Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, February 18, 2014

உறுப்பு நாடுகளுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு-

எதிர்வரும் மாhச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------- சார்க் பிராந்திய வலயத்தைச் சேர்ந்த மூன்று நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. --------------------------------------------------------------------------------------------- இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இவ்வாறு அங்கம் வகிக்கின்றன. --------------------------------------------------------------------------------------------- இரண்டு தடவைகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானும், மாலைதீவும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதடன், இந்தியா எதிராக செயற்பட்டுள்ளது, --------------------------------------------------------------------------------------------- தற்போது மாலைதீவில் நடைபெற்று வரும் சார்க் பிராந்திய வலய வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. --------------------------------------------------------------------------------------------- வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ளது. --------------------------------------------------------------------------------------------- மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிராந்திய வலய நாடுகளைப் போன்றே, உறுப்புரிமையற்ற நாடுகளுக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆதரவு திரட்டும் முனைப்புக்களில் இலங்கைப் பிரதிநிதிகள் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. --------------------------------------------------------------------------------------------- இதேவேளை, இம்முறை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாரியளவில் விரிசல் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------------------------- எனினும், இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment