பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்தனர்.
-----------------------------------------------------------------------
இந்த நுண்ணுயிரினங்கள்,ஒளி, பிராண வாயு போன்றவை இல்லாத, தண்ணீரும் ஏறக்குறைய இல்லாத மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழ முடிகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
-----------------------------------------------------------------------
பிரபஞ்சத்தில் இதேபோல வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-----------------------------------------------------------------------
சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டம் (International Ocean Discovery Program) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறது.
--------------------------------------------------------------------
இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
---------------------------------------------------------------------------
இந்த முடிவுகள் அமெரிக்க புவிபௌதிக ஒன்றியத்தின் (America Geophysical Union ) மாநாடு ஒன்றில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
---------------------------------------------------------------------------
“ நாங்கள் எப்போதும் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்.அப்படிக் கண்டுபிடிக்கும்போதெல்லாம்,அவைகள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது எங்களுக்கு ஒரு வியப்பைத் தரும் விஷயமாகவே இருந்துவருகிறது” என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவில் அங்கம் வகித்த கலிபோர்னியா தொழில்நுட்பக்கழகத்தின் எலிசபத் ட்ரெம்பார்ட் ரெய்ச்சர்ட்
---------------------------------------------------------------------------
சிக்யு என்ற கப்பலிலிருந்து கடல் அலைகளுக்கடியில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப் படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்த்தாம்.
---------------------------------------------------------------------------
இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன எனப்தைக் கண்டறிய தொடர்ச்சியான சில பரிசோதனைகளைச் செய்தனர்.
---------------------------------------------------------------------------
இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும் நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி செய்தனர்.
---------------------------------------------------------------------------
இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, December 29, 2014
ஒளி, வாயு, நீரில்லாமலும் வாழும் நுண்ணுயிர்கள்
கடலுக்கடியில் மிக ஆழத்தில் துளையிட்டு ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இது போன்ற மிக கடுமையான சூழ்நிலைகளில் வாழும் மிக நுண்ணிய உயிரினங்கள் பற்றி புதிய பார்வைகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்
பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்தனர்.
-----------------------------------------------------------------------
இந்த நுண்ணுயிரினங்கள்,ஒளி, பிராண வாயு போன்றவை இல்லாத, தண்ணீரும் ஏறக்குறைய இல்லாத மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழ முடிகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
-----------------------------------------------------------------------
பிரபஞ்சத்தில் இதேபோல வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-----------------------------------------------------------------------
சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டம் (International Ocean Discovery Program) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறது.
--------------------------------------------------------------------
இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
---------------------------------------------------------------------------
இந்த முடிவுகள் அமெரிக்க புவிபௌதிக ஒன்றியத்தின் (America Geophysical Union ) மாநாடு ஒன்றில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
---------------------------------------------------------------------------
“ நாங்கள் எப்போதும் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்.அப்படிக் கண்டுபிடிக்கும்போதெல்லாம்,அவைகள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது எங்களுக்கு ஒரு வியப்பைத் தரும் விஷயமாகவே இருந்துவருகிறது” என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவில் அங்கம் வகித்த கலிபோர்னியா தொழில்நுட்பக்கழகத்தின் எலிசபத் ட்ரெம்பார்ட் ரெய்ச்சர்ட்
---------------------------------------------------------------------------
சிக்யு என்ற கப்பலிலிருந்து கடல் அலைகளுக்கடியில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப் படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்த்தாம்.
---------------------------------------------------------------------------
இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன எனப்தைக் கண்டறிய தொடர்ச்சியான சில பரிசோதனைகளைச் செய்தனர்.
---------------------------------------------------------------------------
இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும் நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி செய்தனர்.
---------------------------------------------------------------------------
இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.
பசிபிக் பெருங்கடலில், ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், சுமார் 2,000 மீட்டர்களுக்கும் மேலான ஆழத்தில் துளையிட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது இந்த ஒற்றை செல் நுண்ணுயிர்களை (மைக்ரோப்கள்) கண்டறிந்தனர்.
-----------------------------------------------------------------------
இந்த நுண்ணுயிரினங்கள்,ஒளி, பிராண வாயு போன்றவை இல்லாத, தண்ணீரும் ஏறக்குறைய இல்லாத மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர்வாழ முடிகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
-----------------------------------------------------------------------
பிரபஞ்சத்தில் இதேபோல வேறு கடுமையான சூழ்நிலைகளிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்பதை இது சுட்டிக்காட்டலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-----------------------------------------------------------------------
சர்வதேச கடல் கண்டுபிடிப்பு திட்டம் (International Ocean Discovery Program) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி பல அரிய தகவல்களைத் தந்திருக்கிறது.
--------------------------------------------------------------------
இந்த ஒற்றை செல் உயிரிகள் , கலோரிகள் குறைவான, ஹைட்ரோகார்பன் பொருட்களை உண்டு உயிர்வாழ்கின்றன. அவைகளுக்கு மிகவும் குறைவான வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபோலிசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
---------------------------------------------------------------------------
இந்த முடிவுகள் அமெரிக்க புவிபௌதிக ஒன்றியத்தின் (America Geophysical Union ) மாநாடு ஒன்றில் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
---------------------------------------------------------------------------
“ நாங்கள் எப்போதும் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறோம்.அப்படிக் கண்டுபிடிக்கும்போதெல்லாம்,அவைகள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிவது எங்களுக்கு ஒரு வியப்பைத் தரும் விஷயமாகவே இருந்துவருகிறது” என்கிறார் இந்த ஆராய்ச்சிக்குழுவில் அங்கம் வகித்த கலிபோர்னியா தொழில்நுட்பக்கழகத்தின் எலிசபத் ட்ரெம்பார்ட் ரெய்ச்சர்ட்
---------------------------------------------------------------------------
சிக்யு என்ற கப்பலிலிருந்து கடல் அலைகளுக்கடியில் சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் நிறுத்தப்பட்ட இந்த ஆழ்துளை இயந்திரம், அதன் கீழே கடல் தரைப்பரப்பிற்கும் கீழ் சுமார் 2,400 மீட்டர் தூரம் வரை துளைத்தெடுத்து, அந்த சூழ்நிலையில் இருக்கும் நிலக்கரிப் படுகைக்குள்ளிருந்து மாதிரிகளைக் கொண்டுவந்த்தாம்.
---------------------------------------------------------------------------
இந்த மாதிரிகளை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் அதில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி இந்த ஆழத்தில் உயிர்வாழ்கின்றன அவை எந்த மாதிரியான உணவுப் பொருட்களை உண்டு வாழ்கின்றன எனப்தைக் கண்டறிய தொடர்ச்சியான சில பரிசோதனைகளைச் செய்தனர்.
---------------------------------------------------------------------------
இவை கடல் தரைப்பரப்புக்கடியில் இருக்கும் நிலக்கரிப்படுகையில் வாழ்வதால், நிலக்கரியில் இருந்து கிடைக்கும் மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் துகள்களை அந்த உயிரினங்களுக்கு ஊட்டிப் பார்த்த விஞ்ஞானிகள் அவை உண்மையில் அந்தத் துகள்களை உண்பதை உறுதி செய்தனர்.
---------------------------------------------------------------------------
இந்த ஆராய்ச்சியில் இந்த உயிரினங்கள் வாழ்க்கையை மிகவும் மெதுவாக வாழ்வதை, அதாவது மிக குறைந்த உணவை உட்கொண்டு, அதையும் மெதுவாக செரிமானம் செய்து கொண்டு வாழ்வதை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதுதான் அது போன்ற கடுமையான சூழ்நிலைகளில் வாழ ஒரு வழியாக இருக்கலாம்.
Friday, October 31, 2014
மீனவர் தூக்கு: நள்ளிரவு வரை சமாதான பேச்சுவார்த்தை- போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
ராமேஸ்வரம்: இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து போர்க்கோலம் பூண்ட ராமேஸ்வரம் மீனவர்களை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சமாதானத்தை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
---------------------------------------------------------------------
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அவர்கள் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை அரசு வழக்கு தொடர்ந்தது.
--------------------------------------------------------------------
இந்த வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்தது. இந்த அநியாயத் தீர்ப்பைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்தது.
------------------------------------------------------------------------------------
ராமேஸ்வரம் பகுதியே போர்க்களமானது. சாலை மற்றும் ரயில் பாதைகளில் மரங்களைப் போட்டும் டயர்களைக் கொளுத்தியும் போக்குவரத்தை மீனவர்கள் முடக்கினர்.
-----------------------------------------------------------------------------
மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டன.
-------------------------------------------------------------------------------
இதனால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தங்கச்சிமடத்தில் ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
---------------------------------------------------------------------------
பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. உச்சகட்ட கொந்தளிப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
-----------------------------------------------------------------------------
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழு மீனவர் பிரதிநிதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 மீனவர்கள் அப்பாவிகள்; அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகமே மேல்முறையீடு செய்யும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தைக் கைவிடுமாறு அரசுத் தரப்புக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
-------------------------------------------------------------------------------
இதனை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
Monday, October 27, 2014
அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவ வளாகம் ஆப்கன் படையிடம்
தெற்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஆயுதப்படையினர் பயன்படுத்திவந்த பெரும் இராணுவ வளாகம் ஒன்று உள்நாட்டு பாதுகாப்புப் படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
தாலிபன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்று 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தக் கட்டட வளாகம் ஆப்கன் படைகளிடம் கையளிக்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளைக் குறைக்கும் நடவடிக்கையின் முக்கிய கட்டமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------
பாஸ்ச்யன் படைத்தளத்தில் இன்று நடந்த நிகழ்வில் பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் நேட்டோ கொடிகள் இறக்கப்பட்டு, ஆப்கன் கொடி மட்டும் பறக்கவிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
ஹெல்மண்ட் மாகாணத்தில் பிரிட்டன் படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதை இன்றைய நிகழ்வு உணர்த்துவதாகவும், இது பிரிட்டன்- ஆப்கன் வரலாறுகளில் முக்கிய அத்தியாயம் என்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் ஃபாலோன் கூறினார்.
---------------------------------------------------------------------------------------
ஆப்கானுக்குள் நுழைந்தது முதல் பிரிட்டன் இதுவரை 453 படையினரை இழந்துள்ளது.
---------------------------------------------------------------------------------------
இதேவேளை, இந்த ஆண்டில் மட்டும் ஆப்கன் படையினரில் நாலாயிரம் பேர் பலியாகியுள்ளதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா-சீனா-இலங்கை: முக்கோண மோதலில் நடப்பது என்ன?
-------------------------------------------------------------------------------------
சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த சமயத்தில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு வந்த செயலை இந்திய பெருங்கடற்பரப்பில் இந்திய கடற்படை ஆதிக்கத்துக்கு எதிரான சவாலாக இந்தியா பார்க்கும் என்கிறார் இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற உயரதிகாரி கர்ணல். ஹரிஹரன்.
-------------------------------------------------------------------------
இது குறித்த தனது தீவிர கவலையை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்ததாக சென்னையில் இருந்து வெளியாகும் ''தி ஹிந்து'' பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.
------------------------------------------------------------------------
சென்றவாரம் இந்தியா வந்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் கவலைகள் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் ''தி ஹிந்து'' செய்தி தெரிவிக்கிறது.
-----------------------------------------------------------------------
இந்தியாவின் கவலையின் பின்னணி குறித்து இந்திய இலங்கை பாதுகாப்பு விவகாரங்களை தொடர்ந்து கவனித்துவரும் ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயரதிகாரி கேனல் ஹரிஹரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
Saturday, October 25, 2014
தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதற்கு தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டதற்கு தமிழக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் பால்விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் திணைக்களம் அபராதம் விதித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவு தொடர்பான அமெரிக்க சட்டங்களை 'தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக' இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள கலிஃபோர்னியாவின் சிலிக்கன் வெலியில் உள்ள எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் என்ற நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்கு தமக்காக வேலைபார்க்க இந்தியாவில் இருந்து எட்டு பேரை அழைத்துவந்திருந்தது.
------------------------------------------------------------------------------------
ஃபாஸ்டர் சிட்டியில் இருந்த தமது நிறுவனத்தின் தலைமையகத்தை ஃப்ரெமோண்ட்டுக்கு மாற்றுவதற்கான பணிகளில் இந்த இந்திய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
------------------------------------------------------------------------------------
அந்த நேரத்தில் எலெக்டிரானிக்ஸ் ஃபார் இமெஜிங் நிறுவனம் இந்த இந்தியத் தொழிலாளர்கள் எட்டு பேருக்கும் அவர்கள் சதாரணமாக இந்தியாவில் பெங்களூருவில் பெற்று வந்த அதே சம்பளத்தை அமெரிக்காவில் வைத்து வழங்கியுள்ளது.
------------------------------------------------------------------------------------
மணிக்கு கிட்டத்தட்ட 75 ரூபாய் என்ற கணக்கில் வழங்கப்பட்ட சம்பளம் இது.
------------------------------------------------------------------------------------
இத்தொகையை அமெரிக்க டாலரில் பார்த்தால் மணிக்கு $1.21 ஆகும்.
------------------------------------------------------------------------------------
கலிஃபோர்னியாவின் சட்டங்கள்படி எந்த ஒரு தொழிலாளிக்கும் குறைந்தபட்சம் மணிக்கு $8 சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
------------------------------------------------------------------------------------
தவிர ஒரு வாரத்தில் 40 மணி நேரங்களுக்கும் கூடுதலாக வேலைபார்த்தால் அதற்கு மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டங்கள் கூறுகின்றன.
------------------------------------------------------------------------------------
ஆனால் இந்த எட்டு பேரும் வாரத்துக்கு 122 மணி நேரங்கள் வேலைவாங்கப்பட்டிருந்தும், அவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
------------------------------------------------------------------------------------
தொழிலாளர் நலனுக்கான அரசு அதிகாரிகள் நடத்திய ஆய்வுகளில் இந்த விஷயம் தெரியவந்தது.
------------------------------------------------------------------------------------
லாஸ் ஏஞ்செலிஸில் தொழிலாளர்கள் பிழியப்படுகின்ற ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில்கூட இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதை தான் பார்த்ததில்லை என தொழிலாளர் திணைக்களத்தின் மாவட்ட துணை இயக்குநர் மைக்கேல் ஈஸ்ட்வுட் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------
சம்பள பாக்கியாக இந்த ஊழியர்களுக்கு $40,000 வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ள தொழிலாளர் திணைக்களம் இந்நிறுவனத்தின் மீது $3000 அபராதமும் விதித்துள்ளது.
Thursday, September 25, 2014
Wednesday, September 24, 2014
வாலிபரைக் கொன்றது வெள்ளைப் புலி
டில்லி உயிரியல் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படிருந்த ஒரு வெள்ளைப் புலி தாக்கியதால், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மதியம் உயிரழந்தார்.
விஜய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெள்ளைப் புலி அடைத்து வைக்கப்படிருந்த பாதுக்காப்பு பகுதிக்குள் அத்துமீறி இளைஞன் நுழைந்ததாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி உயிரியல் பூங்காவின் இயக்குனர் அமிதாப் அக்னிஹோத்ரி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், உயிரிழந்த அந்த இளைஞனின் பெயர் மக்சூத் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டில்லியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன், அடைக்கப்பட்ட பாதுக்காப்பு வேளியை தாண்டி குதித்ததால் தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------
நேரில் பார்த்த சிலரும் இந்த தகவலை உறுதி செய்யும் வேளையில், அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துக் கொண்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றார்கள்
---------------------------------------------------------------------------------
இந்த சம்பவம் மதியம் 1 மணி அளவில் நிகழ்ந்ததாகவும், புலியிடம் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை மீட்க எவரும் உதவ முடியாத நிலை நீடித்ததாகவும் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டவர்கள் கூறினார்கள். எனினும் அங்கிருந்த சில இளைஞர்கள் அந்த மிருகத்தின் மீது கற்களை வீசினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------
புலிகள் வேகமாக அழிந்து வருகின்றன. புலிகளின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலேயே வெள்ளைத் தோல்கொண்ட புலிகள் பிறக்கின்றன. இவை மிகவும் அரிதானவை.
தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2014,15ம் நிதியாண்டுக்கு, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உத்தேச பட்டியலை அறிவித்துள்ளது
???????????
--------------------------------------------------
தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2014,15ம் நிதியாண்டுக்கு, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உத்தேச பட்டியலை அறிவித்துள்ளது. இதன்படி 500 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 85 காசு உயர்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ரூ.1.05ம் தொழிற்சாலைகளுக்கு ரூ.1.72ம் உயர்த்தப்படுகிறது.
-----------------------------------------------------------------------------
மாநிலத்தில் மின்சார கட்டணம் நிர்ணயம் செய்ய 2003ல் ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழ் நாடு மின்சார வாரியம், ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யும். அதன்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், ஆணையம் வகுத்த விதிகளின்படி கட்டணத்தை நிர்ணயம் செய்யக் கோரும் மனுவை தமிழக மின்வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்கு முன்போ அல்லது அன்றோ தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் 2014,15க்கான வருவாய் தேவை மற்றும் மின்கட்டண வீதத்தை நிர்ணயம் செய்வதற்கான மனுவை மின்வாரியம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் தனக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 2014,15ம் நிதி ஆண்டுக்கு, ஆண்டு வருவாய்த் தேவையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
-------------------------------------------------------------------------------
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்காலிகமாக மொத்த வருவாய்த் தேவையாக ரூ.39,818 கோடி என நிர்ணயம் செய்துள்ளது. மற்றும் 2014,15ம் நிதி ஆண்டுக்கான வருவாயாக ரூ.32,964 கோடி என தற்போது உள்ள மின் கட்டண வீதத்தின் அடிப்படையில் (மின் விற்பனையின் மூலம் வரும் வருவாய் மற்றும் மின் கட்டணம் அல்லாத வருவாய்) நிர்ணயம் செய்துள்ளது. மேலும் 2014,15 நிதியாண்டுக்கான வருவாய் பற்றாக்குறையாக ரூ.6,854 கோடி என நிர்ணயம் செய்துள்ளது. தற்போதுள்ள மின்கட்டண வீதத்தின்படி வருவாய் பற்றாக்குறை ரூ.6,854 கோடியாகும். இதனால் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மின் கட்டணத்தை ரூ.6.805க்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத் திருத்தத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வணிகம், நீரேற்று நீர் பாச னம், தற்காலிக வினியோகம் ஆகியவற்றுக்கு புதிய உத்தேச மின்கட்டணத்தை ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
------------------------------------------------------------------------
வீட்டு உபயோக நிலையான கட்டணங்கள் 100 யூனிட் வரை ரூ.20லிருந்து ரூ.30 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மின்கட்டணம் 500 யூனிட்டுக்கு மேல் ரூ.5.75 லிருந்து 85 பைசா உயர்த்தி ரூ.6.60 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு ஸி7லிருந்து ஸி1.05 உயர்த்தி ரூ.8.5 ஆகவும் தொழிற்சாலைகளுக்கு ரூ.5.50லிருந்து ரூ.1.72 உயர்த்தி ரூ.7.22 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிசைகள், பொதுவிளக்கு மற்றும் குடிநீர் வழங்கல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், குறுந்தொழில்கள், விசைத்தறி, தொழிற்சாலைகள், விவசாயம் என அனைத்துக்கும் உத்தேச புதிய மின்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோக ரயில்வே துறைக்கும் கேட்பு கட்டணம் ரூ.250 லிருந்து ரூ.300 ஆகவும், மின்திறன் கட்டணம் யூனிட்டுக்கு 550 காசிலிருந்து 722 காசாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையை பொறுத்தவரை நாடு முழுவதும் ஒரே கட்டணத்தை அமல்படுத்துவதால், இந்த புதிய மின்கட்டண அறிவிப்பால் பாதிப்பு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பான கருத்துக்களை அடுத்த மாதம் 23ம் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளரிடம் தபால் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும், ஏழை, எளிய மக்கள் பாதிக்காதவாறு கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழக அரசு மானியமாக 500 யூனிட் வரை மட்டுமே வழங்கி வரு கிறது. அதற்கு மேல் வழங்குவது கிடையாது. தற்போது வீடுகளில் அத்தியாவசிய பொருட்களாக டி.வி., பேன், மிக்சி, கிரைண்டர் என உள்ளது. சாதாரணமாக ஒரு வீட்டுக்கு இந்த பொருட்களின் அடிப்படையில் வைத்து கணக்கெடுத்து கொண்டாலே 500 யூனிட்டுக்கு குறையாமல் வர வாய்ப்புள்ளது என நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அரசு கூடுதல் மானி யம் வழங்கினாலும், அது ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்காது என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு, மின்வாரியம் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, அதனை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்த பின்பே இறுதி பட்டியல் வெளியிடப்படும். தற்போது வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் பெரும்பாலான கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வது உறுதியாகியுள்ளது
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் புதிய மின் கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு வராது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி விலை உயர்வு, ஊழியர்கள் சம்பளம், ஒய்வூதியம் உயர்வால் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, யூனிட்டுக்கு 40 முதல் 85 காசுகள் உயர்த்த்தப்படுவதாகவும், ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 50 முதல் 100 யூனிட்கள் வரை 40 காசுகளும், 100 முதல் 200 யூனிட்கள் வரை 45 காசுகளும் உயர்த்தப்படுகிறது. 201 முதல் 500 யூனிட்கள் வரை 60 காசுகள் உயர்வதாகவும், 501 யூனிட்களுக்கு மேல் 85 காசுகள் உயரும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. நிலையான மின்கட்டணம் ரூ.10 வரை உயர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, September 23, 2014
அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகும் 7வது நாடு சிரியா
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அதன்பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை அமெரிக்க துரிதப்படுத்தியது.
