Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, February 18, 2014
2ஆம் இணைப்பு- மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.- குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :
ஜனாதிபதி ஆணைக்குழுவின் காணாமல் போனோர் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கையின் போது இராணுவத்தினர் மேற்கொண்ட அடாவடி நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் துணிந்து தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.
---------------------------------------------------------------------------------------------
அவற்றில் சில சாட்சியங்கள் வருமாறு, யாழ்ப்பாணம் புங்கங்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா ரணேஸ் என்ற இளைஞரின் தாயார் தனது வாக்குமூலத்தில், வயறிங் வேலை செய்யும் எனது மகன் 1996-08-27 அன்று நாவலர் வீதி ஊடாகச் சென்றுகொண்டிருந்த போது லலித், ராஜபக்ஷ ஆகிய இரண்டு இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டார் என்பதை சம்பவத்தினை நேரடியாகப் பார்த்த மக்கள் எனக்குத் தெரிவித்தனர். அவர் காங்கேசன்துறை இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தாம் அறிந்ததாகவும் இன்றுவரையில் அவர் குறித்த எந்தத் தகவலும் இல்லை எனத் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------
கொழும்புத்துறையைச் சேர்ந்த மரியகொறற்றி என்ற தாய் தனது சாட்சியத்தில், 19-12-2006 அன்று தனது மகன் திலீபன் கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் இராணுவத்தினர் மறித்துக் கதைத்தாகவும் அதனை தான் கண்ணுற்றதாகவும் பின்னர் தனது மகனைக் காணவில்லை என்று தெரிவித்தார். தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் சுண்டிக்குளி இராணுவ முகாமிற்கு சென்று கேட்டபோது அவரை விடுதலைப்புலிகள் கொண்டு சென்றுவிட்டனர் என்று இராணுவத்தினர் தெரிவித்த போது, அருகருகாக 25 முகாம்களில் இருக்கும் நீங்கள் ஏன் விடுதலைப்புலிகளைப் பிடிக்கவில்லை? என்று தான் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------------
நேசம்மா என்ற தாய் தனது சாட்சியத்தில், 1996-07-29 அன்று எங்களுடைய வீட்டிற்கு பாசையூர் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் வந்தனர். அப்போது எனது மகன் ஜெஸ்லி (வயது 21) படித்துக்கொண்டிருந்தார். வந்தவர்கள் எங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனப் பார்க்கப் போவதாகத் தெரிவித்து எங்கள் அனைவரையும் அழைத்து ஒரு அறையில் வைத்து மூடிவிட்டுச் சென்றனர். சிறிது நேரத்தில் திரும்ப வந்து எனது மகன் ஜெஸ்லியை பிடித்துச் சென்றனர். அவர் தொடர்பில் இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை அவரை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
---------------------------------------------------------------------------------------------
கொழும்புத்துறையைச் சேர்ந்த இராசேந்திரம் நாகேஸ்வரி என்ற தாய் தனது சாட்சியத்தில், 2006-19-12 அன்று நான்கு வாகனங்களில் நள்ளிரவு நேரம் எங்களது வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் குடும்ப அட்டையைக் காட்டி அதில் உள்ளவர்களைப் பார்க்கப்போவதாகக் கூறிக் கொண்டு அங்கு நின்றிருந்த எனது மகன் தவரூபன் (வயது 23) அவரை பிடித்துச் சென்றனர். ஜனாதிபதி ஆணைக்குழுவில் மக்கள் ஒவ்வொருவரும் தமது முறைப்பாடுகளை உருக்கமாக முன்வைத்த போது அங்கு நின்றிருந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment