Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Sunday, March 16, 2014
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது :
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது :
கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே.
-----------------------------------------------------------------------------------------------------------------------
பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன. பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். பீட்ரூட் மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. கர்ப்பிணிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிகள் சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள்:
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள்:
-----------------------------------------------------------------------------------------------------------
கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதன்முறையாக கருத்தரித்திருப்போர், அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள், அசௌகரியங்கள் நிகழும். கர்ப்ப காலமான 9 மாதங்கள் முழுவதிலும் நீடிக்கக்கூடும், ஆனால் சில அசௌகரியங்கள் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ அல்லது மூன்று மாத காலமோ இருந்து, பின் மறைந்து விடும்.
-----------------------------------------------------------------------------------------------------------
எவ்வாறாயினும், இந்த அசௌகரியங்களை, குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடிய மருந்து மாத்திரைகளின் உதவியின்றி, ஓரளவுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியவாறும், எப்படியாவது இயற்கை முறையில் குறைப்பதற்கான தேவையை நன்கு உணர்வோம்.
-----------------------------------------------------------------------------------------------------------
அவ்வாறு கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அவற்றை சிறிது காலத்திற்கேனும் வராமல் தடுப்பதற்கும் சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்...
-----------------------------------------------------------------------------------------------------------
• சுடுநீர் குளியல் உடல் பாகங்களின் இயக்கத்தை சீராக்கும். ஆனால், கர்ப்பிணிகள் மிதமான சூடு இருக்கும் தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். மேலும், மிக நீண்ட நேரம் குளியலறையில் இருப்பதையும் தவிர்த்து, 15 முதல் 20 நிமிடங்களுக்குள் குளித்து முடித்து வெளியே வர வேண்டியது அவசியம். இந்த கர்ப்ப கால அசௌகரியத்திலிருந்து, எவ்வித அபாயங்களோ அல்லது பக்கவிளைவுகளின்றி வெளியே வர, இந்த சுடுதண்ணீர் குளியல் மிகவும் பாதுகாப்பான ஒரு வழிமுறையாக விளங்குகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------
• சூடு பரப்பும் பைகள் தற்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்து சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் சரிசெய்யலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஒருவேளை அது போன்ற சூடு பரப்பும் பைகள் இல்லையெனில், ஒரு சுத்தமான துணியை சுடுதண்ணீரில் நனைத்து, அத்துணியில் அதிகமாக இருக்கக்கூடிய நீரைப் பிழிந்து விட்டு, அதனை தசைப்பிடிப்பு உள்ள இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------
இது தற்காலிக நிவாரணம் தருவதாக இருப்பினும், உடனடியாக பலன் அளிக்கக்கூடிய ஒரு சிகிச்சை முறையாகும். முக்கியமாக இது கீழ் முதுகு போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய தசைப்பிடிப்புகளுக்கு சிறப்பான நிவாரணம் வழங்கக்கூடியதாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------
• பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய தாதுப்பொருட்கள், தசைப்பிடிப்புகளுக்கு எதிரான நற்பயன்கள் கொண்டவைகளாக நம்பப்படுகின்றன. தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------
வாழைப்பழங்கள், அதிக அளவு பொட்டாசியச் சத்து உள்ளது. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.
இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?
இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?
-------------------------------------------------------------------------------------------------------------------
ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?
-------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------
தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் குணமடைவீர்கள்!
-------------------------------------------------------------------------------------------------------------------
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
-------------------------------------------------------------------------------------------------------------------
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு--------
1 கப் இஞ்சிச் சாறு-----------
1 கப் புண்டு சாறு------------
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.---------
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்
கடல் சார் பல்கலைக்கழகம்-அசோக்வரதன்ஷெட்டி நியமனம்- ஜி.கே வாசன் ஊழல் அமைச்சர்தான்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜரால், ஊழல் செய்த மத்தியமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டில் ஆ.ராசா, ஜி.கே.வாசன், மு.க.அழகிரி, ப.சிதம்பரம் அந்த பட்டியலில் இடம் பெற்றது. மத்தியமைச்சர் வாசன் ஆதரவாளர்கள் ஊழல் அமைச்சர்கள் பட்டியலில் எங்கள் தலைவரா என்று கொதித்து எழுந்து, சென்னை கண்டன் போஸ்டர்கள் ஒட்டினார்கள்.------------------------------------------------------------------------------------------------
ஜனவரி2ம் தேதி கப்பல் போக்குவரத்துத்துறையின் வெப்-சைட்டில், செய்தி வெளியாகி இருந்தது. அதை அப்படியே வெளியீட்டு உள்ளோம்.
Shri K Ashok Vardhan Shetty (IAS. Retd.) today assumed charge as the Vice Chancellor of Indian Maritime University Chennai. His appointment has been approved by the President of India for a period of five years or until he attains an age of 65 years.
kSP மத்திய அரசின் கடல்சார் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ்(ஒய்வு) நியமிக்கப்பட்டுள்ளார். அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ், கடந்த திமுக ஆட்சியில் நிழல் துணை முதலமைச்சராக செயல்பட்டார். அப்போது அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ்ஸின் அதிகார துஷ்பிரயோகம், எல்லை மீறியது. அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ் மீது பல புகார்கள் வந்தும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை.
------------------------------------------------------------------------------------------------
2011 அதிமுக ஆட்சி அமைந்தவுடன், ஆவண காப்பகத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆனால் அலுவலகமே போகவில்லை. தமிழக அரசிடம் விருப்பு ஒய்வு மனு அளித்தார். விருப்பு ஒய்வு மனுவை தமிழக அரசு நிராகரித்தது. தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றார். உச்சநீதிமன்றம், அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ், விஜிலென்ஸில் வழக்குகள் நிலுவையில் இல்லையென்றால், அவரை விருப்ப ஒய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
------------------------------------------------------------------------------------------------
ஆனால் அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ், ஆவண காப்பகத்தின் ஆணையராக இருந்த போது, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஏழு முறை அரபு நாடுகளுக்கு சென்று வந்தார். இது தொடபாக புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. ஆனால் தலைமைச் செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ம் அசோக்வரதன்ஷெட்டிக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசு அனுமதி இல்லாமல், அரபு நாடுகளுக்கு சென்று வந்த கோப்பை முதல்வரிடம் காட்டாமல், அவரை விருப்ப ஒய்வு கோப்பில் முதல்வர் அவர்களிடம் கையெழுத்து பெற்றார்.
------------------------------------------------------------------------------------------------
தலைமைச் செயலாளர் ஷீலாபாலகிருஷணன் ஐ.ஏ.எஸ், திமுக ஆட்சியில் செய்த உதவிக்கு நன்றியாக அசோக்வரதன்ஷெட்டியை காப்பாறினார்.
------------------------------------------------------------------------------------------------
திமுக தலைவர் கருணாநிதியிடம் நெருக்கமாக இருக்கும் அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ்(ஒய்வு)யிடம் பெங்களூரில் நடக்கும் தமிழக முதல்வரின் சொத்துகுவிப்பு வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
------------------------------------------------------------------------------------------------
தமிழக முதல்வரின் சொத்துகுவிப்பு வழக்கில், முதல்வருக்கு தண்டனை வாங்கி கொடுத்து, சிறையில் அடைத்து, அவரை அரசியலிருந்து ஒய்வு பெற வைப்பது என் பணி என்று திமுக தலைவர் கருணாநிதியிடம், அசோக்வரதன்ஷெட்டி உறுதி அளித்துள்ளார்.
இதனடிப்படையில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசனிடம், கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு இணை வேந்தராக நியமிக்கும்படி திமுக தலைவர் கருணாநிதி பேசினார். சில நாட்கள் கழித்து, அதற்கான தகுதி இல்லை என்று டி.ஆர்.பாலுவிடம், அமைச்சர் ஜி.கே வாசன் கூறினார்.