---------------------------------------------------------------------------
இதன் ஒருபகுதியாக அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்று பழி தீர்த்தது அமெரிக்கா. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதம் எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் அமெரிக்கா தலையிட்டு விமானப்படை மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
---------------------------------------------------------------------
சிரியாவில் இன்று முதன்முறையாக தனது விமானப்படை தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு இலக்காகும் 7வது நாடு சிரியாவாகும்.
--------------------------------------------------------------------------
முன்னதாக ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விமானப்படை மூலமாகவும், சோமாலியா, ஏமன், பாகிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளில் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலமாகவும் அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. அதிலும் ஈராக்கில் அடுத்தடுத்த நான்கு அதிபர்களால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------
1991ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பதவியேற்ற அனைத்து அதிபர்களுமே, ஈராக்கில் தாக்குதல் நடத்தியபடியே உள்ளனர். அதில் நான்காவது அதிபர்தான் ஒபாமாவாகும்.
Wednesday, September 17, 2014
ஈராக்கில் அன்னைத்து எரிபொருள் நிலையங்கலும் மூடப்பட்ட நிலையில் ஒரு பையன் எரிபொருளை விற்பனை செய்வதக்காக நீன்ற காட்சி
ஈராக்கில் அன்னைத்து எரிபொருள் நிலையங்கலும் மூடப்பட்ட நிலையில் ஒரு பையன் எரிபொருளை விற்பனை செய்வதக்காக நீன்ற காட்சி
Thursday, September 11, 2014
செப்டம்பர் 11: மகாகவி பாரதியின் நினைவு நாள் இன்று.
பாலியல் பலாத்கார குற்றவாளிகள் இனி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
சைபர் குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் இனி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான அணு உலைகள் யுரேனியத்தை நம்பி இருப்பவை
உலகின் 40% யுரேனியம் ஆஸ்திரேலியாவில்:
இந்தியாவின் பெரும்பாலான அணு உலைகள் யுரேனியத்தை நம்பி இருப்பவை. உலகிலேயே மிக அதிகமான யுரேனியத் தாது நிரம்பிய நாடு ஆஸ்திரேலியா தான். அதாவது உலகின் மொத்த யுரேனியத்தில் சுமார் 40 சதவீதம் ஆஸ்திரேலிய மண்ணில் தான் கலந்து கிடக்கிறது.
ஆனால், அமெரிக்க நெருக்கடியால் இந்தியாவுக்கு யுரேனியம் தர மறுத்து வந்தது.
-------------------------------------------------------------------------------
யுரேனியத்தை புளுட்டோனியமாக்கி அணு குண்டு:
-------------------------------------------------------------------------------
இந்தியாவுக்கு யுரேனியம் தரக்கூடாது என்பதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் மிக மிகத் தீவிரமாக இருந்தன. காரணம், கரண்ட் தயாரிக்க என்று யுரேனியத்தை வாங்கி அதை புளுட்டோனியமாக்கி அணு குண்டு தயாரிக்கப் போகிறார்கள் என்ற பயம் தான்.
-------------------------------------------------------------------------------
அணு குண்டால் உலகிலேயே மிக அதிகமான சேதத்தை சந்தித்த ஜப்பான் தான் இந்தியா மீதான அணு சக்தித் தடைகளில் மிக வேகம் காட்டி வந்தது. அதே போல அமெரிக்கா குனியச் சொன்னால் படுத்துவிடும் நாடான ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு அணு எரிபொருள் தருவதில் பெரும் தயக்கம் காட்டி வந்தது.
-------------------------------------------------------------------------------
ஆனால், ஒரு வழியாக கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. அது எப்படி நடந்தது, திடீரென அமெரிக்கா ஏன் ஒப்பந்தம் செய்தது, கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் அமெரிக்காவை ஏமாற்றிவிட்டு நடத்திய அணு குண்டு சோதனை கதைகளை இங்கே போய் பார்க்கலாம்.
----------------------------------------------------------------------
ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங் மற்றும் ஒசாமா பின் லேடன்:
----------------------------------------------------------------------
அமெரிக்கா- இந்தியா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் வாஜ்பாய், ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங் மற்றும் ஒசாமா பின் லேடன் ஆகியோர் தான்!
----------------------------------------------------------------------
என்னய்யா சொல்ற.. வாஜ்பாய், மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங் லிஸ்டுல ஒசாமாவை போய் சேர்க்குற என்று கோபப்படும் முன் ஒரு நிமிடம் ப்ளீஸ்... நியூயார்க்கில் அல் கொய்தா கும்பல் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்காவிட்டால் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியிருக்குமா என்பதே கேள்விக்குறி தான்.
------------------------------------------------------------------------
ஜப்பான் அணு உலை விபத்தும், இந்தியாவும்:
------------------------------------------------------------------------
ஆனால், அமெரிக்காவும் இந்தியாவும் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஓடிவிட்ட பின்னர் இப்போது தான் ஜப்பான் நம்முடன் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கே முன் வந்துள்ளது.
