Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 23, 2014

சிரியாவிற் போரிடும் இருதரப்பினரும் கடும் சொற் பிரயோகங்களாலும் சுவிசில் மோதிக்கொண்டனர்:-

அரசியல் முரண்பாடு காரணமாக சிரியாவிற் போரிடும் இரு தரப்பினரும் மிகவும் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களால் தம் பகைமை உணர்வை சுவிஸ் நாட்டில் இடம் பெறும் மகாநாட்டில் வெளிப்படுத்தினர். பேச்சு வார்த்தைகளின் முதல் கட்டமே இருதரப்பினருக்குமிடையே உள்ள தூரத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
பஷார் அல் அசாத் ( Baschar Ali Assad ) இன் வெளிவிவகாரச் செயலர் புரட்சியாளரை நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளென்றும், மறு முனையில் தேசிய எதிர்க் கூட்டணியின் தலைவரான அகமட் அல் ஷர்ப ( Ahmal Ali-Dscharba ) தனது முறைக்கு, அரசாங்கத்தை போர் முறைகளை மீறும் நாசிக் கூட்டத்திற்கு ஒப்பிட்டும் உரக்கப் பேசினர். 2011 ஆம் 2013 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் Baschar Al Assad இன் அரசாங்கத்தால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பதினோராயிரம் சிரியப் பிரஜைகளின் ( Photo ) படங்களும் எதிரணியால் காட்டப்பட்டது. அக்காலத்தில் சிரியாவை விட்டுத் தப்பிச் சென்ற போராளிகள் நாட்டிற்கு வெளியே கொண்டு சென்ற படங்கள் அவையெனவும் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து உரையாற்றிய அமெரிக்க வெளிவிவகார செயலர் John Kerry, தன் சொந்த பிரஜைகளைக் கொண்டு குவிக்கும் ஒருவர் அந்த நாட்டை தொடர்ந்து ஆள முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாதென்றார். சித்திரவதைகளும், எரி குண்டுகளும், அதிவேக யுத்த ஏவுகணைகளும் ( Scud Rockets ) ஒரு நாட்டை ஆள முடியாது என்றும் குறிப்பிட்ட அமெரிக்க வெளி விவகார செயலர் ஜோன் கெரி, அமையப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் பிரச்சனைப்படும் இருதரப்பினரும் விரும்பாத எவரும் இடம் பெறுதல் பொருந்தாது என்றும் கூறினார். முஸ்லீம் புரட்சியாளர் பக்கம் பார்வையைச், செலுத்திய அவர் ஆயிரம் பயங்கரமான தீவிரவாதக் குழுக்கள் தம் வெறுப்பு நிறைந்த ( Hate-Filled ) கொள்கைகளைப் பரப்புவதற்காக மக்களிற்குத் துன்பம் தருவதற்கான இடம் புதிய சிரியாவில் அமையலாகாது. என்றார். மூன்று வருட கடும் யுத்தத்தின் பின் இந்தப் பேச்சுவார்த்தை இடம் பெறுவது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இப்போர் முடிவிற்கு கொண்டு வரப்படல் வேண்டும் மெனவும் சிரியாவின் வெளி நாட்டுச் செயலர் வாலிட் அல் மெளலீம் ( Walid Al Maullim ) கூறினார். இவர் ஜ நா சபையின் பொதுச் செயலர் Ban Ki Moon இன் தடையை கருத்திற் கொள்ளாது பத்து நிமிடங்களுக்குப் பதில் இருபது நிமிடங்கள் பேசி முடித்தார். இந்த இரு தருப்பினரினதும் சந்திப்பு ஒரு புதிய துவக்கத்திற்கு வழிவகுக்கக் கூடுமென Ban Ki Moon தன் உரையில் குறிப்பிட்டார். இவர்களை விட இந்த மகாநாட்டில் கலந்து கொண்ட உலக நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள். வெள்ளிக் கிழமையிலிருந்து இரண்டு பிரிவினர் களுக்குமிடையே நேரடிப் பேச்சுக்கள் ஆரம்பிக்க உள்ளது. இப் பேச்சு வார்த்தை அதிசயிக்கத்தக்க முடிவை இன்றே கொணராது என்பதும், பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்பது மிக முக்கிய அரசியல் நோக்கம் எனவும் ஜேர்மன் வெளிவிவகார செயலர் வி(F)ராங் வோல்ரர் ஸ்ரைன் மயர் ( Frank Waltar Steinmeir ) உட்பட்ட ராஜதந்திரிகளின் கருத்தாக அமைந்தது.. 2011 ஆம் ஆண்டிலிருந்து சிரியாவில் போர் இடம் பெறுவதும், போரில் 11,000 பேர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமையும், மொத்தமாக ஒருலட்சத்து முப்பதாயிரம் மக்கள் இறந்தமையும் குறிப்பிடப்பட்டது. ஈரான் ஜனாதிபதி Hassan Rohani சுவிஸ் நாட்டின் Davos நகரில் இடம் பெறும் மகாநாட்டில் கலந்து கொள்ளப் புறப்படும் சமயம் Genf II மகாநாடு. எவ்விதத்திலும் தனக்குப் பருத்த நம்பிக்கையை ஊட்டுவதாக இல்லையென்றும், இந்த மகாநாடு புரட்சிக்காரருக்கெதிரான போரை முடிவிற்கு கொண்டுவர வழி சமைக்காதெனவும் கூறியுள்ளார். ஐரோப்பிய செய்தியாளர் மகேந்தி:-

No comments:

Post a Comment