Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, October 31, 2014
மீனவர் தூக்கு: நள்ளிரவு வரை சமாதான பேச்சுவார்த்தை- போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
ராமேஸ்வரம்: இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து போர்க்கோலம் பூண்ட ராமேஸ்வரம் மீனவர்களை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சமாதானத்தை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
---------------------------------------------------------------------
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அவர்கள் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை அரசு வழக்கு தொடர்ந்தது.
--------------------------------------------------------------------
இந்த வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்தது. இந்த அநியாயத் தீர்ப்பைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்தது.
------------------------------------------------------------------------------------
ராமேஸ்வரம் பகுதியே போர்க்களமானது. சாலை மற்றும் ரயில் பாதைகளில் மரங்களைப் போட்டும் டயர்களைக் கொளுத்தியும் போக்குவரத்தை மீனவர்கள் முடக்கினர்.
-----------------------------------------------------------------------------
மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டன.
-------------------------------------------------------------------------------
இதனால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தங்கச்சிமடத்தில் ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
---------------------------------------------------------------------------
பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. உச்சகட்ட கொந்தளிப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
-----------------------------------------------------------------------------
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழு மீனவர் பிரதிநிதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 மீனவர்கள் அப்பாவிகள்; அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகமே மேல்முறையீடு செய்யும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தைக் கைவிடுமாறு அரசுத் தரப்புக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
-------------------------------------------------------------------------------
இதனை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
Monday, October 27, 2014
அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவ வளாகம் ஆப்கன் படையிடம்
தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆயுதப்படையினர் பயன்படுத்திவந்த பெரும் இராணுவ வளாகம் ஒன்று உள்நாட்டு பாதுகாப்புப் படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
தாலிபன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தக் கட்டட வளாகம் ஆப்கன் படைகளிடம் கையளிக்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளைக் குறைக்கும் நடவடிக்கையின் முக்கிய கட்டமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------
பாஸ்ச்யன் படைத்தளத்தில் இன்று நடந்த நிகழ்வில் பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் நேட்டோ கொடிகள் இறக்கப்பட்டு, ஆப்கன் கொடி மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
ஹெல்மண்ட் மாகாணத்தில் பிரிட்டன் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதை இன்றைய நிகழ்வு உணர்த்துவதாகவும், இது பிரிட்டன்- ஆப்கன் வரலாறுகளில் முக்கிய அத்தியாயம் என்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் ஃபாலோன் கூறினார்.
---------------------------------------------------------------------------------------
ஆப்கானுக்குள் நுழைந்தது முதல் பிரிட்டன் இதுவரை 453 படையினரை இழந்துள்ளது.
---------------------------------------------------------------------------------------
இதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் ஆப்கன் படையினரில் நாலாயிரம் பேர் பலியாகியுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா-சீனா-இலங்கை: முக்கோண மோதலில் நடப்பது என்ன?
-------------------------------------------------------------------------------------
சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த சமயத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்த செயலை இந்திய பெருங்கடற்பரப்பில் இந்திய கடற்படை ஆதிக்கத்துக்கு எதிரான சவாலாக இந்தியா பார்க்கும் என்கிறார் இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி கர்ணல். ஹரிஹரன்.
-------------------------------------------------------------------------
இது குறித்த தனது தீவிர கவலையை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்ததாக சென்னையில் இருந்து வெளியாகும் ''தி ஹிந்து'' பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.
------------------------------------------------------------------------
சென்றவாரம் இந்தியா வந்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் கவலைகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் ''தி ஹிந்து'' செய்தி தெரிவிக்கிறது.
-----------------------------------------------------------------------
இந்தியாவின் கவலையின் பின்னணி குறித்து இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயரதிகாரி கேனல் ஹரிஹரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
Saturday, October 25, 2014
தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதற்கு தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதற்கு தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் பால்விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் திணைக்களம் அபராதம் விதித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு தொடர்பான அமெரிக்க சட்டங்களை 'தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக' இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்கன் வெலியில் உள்ள எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் என்ற நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்கு தமக்காக வேலைபார்க்க இந்தியாவில் இருந்து எட்டு பேரை அழைத்துவந்திருந்தது.
------------------------------------------------------------------------------------
ஃபாஸ்டர் சிட்டியில் இருந்த தமது நிறுவனத்தின் தலைமையகத்தை ஃப்ரெமோண்ட்டுக்கு மாற்றுவதற்கான பணிகளில் இந்த இந்திய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
------------------------------------------------------------------------------------
அந்த நேரத்தில் எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் நிறுவனம் இந்த இந்தியத் தொழிலாளர்கள் எட்டு பேருக்கும் அவர்கள் சதாரணமாக இந்தியாவில் பெங்களூருவில் பெற்று வந்த அதே சம்பளத்தை அமெரிக்காவில் வைத்து வழங்கியுள்ளது.
------------------------------------------------------------------------------------
மணிக்கு கிட்டத்தட்ட 75 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்பட்ட சம்பளம் இது.
------------------------------------------------------------------------------------
இத்தொகையை அமெரிக்க டாலரில் பார்த்தால் மணிக்கு $1.21 ஆகும்.
------------------------------------------------------------------------------------
கலிஃபோர்னியாவின் சட்டங்கள்படி எந்த ஒரு தொழிலாளிக்கும் குறைந்தபட்சம் மணிக்கு $8 சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
------------------------------------------------------------------------------------
தவிர ஒரு வாரத்தில் 40 மணி நேரங்களுக்கும் கூடுதலாக வேலைபார்த்தால் அதற்கு மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டங்கள் கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------
ஆனால் இந்த எட்டு பேரும் வாரத்துக்கு 122 மணி நேரங்கள் வேலைவாங்கப்பட்டிருந்தும், அவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
------------------------------------------------------------------------------------
தொழிலாளர் நலனுக்கான அரசு அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளில் இந்த விஷயம் தெரியவந்தது.
------------------------------------------------------------------------------------
லாஸ் ஏஞ்செலிஸில் தொழிலாளர்கள் பிழியப்படுகின்ற ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில்கூட இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதை தான் பார்த்ததில்லை என தொழிலாளர் திணைக்களத்தின் மாவட்ட துணை இயக்குநர் மைக்கேல் ஈஸ்ட்வுட் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------
சம்பள பாக்கியாக இந்த ஊழியர்களுக்கு $40,000 வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள தொழிலாளர் திணைக்களம் இந்நிறுவனத்தின் மீது $3000 அபராதமும் விதித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)