Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, March 10, 2014

இலங்கை குடி மக்களின் நலனுக்காகவே ஜெனீவா தீர்மானம்': மொரீஷியஸ்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டுவரும் இணை-அனுசரணை நாடுகளில் ஒன்றான மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி கொண்டுள்ளதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனனை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், மொன்டநேக்ரோ, மசெடோனியா ஆகிய நாடுகளுடன் மொரீஷியஸும் சேர்ந்து முன்மொழிந்து கொண்டுவருகின்ற தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயல் என்றும் உள்நாட்டு விவகாரத்தில் அத்துமீறி நுழையும் நடவடிக்கை என்றும் ஜெனீவாவிலுள்ள ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும் கூறியுள்ளார். -------------------------------------------------------------------------------------- இந்த சூழ்நிலையில், தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மொரீஷியஸ் வௌியுறவு அமைச்சர் அர்வின் பூலெல், 'மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல்கொடுக்கும் தங்கள் அரசின் நிலைப்பாடு' காரணமாகவே இலங்கை மீதான பிரேரணையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து கொண்டுவருவதாகக் கூறினார். --------------------------------------------------------------------------------------- ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவுகளின் படியும் காமன்வெல்த் மாநாட்டின் இறுதி முடிகளின் அடிப்படையிலுமே நாங்கள் இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்குகிறோம்' என்றார் அர்வின் பூலெல். ---------------------------------------------------------------------------------------- காமன்வெல்த் சாசனம் மற்றும் ஐநா மனித உரிமைகள் சாசனம் ஆகிய ஏற்பாடுகளுடன் முற்று முழுதாக இசைந்து நடக்க வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். ---------------------------------------------------------------------------------------- தற்போது விவாத மட்டத்தில் இருக்கும் இலங்கை மீதான தீர்மானத்தின் முன்வரைவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற முக்கிய கடப்பாட்டில் கருத்தொற்றுமை ஏற்படும் என்றும் மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். ---------------------------------------------------------------------------------------- இலங்கையில் கடந்த நவம்பரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை கனேடிய பிரதமருடன் சேர்ந்து மொரீஷியஸ் பிரதமரும் புறக்கணித்திருந்தார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தார். ---------------------------------------------------------------------------------------- இலங்கையில் போர்க் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிப்பதில் இலங்கை அக்கறை காட்டவில்லை என்றே மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அப்போது சுட்டிக்காட்டியிருந்தார். ---------------------------------------------------------------------------------------- இலங்கையில் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் சில முக்கிய மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே இலங்கை மீதான தீர்மானத்தை முன்னின்று கொண்டுவருவதாக மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல் வில்லை தமிழோசையிடம் தெரிவித்தார். ---------------------------------------------------------------------------------------- மொரீஷியஸ் எந்தவொரு நாட்டின் அழுத்தத்திற்கும் உள்ளாகி செயற்படவில்லை என்றும் மனித உரிமைகளுக்காக முன்னிற்பதே தமது நாட்டின் தலையாய கடமை என்றும் அர்வின் பூலெல் கூறினார். ---------------------------------------------------------------------------------------- 'இலங்கை மீதான தீர்மானம் ஒட்டுமொத்த இலங்கைப் பிரஜைகளுக்கும் பொதுவான- உலக மக்களுக்கே பொதுவான மனித உரிமை விழுமியங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதால்' அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

காணிகளை திருப்பிக்கேட்டு மன்னார் முசலியில் ஆர்ப்பாட்டம்

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணிகளைத் திருப்பித் தரவேண்டும் எனவும், மீள்குடியேறியுள்ள காணியற்ற குடும்பங்களுக்குக் காணிகள் வழங்க வேண்டும் எனவும் கோரி சாலை மறிப்புப் போராட்டம் ஒன்று ஞாயிறன்று நடத்தப்பட்டிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------- இந்தப் போராட்டத்தினால், முருங்கன், சிலாவத்துறை, மறிச்சுக்கட்டி ஊடான மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துகள் நண்பகல் முதல் நான்கு மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இந்த வீதியூடாகப் பொதுப்போக்குவரத்து வாகனங்களிலும் தனியார் வாகனங்களிலும் பயணம் செய்த பெரும் தொகையான பயணிகளின் பிரயாணம் தாமதமடைந்திருந்தது. -------------------------------------------------------------------------------------------- கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டதையடுத்து, இடம்பெயர்ந்து சென்று 2010ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீள்குடியேறிய இந்தக் கிராமங்களின் வயல் காணிகளின் ஒரு பகுதியைக் கடற்படையினர் படை முகாம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தியிருந்தனர்.
-------------------------------------------------------------------------------------------- இதனால் இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன், இடம்பெயர்ந்திருந்த இருபது வருட காலத்தில் அதிகரித்துள்ள குடும்பங்கள் குடியேறுவதற்கு போதிய காணிகள் இல்லாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது. -------------------------------------------------------------------------------------------- கையகப்படுத்தப்பட்ட விவசாய காணிகளைத் தரவேண்டும், காணியற்ற குடும்பங்கள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற தமது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக மரைக்கார்தீவு கிராம மக்களின் தலைவர் மெலளவி மஹ்முத் தௌபிக் தெரிவித்தார். -------------------------------------------------------------------------------------------- சம்பவ இடத்திற்கு விரைந்த சிலாவத்துறை காவல்துறையினர் தடைசெய்யப்பட்டிருந்த வீதியைத் திறப்பதற்கான பேச்சுக்களை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடத்தினர். -------------------------------------------------------------------------------------------- ஆயினும் உரிய அதிகாரிகள் நேரடியாக வந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் சாலை மறிப்புப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர். -------------------------------------------------------------------------------------------- இதனையடுத்து கலகம் அடக்கும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். -------------------------------------------------------------------------------------------- இந்த நிலையில் அங்கு வருகை தந்த முசலி பிரதேச சபைத் தலைவர் டபிள்யு.எம்.எஹியான், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், திங்களன்று அவருடைய தலைமையில் கூடிப்பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளத்ததையடுத்து வாகன போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டன. -------------------------------------------------------------------------------------------- எனினும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் தமது போராட்டம் அமைதியான முறையில் நாளையும் தொடரும் என்று மௌலவி தௌபீக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.