------------------------------------------------------------------------------------------------
Complete Biodata
------------------------------------------------------------------------------------------------
Name :
Dr. K Ashok Vardhan Shetty
------------------------------------------------------------------------------------------------
Identity No.
01TN028000
------------------------------------------------------------------------------------------------
Service/Cadre/Allotment Year :
IAS/Tamil Nadu/1983
------------------------------------------------------------------------------------------------
Source of Recruitment :
RR
------------------------------------------------------------------------------------------------
Date of Birth :
31/07/1957
------------------------------------------------------------------------------------------------
Sex :
MALE
------------------------------------------------------------------------------------------------
Place of Domicile :
Karnataka
------------------------------------------------------------------------------------------------
Mother Tongue :
KANNADA------------------------------------------------------------------------------------------------
Indian Languages Known :
TAMIL HINDI ENGLISH
Foreign Languages Known :
Retirement Reason :
ON SUPERANNUATION
II. Details of Central Deputation
------------------------------------------------------------------------------------------------
A. 1. Whether Presently on deputation to GOI? No
------------------------------------------------------------------------------------------------
2. Date of Start of Central Deputation
-----------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------
3. Expiry Date of tenure of Central Deputation
------------------------------------------------------------------------------------------------
4. Tenure Code
------------------------------------------------------------------------------------------------
B. If in Cadre, date of reversion from Central Deputation, if any
------------------------------------------------------------------------------------------------
C. Whether debarred from Central Deputation? No
------------------------------------------------------------------------------------------------
If so, period of debarment -
III.Educational Qualifications
------------------------------------------------------------------------------------------------
Sl.No Qualification
------------------------------------------------------------------------------------------------
Institute/University/Place Subjects Division
------------------------------------------------------------------------------------------------
1 B E MECH.ENGG. First
------------------------------------------------------------------------------------------------
2 B.D.S. LAW Second
------------------------------------------------------------------------------------------------
3 MBA
------------------------------------------------------------------------------------------------
U/BIRMINGHAM BUSINESS ADMN. PUBLIC SERVICE First with Distinction
------------------------------------------------------------------------------------------------
மாஜி கர்நாடக் முதலமைச்சர் மற்றும் மாஜி மத்தியமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மகனும், அசோக்வரதன்ஷெட்டியின் மனைவியின் தம்பி மச்சானும் தொழில் பாட்னர். அதனால் எஸ்.எம்.கிருஷ்ணாவும், சிபாரிசு செய்தார்.
------------------------------------------------------------------------------------------------
கடல்சார்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருக்கான விதிமுறைகளை மீறி அசோக்வரதன்ஷெட்டி ஐ.ஏ.எஸ்(ஒய்வு) நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.எம்.கிருஷ்ணா, திமுக தலைவர் கருணாநிதி இருவரும் சிபாரிசு செய்திருந்தாலும், அசோக்வரதன்ஷெட்டியை இணை வேந்தராக நியமித்தால், அது நிர்வாக முறைகேடாகும் என்று கூறி அமைச்சர் ஜி.கே.வாசன் மறுத்திருக்கலாம். அதை ஏன் அவர் செய்யவில்லை. நிர்வாக முறைகேடு மற்றும் ஊழலுக்கு ஜி.கே வாசன் துணை போனது வெளிச்சமாகி உள்ளது. ஊழலுக்கு துணை போன அமைச்சர் ஜி.கே வாசன் எப்படி நேர்மையான அமைச்சர் என்று சொல்லமுடியும். ஆம் ஆத்மி கட்சி ஊழல் அமைச்சர்கள் பட்டியலில் ஜி.கே வாசனை சேர்த்தது சரிதான்..
இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது
தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விடயத்தில் உண்மையாகி போய் இருக்கிறது.
தேவையில்லாத பாதுகாப்பு துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை திருவாரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் மீத்தேன் எனப்படும் இயற்கை எரிவாயு.
