே கூட்டிச்சென்றார். இது புகைப்படம் மூலம் உறுதியாகின்றது. இப்படத்தில் அன்யலினா ஜொலி அவர்களுடன் சிங்கள மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெனான்டோ அவர்களும் இரண்டு சிங்கள பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். இது தமிழ் சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருந்தது.
--------------------------------------------------------------------------
இத்தகவலை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழர் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக தமிழ்தேசிய முன்னணி என்ற பெயருடன் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற மண்டபத்தில் ஒன்று திரண்ட தமிழ்தேசிய இயக்கங்களை சார்ந்தவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தினை உருவாக்கியுள்ளார்கள்.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொள்வதற்குரிய காலம் கனிந்துள்ளது. தனித் தனியாக இயங்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளையும் ,தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் ஒருங்கிணைப்பது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழீழத் தமிழர்களுக்கு நேரிட்ட அழிவும் அவலமும் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது . தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் வலிமையாகவும் செயல்பட்டால்தான். உலகத் தமிழர்களை காக்க முடியும் அதற்கு தமிழ் தேசியர்கள் தம்முள் இணைந்து வலிமையான ஒரு அமைப்பாக உருவாக வேண்டும்.
தமிழ்நாட்டின் இயற்க்கை வளங்கள் வந்தேரிகளாலும் , பன்னாட்டு நிறுவனங்களாலும் சூரையாடபடுகின்றன. இந்த நிலை தொடருமானால் நமது எதிர் காலத் தலைமுறை வளங்குன்றிப்போன தமிழகத்தில் தான் வாழ நேரிடும் காவேரி , முல்லை பெரியாறு , மீனவர் பிரசனை போன்றவற்றை தமிழகத் தேசியப் பிரச்னைகளில் முக்கியமானவையாகும் . உச்சநீதிமன்றம் நமக்கு நியாயம் வழங்கியப் பிறகும் நம்மால் அதன் பயனை பெறமுடியவில்லை. மத்திய அரசு நம்மை அலட்சியம் செய்கிறது.தமிழ் நாட்டில் கல்வி , ஆட்சி , வாழிபாடு ஆகியவற்றில் தமிழுக்கே இடமில்லை ஆங்கிலமே இன்னும் அரசால்கிறது. கோவில்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆதித் தமிழர்கள் இழிவிற்கும் வன்கொடுமைக்கும் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். ஆதித் தமிழர்களின் விடிவு இல்லாமல் தமிழ்த் தேசிய இனம் விடிவு வராது.இன்னும் பல துறைகளில் நாம் புறக்கணிக்கபடுவது தொடர்கிறது இவற்றையெல்லாம் அகற்றி தமிழுக்கும் தமிழருக்கும் போடப்பட்டிருக்கும் விலங்கைத் தகர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த் தேசியர்களுக்கே உண்டு.
---------------------------------------------------------------------------
எனவே தமிழ்த் தேசியர்கள் தமக்குள் நிலவும் சிறுசிறு வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அகற்றிவிட்டு ஒன்றுபடவேண்டும். இந்த உரிய நோக்கத்துடன் தஞ்சையில் கூட்டம் நடை பெற்றது.
என்று அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)