------------------------------------------------------------------------
2010ம் ஆண்டில் அணு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் ஜப்பான் பிரதமர் அபேயும் பேச்சுவார்த்தையைத் துவக்கிய நிலையில் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டு புகுஷிமா அணு உலையின் ஒரு பகுதி இடிந்து, அணுக் கதிர்வீச்சு பரவியது. இதையடுத்து தனது அணு உலைகளை ஜப்பான் மூடியது. இந் நிலையில் இந்தியாவுடன் எப்படி அணு சக்தி தொடர்பாக பேச்சு நடத்த முடியும்....? இதனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் அப்படியே நின்று போய்விட்டன.
------------------------------------------------------------------------
மோடி நினைத்தது நடக்கவில்லை:
------------------------------------------------------------------------
இந் நிலையில் கடந்த வாரம் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி எப்படியாவது ஜப்பானுடன் ஒப்பந்ததில் கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிடலாம் என்று பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆனால், ஜப்பான் அதில் வேகம் காட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தையையாவது வேகப்படுத்தலாம் என்ற ஒரு முடிவை மட்டும் இரு நாடுகளும் எட்டின. இதுவாவது நடந்துச்சே என்ற மகிழ்ச்சியோடு திரும்பி வந்திருக்கிறார் மோடி.
---------------------------------------------------------------------
அப்படி ஜப்பானிடம் என்ன தான் இருக்கு...?:
---------------------------------------------------------------------------
ஜப்பான் உதவி இல்லாவிட்டால் அமெரிக்கா கூட அணு உலையைக் கட்ட முடியாது என்பது தான் உண்மை.
--------------------------------------------------------------------------
அமெரிக்காவின் General Electric நிறுவனமும் பிரான்சின் Areva நிறுவனமும் இந்தியாவுக்கு அணு உலைகளை அமைத்துத் தரத் தயாராக இருந்தாலும் அதற்குத் தேவையான முக்கியமான சில பாகங்களை ஜப்பான் தான் தயாரித்துத் தர வேண்டிய நிலை. உலகின் அனைத்து மின் உற்பத்தி அணு நிலையங்களுக்குமான உலைகளின் முக்கிய பாகங்கள் ஜப்பான் தான் தயாரித்து வருகிறது.
---------------------------------------------------------------------------
ஜப்பானை நம்பியே எல்லாம்:
------------------------------------------------------------------------------
இந்தியாவில் அமெரிக்காவும் பிரான்சும் அணு உலைகளை அமைக்க வேண்டுமானால் ஜப்பான் தான் அதற்கான பாகங்களைத் தயாரித்துத் தர வேண்டும். ரஷ்ய தொழில்நுட்பம் வேறுபட்டது என்பதால் கூடங்குளம் மாதிரியான அணு உலைகளுக்கு ஜப்பானை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை வரவில்லை.
------------------------------------------------------------------------------
ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிறுவனங்கள் ஜப்பானிய தொழில்நுட்பத்தையும் கருவிகளையுமே சார்ந்து இருக்கின்றன.
------------------------------------------------------------------------------
ஜப்பானின் நிபந்தனைகள்:
------------------------------
யார் கேட்டாலும் இந்தப் பாகங்களை ஜப்பான் தயாரித்துத் தந்துவிடாது. தன்னுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்த நாடுகளில் மட்டுமே அந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளது. இதனால் ஜப்பானுடன் சீக்கிரம் ஒப்பந்தம் போட்டுட்டு வாங்க என இந்தியாவை அமெரிக்காவும் பிரான்சும் நிர்பந்தித்து வருகின்றன. அப்போது தான் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய அணு உலைத் திட்டங்களை இந்த நாடுகள் கட்டித் தந்து லாபம் அடிக்க முடியும்.
---------------------------------------------------------------------
ஆனால், அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்துப் போட்டாக வேண்டும் என்று இந்தியாவை ஜப்பான் பல காலமாகமே நெருக்கி வருகிறது. இதில் கையெழுத்திட இந்தியா தயாராக இல்லை. இதனால் ஒப்பந்தம் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
------------------------------------------------------------------------
ஜப்பானின் பொருளாதாரமும் இந்திய பணமும்:
----------------------------------------------------------------------
அதே நேரத்தில் ஜப்பானிய பொருளாதாரம் இப்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து தேக்கமான நிலைமை நிலவி வருகிறது. இதனால் தனது பொருளாதாரத்தை மீட்க வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் உள்ளது. இது தான் இந்தியாவுக்கு உள்ள ஒரே சாதகமான அம்சம்.
----------------------------------------------------------------
வரும் 2020ம் ஆண்டுக்குள் புதிதாக 19 அணு மின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இப்போது அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் 4,700 மெகாவாட் மின்சாரத்தை 15,000 மெகாவாட்டாக உயர்த்த இந்தியா பெரிய திட்டம் வைத்துள்ளது.
--------------------------------------------------------------------------------
இதற்காக 86 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ. 5 லட்சம் கோடியை செலவிடவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ஜப்பானிய பணத்தில் கிட்டதட்ட 10 ட்ரில்லியன் யென்.
---------------------------------------------------------------------------
இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்தால் ஜப்பானின் தோஷிபா, ஹிடாச்சி ஆகிய அணு உலை கட்டும் நிறுவனங்கள் இந்தப் பணத்தில் பெரிய அளவில் பங்கு போட முடியும். அமெரிக்கா, பிரான்சுடன் சேர்ந்து இந்தியாவில் அணு உலைகளைக் கட்டினால் ஜப்பானுக்கு பெரும் லாபம் கிடைக்கும்.
---------------------------------------------------------------------------
இவ்வளவு பெரிய லாபம் வரும்போது இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்தால் என்ன என்று ஜப்பான் அரசை அந் நாட்டு பொருளாதார நிபுணர்கள் நெருக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் இதன்மூலம் தோஷிபா, ஹிடாச்சி ஆகியவை ஜப்பானில் புதிதாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்பது அவர்களது கணக்கு. புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் இந்த இரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட அணு உலை பிஸினஸை மூடியேவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பணம் இந்த நிறுவனங்களுக்கும் ஜப்பானுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------
ஆனால், உலகிலேயே அணு ஆயுதத்தை சந்தித்த ஒரே நாடு என்பதால் அணு விவகாரத்தில் மற்ற நாடுகளுக்கு உதவ ஜப்பான் தனக்குத் தானே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வைத்துள்ளது. இதன்படி இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால் இனிமேலும் அணு குண்டு சோதனனை நடத்த மாட்டோம் என இந்தியா உறுதிமொழி தர வேண்டும். அதே போல மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளை ஜப்பான் பார்வையிடவும் அனுமதிக்க வேண்டும். இந்த அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்க தனிமங்களை ரீ-புராஸஸ் செய்து அணு குண்டு தயாரிக்க இந்தியா பயன்படுத்தக் கூடாது.