--------------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பகுதியில் மக்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்த அக்கறை சிறிதும் இன்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையும் இன்றி மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி மூன்று நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் ( Oil and Natural Gas Corporation Ltd ONGC ) ,
--------------------------------------------------------------------------------------------------------------------
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )
--------------------------------------------------------------------------------------------------------------------
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd GEECL ).
--------------------------------------------------------------------------------------------------------------------
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------
இந்தத் திட்டம் எண்ணிலடங்கா சிக்கல்களை உருவாக்கும். சில முக்கியப் பிரச்சினைகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------
1
நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது.
--------------------------------------------------------------------------------------------------------------------
2
மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
3
மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. (அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point என்பர்.) அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
4
நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
5
இந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள் , தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
6
மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள் இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------
7
தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
8
இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலை அமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே விவசாயம் செய்ய நமக்கு இருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால் அழிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
9
இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம் மீது தவறுதலாக தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.
அவசரத் தொலைபேசி எண்
1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
-----------------------------------------------------------------------------------------------------------------------
2.வங்கித் திருட்டு உதவிக்கு ———— —9840814100
-----------------------------------------------------------------------------------------------------------------------
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
-----------------------------------------------------------------------------------------------------------------------
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
-----------------------------------------------------------------------------------------------------------------------
5.போலீஸ் SMS :- ————————-9500099100
-----------------------------------------------------------------------------------------------------------------------
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—9840983832
-----------------------------------------------------------------------------------------------------------------------
7.போக்குவரத்து விதிமீறல் SMS : — —-98400 00103
-----------------------------------------------------------------------------------------------------------------------
8.போலீஸ் : ———————————–100
-----------------------------------------------------------------------------------------------------------------------
9.தீயணைப்புத்துறை :————————-101
-----------------------------------------------------------------------------------------------------------------------
10.போக்குவரத்து விதிமீறல——————–103
-----------------------------------------------------------------------------------------------------------------------
11.விபத்து :—————————————–100, 103
-----------------------------------------------------------------------------------------------------------------------
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
-----------------------------------------------------------------------------------------------------------------------
13.பெண்களுக்கான அவசர உதவி : ———–1091 புதிய எண்: 181
-----------------------------------------------------------------------------------------------------------------------
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
-----------------------------------------------------------------------------------------------------------------------
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
-----------------------------------------------------------------------------------------------------------------------
அமரர் ஊர்தி : ———————————— 155377.
-----------------------------------------------------------------------------------------------------------------------
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
-----------------------------------------------------------------------------------------------------------------------
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
-----------------------------------------------------------------------------------------------------------------------
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
-----------------------------------------------------------------------------------------------------------------------
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910-----------------------------------------------------------------------------------------------------------------------
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
-----------------------------------------------------------------------------------------------------------------------
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
-----------------------------------------------------------------------------------------------------------------------
22. அமரர் ஊர்தி : —————————— 155377.
-----------------------------------------------------------------------------------------------------------------------
23. அமரர் குளிர் சாதன பெட்டி : ———— 044 - 1913.
-----------------------------------------------------------------------------------------------------------------------
24. மின்சாரத்துறை பொது புகார் : ———— 155333.
-----------------------------------------------------------------------------------------------------------------------
23. சட்ட உரிமைகள் கழகம் ——————— 7418898888
-----------------------------------------------------------------------------------------------------------------------
911-சர்வதேச அவசர உதவி எண்:
ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கபட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயனைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சியம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
எப்பொழுது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்பொழுது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல்துறை கட்டுப் பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள 044-2844 7200 என்ற எண்ணை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்தச் சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இதுபோக, ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை. அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டுக்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் உள்ளது. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும்பொழுது நமது நாட்டுக்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது சாதாரணமாகிவிட்டது. அங்கு நாம் ஏதேனும் பிரச்னையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க பயன்படும்படியான, ஒரு பிரத்யேக அவசர உதவி எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்துக்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வதுபோல் அமைத்துள்ளனர். இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால்கூட போதும். அவர்கள் நம்மை தொடர்புகொண்டு உதவி செய்வார்கள். செல்ஃபோனில் கீபேட் லாக் ஆகியிருந்தாலும்கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும்கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில்கூட டயல் செய்ய முடியும். எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக்கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.
தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி
தகவல் பெறுவதற்கான விண்ணப்ப மாதிரி
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல்களைக் கேட்டுப் பெறுவதற்கு தனியாக விண்ணப்பப்படிவம் ஏதும் கிடையாது. எனினும் ஒரு வெள்ளைத் தாளில் கீழ்கண்ட மாதிரி எழுதி விண்ணப்பிக்கலாம். இதைக் கேட்கும் தகவலுக்கேற்ப மற்றும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.
அனுப்புநர்
(விண்ணப்பதாரரின் பெயரும், முகவரியும் குறிப்பிடவேண்டும்)
பெறுநர்
(உரிய அலுவலகத்தின் பொதுத்தகவல் அலுவலர்/ உதவி பொதுத்தகவல் அலுவலர் முகவரி குறிப்பிடப்பட வேண்டும்)
ஐயா/அம்மையீர்,
தயவு செய்து கீழ்க்கண்ட தகவல்களை கொடுக்கவேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தகவல் விவரம்
2. நான் கீழ்கண்ட ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டுகிறேன்.
( பார்வையிட விரும்பும் ஆவணங்கள் )
3. எனக்கு கீழ்கண்ட ஆவணங்களின் படிகளை கொடுக்குமாறு வேண்டி
கேட்டுக்கொள்கிறேன்.
(ஆவணங்களின் விவரம்)
4. நான் தகவல் அறியும் கட்டணங்கள் செலுத்தியுள்ளேன், அதன் விவரங்கள் கீழ்வருமாறு
கட்டணம் செலுத்தியதற்கான சான்றுகளை இணைத்துள்ளேன்.
5. எனக்கு மேற்கண்ட தகவல்கள் / ஆவணங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. விரைவில் எனக்கு
கொடுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இடம்
நாள்
விண்ணப்பதாரர் கையொப்பம்
கும்மாங்குத்து ஆட்டம் இலங்கையில்
இனத்தின் விடுதலைக்காக தீயிட்டு தன்னை தானே மாய்த்து கொண்டவர்கள் இந்நேரம் இருப்பின் இன்னொருமுறை அவர்கள் அனைவரும் இந்த மானம் கெட்ட தமிழ் இனத்தில் பிறந்தோமா என்று மறுமுறை தீயிட்டு மடிவார்கள் . இங்கே மழை, வெயில் பாராமல் இனத்தின் விடுதலைக்காக உலகத்தோடு போராடி கொண்டு இருக்கிற வேலையில் கும்மாங்குத்து ஆட்டம் இலங்கையில்...
தமிழக மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடகர்கள் இலங்கையில் நடக்க இருந்த இசைக் கச்சேரியை புறக்கணித்தனர். எனினும் விஜய் தொலைகாட்சி தொகுப்பாளர் டிடி மற்றும் சின்னத்திரை நடிகர்கள் இலங்கை சென்று இசை நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை தந்துள்ளது . சின்னத் திரை நடிகைகள் அங்கு சென்று குத்தாட்டம் போட்டுள்ள படங்கள் இப்போது வெளிவந்துள்ளது . தமிழர்களின் பணத்தை பெற்று வாழ்க்கையை நடத்தும் இவர்கள் தமிழர்களுக்கே துரோகம் இழைத்திருப்பது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது . இதற்கு விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தக்க பதில் சொல்ல வேண்டும். இந்நிகழ்ச்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் தொடர்பு உள்ளதா இல்லையா என்பதை அந்நிறுவனம் விளக்க வேண்டும் . தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி எங்கு சென்று குத்தாட்டம் போட்ட நடிகைகளும் பதில் சொல்ல வேண்டும் .
Subscribe to:
Posts (Atom)