------------------------------------------------------------------------------
பேசுவோம்..
ஆனால், இவையெல்லாம் இந்தியா ஏற்கவே முடியாத நிபந்தனைகள். இதனால், கையில் செக் புக்கோடு பிரதமர் மோடி ஜப்பானுக்கு போனாலும் அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறவில்லை. இருந்தாலும் இரு தரப்பும் எப்படி விட்டுக்கொடுத்து முடிந்தவரை சீக்கிரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது என்பது குறித்து ஆராய்வோம் என்ற முடிவை எடுத்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தையை வேகப்படுத்துவது தொடர்பான வேலைகளில் இறங்குவது என்றும் மோடியும் ஜப்பான் பிரதமர் அபேயும் (தோஷிபாவும், ஹிடாச்சியும்...!) முடிவு செய்துள்ளனர்.
-----------------------------------------------------------------
ஜப்பானில் எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் நடக்காத சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆஸ்திரேலியா மூலமாக இந்தியாவுக்கு இந்த வாரத்தில் நடக்கப் போகிறது.
---------------------------------------------------------------------------------
யுரேனியத்துடன்' வரும் ஆஸி.. பிரதமர்!!---------------
அணு உலைகளைக் கட்ட இந்தியாவை விட ஆர்வமாக இருப்பது அமெரிக்க அணு உலை நிறுவனங்களான ஜி.இ. போன்றவை தான் என்பதால், இந்தியாவுக்குத் தேவையான யுரேனியத்தைத் தரச் சொல்லி ஆஸ்திரேலியாவிடம் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறது. (இந்தியாவுக்குத் தரக் கூடாது என்று சொன்னதும் அமெரிக்கா தான். ஆனால், இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது)
-------------------------------------------------------------------------------
இந் நிலையில் இன்று இந்தியா வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் யுரேனியம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறார். ஆனால், இதை முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வந்துள்ளார். இதை இந்தியா ஏற்றுக் கொண்டுவிட்டது. இதனால் விரைவிலேயே ஆஸ்திரேலிய யுரேனியம் இந்தியாவுக்கு வரலாம்.
--------------------------------------------------------------------------------
அதே நேரத்தில் உக்ரைனில் கலாட்டா செய்து வருவதால் ரஷ்யாவுக்கு யுரேனிய சப்ளையை ஆஸ்திரேலியா கடந்த இரு நாட்களுக்கு முன் நிறுத்திவிட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் ஆண்டு தான் இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டன. இதையடுத்து இதுவரை 100 டன் யுரேனியத்தை ரஷ்யாவுக்கு ஆஸ்திரேலியா அனுப்பி வைத்துள்ளது. இந் நிலையில் இப்போது ஏற்றுமதிக்கு தடா போட்டுவிட்டது.
-------------------------------------------------------------------------------------
ஆஸியில் ஒரு அணு உலை கூட இல்லையாமே:---------------------
இந்தியா இப்போது 6 அணு சக்தி மையங்களில் 20 சிறிய அணு உலைகளை இயக்கி சுமார் 4,700 மெகாவாட் மின்சாரம் தயாரித்து வருகிறது. இவையும் பாதி நேரம் முழு அளவில் செயல்படுவது இல்லை.. காரணம் யுரேனிய தட்டுப்பாடும் தொழில்நுட்பப் பிரச்சனைகளும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 2 சதவீதம் மட்டுமே. இதை 25 சதவீதமாக உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தான் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
------------------------------------------------------------------------
அதே நேரத்தில் உலகிலேயே மிக அதிகமான யுரேனியம் தாதுவை வைத்துள்ள ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்க ஒரு அணு உலை கூட இல்லை என்பது தான் ஆச்சரியமான உண்மை. அந்த அளவுக்கு நிலக்கரியும், இயற்கை எரிவாயும் அபரிமிதமாக கொட்டிக் கிடக்கிறது!--------------
வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக டக்ளஸ் தேவானந்தாவுக்கு அனுமதி
கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
------------------------------------------------------------------------------------
1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி சென்னை சூளைமேடு பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில், திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர் மீது டக்ளஸ் தேவானந்தா உள்பட பலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
------------------------------------------------------------------------------------
இதில் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக சூளைமேடு போலீஸார், டக்ளஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது, 1993-ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா தலைமறைவானார்.
------------------------------------------------------------------------------------
இதனால் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது.
------------------------------------------------------------------------------------
இந்த நிலையில் இந்தியாவுக்கு வந்தால் எனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால், தன் மீதான வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்கக் கோரி அமர்வு நீதிமன்றத்தில் டக்ளஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை, அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
------------------------------------------------------------------------------------
இதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை திரும்பப் பெறவும், வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கும் அனுமதி கோரி டக்ளஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
------------------------------------------------------------------------------------
இந்த மனு, நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
------------------------------------------------------------------------------------
ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை நிலுவையில் உள்ளபோது, மனுதாரர் இதர அரசு அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அவரைக் கைது செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
------------------------------------------------------------------------------------
இரு நாடுகளுக்கிடையே இருந்த நல்லுறுவு காரணமாக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரர் அவரது மனுவில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------
ஏற்கெனவே, அவர் மீது 13 முறை தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. அதனால், இந்தியா வந்தால் பாதுகாப்பு இல்லை என மனுதாரர் கருதுகிறார். அவரது யூகத்தை நாம் புறக்கணிக்க முடியாது.
------------------------------------------------------------------------------------
எனவே, மனுதாரரின் மனு மீது அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விôசரணைக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் மனுதாரர் ஆஜராக அனுமதி வழங்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------
மேலும், விசாரணையின் போது மனுதாரர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கருதினால் அவர் நேரில் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகும்போது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
Tuesday, September 9, 2014
பாலியல் துஷ்பிரயோகத்தில் ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினர்: ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்
சொமாலியாவில் நிலைகொண்டுள்ள ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினர் அங்கு பலவீனமான சூழ்நிலையிலுள்ள பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
உணவு உதவிப் பொருட்கள் கிடைக்க வேண்டுமானால், பாலுறவுக்கு உடன்பட வேண்டும் என பெண்களும் சிறுமிகளும் வற்புறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------
பெண்கள் மற்றும் சிறுமிகளாக இருபத்தோரு பேரின் வாக்குமூலங்களைப் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் தயாரித்துள்ளது.
---------------------------------------------------------------------
புருண்டி, யுகாண்டா போன்ற் நாடுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் இவ்வகையான பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என அவ்வறிக்கை கூறுகிறது.
---------------------------------------------------------------------
மருத்துவ உதவி கேட்டு வரும் பெண்களும், ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினர் தங்கியுள்ள தளங்களுக்கு தண்ணீர் கேட்டு வருகின்ற பெண்களும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
---------------------------------------------------------------------
சொமாலியாவில் அல்ஷபாப் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கு எதிராக சண்டையிடுவதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் அடங்கிய ஆப்பிரிக்க ஒன்றிய படையினர் ஏழு வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
---------------------------------------------------------------------
ஹியுமன் ரைட்ஸ் வாட்ச்சின் குற்றச்சாட்டுக்கு ஆப்பிரிக்க ஒன்றியம் இதுவரை பதிலளித்திருக்கவில்லை.
Monday, September 8, 2014
சிறீலங்காவில் சீனாவை முந்தும் முயற்சியில் ஜப்பான் திவிரம்!
சிறீலங்காவில் சீனாவை முந்தும் முயற்சியில் ஜப்பான் திவிரம்!
. 2012 உலக வங்கி அறிக்கை பெருவியன் மரம் ஏற்றுமதி 80% விறோதமாக கடதப்படுகிறது
கிட்டத்தட்ட பெரு நிலப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு அமேசான் மழைக்காடுகளில் அடர்ந்த காட்டில் சூழப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------
2012 உலக வங்கி அறிக்கை பெருவியன் மரம் ஏற்றுமதி 80% விறோதமாக கடதப்படுகிறது
மத்திய சீனாவில் Shennongjia இயற்கை தேனீ வளர்ப்பு
ஒரு தேனீ வளர்ப்பவர் மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில், Shennongjia இயற்கை ரிசர்வ் Beehives சரிபார்க்கிறது,
இந்தியாவில் வெள்ளத்தால் பாலம் சேதம்
6ஆம் நாள் இந்தியாவின் ஜம்மு பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு நிகழ்ந்தது. ஒரு பெரிய பாலம் வெள்ளத்தால் சேதமடைந்தது. 2014ஆம் ஆண்டு இந்தியாவில் இயற்கை சீற்றத்தால் சுமார் 250 பேர் உயிரிழந்தனர்.
Friday, September 5, 2014
ஒரு வீட்டு 314.000 யுவான் பெறப்பட்டது
லியாங்ஷன் யி தன்னாட்சி எல்லை, சிச்சுவான் மாகாணத்தில் இயன்ஷே கிராமத்தில், கிராமத்தில் 13.11 மில்லியன் யுவான் ($ 2.17 மில்லியன்) பகிர்வு, 14 ஜனவரி 2014 அன்று கிராமம் அறிமுகப்படுத்தியது, . ஒரு வீட்டு 314.000 யுவான் பெறப்பட்டது
தேயிலை விவசாயிகள் பெரிய ஆண்டு இறுதியில் போனஸ் பெரும் காட்சி
தைவான் புகைப்பட 'லென்ஸ்கள்
இந்தோனேஷியா உள்ள மக்கள் எரிமலைகள் நிழலில்
மவுண்ட் Sinabung கரோ மாவட்டத்தில், இந்தோனேஷியா வடக்கு சுமத்ரா மாகாணத்தின், ஜனவரி 20, 2014 இல் நமன் Teran கிராமத்தில் இருந்து எரிமலை வெடிப்பு புகைப்படம்
உலகின் மீகப்பெரிய நீர் தேக் அணை
சூரியன் எரிமலை புகைப்படம்
அமெரிக்காவின் நாசா அண்மையில் சூரியன் எரிமலை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. சூரியனின் மேற்புறம், வண்ணமிகுந்த இழுதுமீன் போலிருக்கிறது. இந்தப் புகைப்படம் நாசா வெளியிட்ட மிக தெளிவான சூரியன் எரிமலை புகைப்படமாகும்.
சீன அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர்கள் எதிர்ப்பு
ஹொங்கொங்கின் அடுத்த தலைவரை தேர்வுசெய்வதில் சீனா புதிய விதிகளை அறிவித்திருப்பதற்கான காரணங்கள் பற்றி பெய்ஜிங்கின் மூத்த அதிகாரி ஒருவர் பேசிய நேரத்தில் ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களும், சட்டசபை உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
-------------------------------------------------------------------------
மத்திய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கோஷமிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
--------------------------------------------------------------------------------
ஹொங்கொங் மக்கள் தங்களுடைய தலைமை நிர்வாகியை 2017ல் சுதந்திரமாக தேர்வுசெய்யலாம் என்று அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து சீனா பின்வாங்கிவிட்டது என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
--------------------------------------------------------------------------------
2017ல் ஹொங்கொங்குக்கான தலைமை நிர்வாகியை தேர்வு செய்ய நடக்கவுள்ள தேர்தலில் யார் போட்டியிடலாம் என்பதற்கான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் நேற்று ஞாயிறன்று சீனா அறிவித்திருந்தது.
--------------------------------------------------------------------------------
சீன அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற ஒரு தேர்வுக் குழுவில் பாதியளவானோருக்கும் கூடுதலானவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.
--------------------------------------------------------------------------------
இந்த தேர்தலில் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே போட்டியிட முடியும் என்றும் நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளனது.
--------------------------------------------------------------------------------
தற்போதைய விதிகளின் பிரகாரம் ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர் தரப்பிலிருந்து எவருமே தலைமை நிர்வாகி பதவிக்கு போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதாகவே தெரிகிறது.
--------------------------------------------------------------------------------
ஹொங்கொங் சுதந்திர அரசியல் அலகாக உருவாக வேண்டும் என்றோ, சோஷலிஸ பாதையிலிருந்து நாடு திசை மாற வேண்டும் என்றோ விரும்புபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று சீன அதிகாரி லீ ஃபெய் கூறினார்.
--------------------------------------------------------------------------------
ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களின் ஆர்ப்பாட்டம் நடந்த அதேநேரம் பெய்ஜிங் ஆதரவு ஆர்வலர்கள் சிலரும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். ஹொங்கொங் மக்கள் அரசியல் ரீதியில் எந்த அளவுக்கு பிளவுபட்டுள்ளார்கள் என்பதை இந்த போட்டி ஆர்ப்பாட்டம் எடுத்துக்காட்டியது.
--------------------------------------------------------------------------------
சீனாவில் ஒற்றைக்கட்சி கம்யூனிஸ ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கிலான அதிபர் சீ ஜின்பிங்குடைய கொள்கையின் அங்கமாகவே ஹொங்கொங் தொடர்பான சீனாவின் முடிவுகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம்.
--------------------------------------------------------------------------------
முன்பு பிரிட்டிஷ் காலனியாக இருந்து சீனாவுடன் இணைக்கப்பட்டிருந்த ஹொங்கொங்கில் மட்டும்தான் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்க முடியும்.
--------------------------------------------------------------------------------
சீனாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஹொங்கொங்கில் பேச்சு சுதந்திரமும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரமும் ஒப்பீட்டளவில் அதிகம்.
--------------------------------------------------------------------------------
ஆனால் சீனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய எவரும் ஹொங்கொங்கில் தலைவராக வந்துவிடுவதைத் தடுக்கும் நோக்கில் சீனா தற்போது புதிய விதிகளை அறிவித்துள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வேல்ஸில் நேட்டோ மாநாடு
அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
எஸ்டோனியா சென்றுள்ள அதிபர் ஒபாமா, அந்நாட்டின் தலைநகர் டல்லின் நகரில் இருந்து கருத்து வெளியிடுகையில், கொலையாளிகளின் நடவடிக்கை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.
--------------------------------------------------------------------------------------
தன்னை இஸ்லாமிய தேசம் என்று அழைத்துக்கொள்கிற அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்கா முடிவாக உள்ளது என்று ஒபாமா கூறினார்.
--------------------------------------------------------------------------------------
சொட்லொஃப் கொல்லப்பட்டதைக் காட்டும் வீடியோவில் பிரிட்டிஷ் பணயக்கைதி ஒருவரையும் கொல்லப்போவதாக பயங்கரவாதிகள் எச்சரித்திருக்கும் நிலையில், பிரிட்டனில் நெருக்கடி நிர்வாகத்துக்கு பொறுப்பான உயர்மட்ட கோப்ரா குழு அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------------
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
வேறு சில அமெரிக்கப் பிரஜைகளும்கூட இஸ்லாமிய தேச ஆயுததாரிகளின் பிடியில் இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அமெரிக்க ராஜங்கத்துறை சார்பகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
ஜேம்ஸ் ஃபொலி என்ற வேறொரு அமெரிக்க ஊடகவியலாளரும் சென்ற மாதம் இதே பாணியில் இஸ்லாமிய தேசத்தவரால் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------
ஃபொலீ கொல்லப்பட்டதைக் காட்டிய வீடியோவில் 31 வயதான சொட்லொஃப்பும் காண்பிக்கப்பட்டிருந்தார்.
--------------------------------------------------------------------------------------
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிரியாவின் வட பகுதியில் வைத்து அவர் கடத்தப்பட்டிருந்தார்.
--------------------------------------------------------------------------------------
ஜேம்ஸ் ஃபொலி கொல்லப்பட்ட வீடியோவில் பேசியிருந்தவரைப் போல சொட்லொஃப் கொலை வீடியோவிலும் முகமூடி அணிந்திருந்த நபர் இங்கிலிஷ்காரர் பாணியில் ஆங்கிலம் பேசியிருந்தார்.
--------------------------------------------------------------------------------------
இரண்டு வீடியோவில் வருவதுமே ஒரே ஆள்தான் என்று தாங்கள் கருதுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஃபிலிப் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் அண்மைய வான் தாக்குதல்களால் வட இராக்கில் முன்னேற முடியாமல் போனதை அடுத்து இஸ்லாமிய தேச அமைப்பினர் ஆத்திரத்தில் இந்த அமெரிக்க ஊடகவியலாளர்களைக் கொன்றிருப்பதாகத் தெரிகிறது.
--------------------------------------------------------------------------------------
அமெரிக்க விமானங்களை தாக்க வல்லமையில்லாத நிலையில், வேறு விதமான தகவல் யுத்தத்தை நடத்துவதற்காக அவர்கள் இப்படியான குரூரமான காரியத்தில் இறங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தொடங்கப்பட்டது 10,000 அதி பயங்கர தீவிரவாதிகள்
இந்த அமைப்பில் 10,000 அதி பயங்கர தீவிரவாதிகள் உள்ளனர். நவீன ஆயுதங்களை வைத்துள்ளனர்.
-----------------------------------------------------------------------
அஸ்ஸாத்துக்கு எதிராக
சிரிய அதிபர் பாஷர் அஸ்ஸாத்துக்கு எதிரான புரட்சி அமைப்பாகத்தான் முதலில் ஐஎஸ்ஐஎஸ் தொடங்கப்பட்டது. அப்போது இதன் அபாயகரமான முகத்தை யாரும் சரிவர கவனிக்கவில்லை.
-------------------------------------------------------------------------------------
வடக்கு ஈராக் கபளீகரம்
ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு ஈராக்கை கபளீகரம் செய்தபோதுதான் இதன் ஷாக் பின்னணி குறித்து அனைவரும் அறிந்து அதிர்ந்தனர்.
--------------------------------------------------------------------------
இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பு
இன்று இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை வைத்துள்ளது ஐஎஸ்ஐஎஸ். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை இது வளைத்து விட்டது.
------------------------------------------------------------------------
சிரியா, ஈராக்கின் பலவீனமே காரணம்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வசம் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு சிக்கக் காரணம், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள மிகவும் பலவீனமான அரசுகளும், உள்நாட்டுக் குழப்பங்களுமே.
------------------------------------------------------------------------
எண்ணெய் விற்பனையிலும்
-------------
வெறும் தீவிரவாத அமைப்பாக மட்டும் இல்லாமல் இது எண்ணெய் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 6 லட்சம் பவுண்டு பணத்தையும் சம்பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல் பிணையாளிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலமாகவு்ம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்.
Thursday, September 4, 2014
படங்கள்: இந்தியாவின் நிலக்கரி சுரங்க
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நிலக்கரி உற்பத்தி செய்யும் நாட்டின் நிலக்கரி விநியோகம் நாட்டின் எரிசக்தி தேவைகளை 60% ஆகும், ஆனால் நிலக்கரி துறை மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்ட உள்ளது. அரிந்தம் முகர்ஜி கிழக்கு இந்தியாவில் தங்கள் பணி பற்றி ஏதோ நிலக்கரி சுரங்க புகைப்படங்கள்.இந்தியாவில், நிலக்கரி வளம் கொழிக்கும் பகுதியில் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கிழக்கு ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில், இது மின் உற்பத்தி மற்றும் எஃகு மற்றும் சிமெண்ட் செய்யும் முக்கிய எரிபொருள் ஆகும். ஆனால் சுரங்க புகை மற்றும் நச்சு வாயுக்கள் உமிழும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஒரு முக்கிய காரணியாக, உள்ளது.
பல நாள் முழுவதும் நிலக்கரி தூசி சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் நோய்கள்
குழு பணி தொடங்கும் ஒரு நிலத்தடி சுரங்கத்தில் உள்ளே ஆழமான போகிறோம்.
வினோதமான உயிரினங்கள் டாஸ்மேனியா
வினோதமான உயிரினங்கள் டாஸ்மேனியா ஆஃப் ஒரு ஆராய்ச்சி கப்பல் போது 1986 இல் ஆழ்கடல் இருந்து எடுத்துத புகைப்படம்
Subscribe to:
Posts (Atom)













































