Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 23, 2014

கொட்டும் வெண்பனியில் உக்ரேன் தலைநகரில் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் பலர் பலி பலர் காயம்:-

கொட்டும் வெண்பனியில் இடம் பெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்திற் தோன்றிய கலவரத்தில் ( Ukraine ) உக்ரேன் நாட்டின் தலைநகர் Kiew வில் ஜந்து உயிர்கள் பலியானதுடன் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றுள்ளனர்.. ஆட்சியாளர்களும் எதிரணியினரும் புதன் கிழமை காலை நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு ஒருவரை ஒருவர் பரஸ்பரமாய் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Ukraine பிரஜைகளின் இறப்பிற்கு ஜனாதிபதி விக்ரர் ஜனுகோவிட்ச்சும் ( Wiktor Janukowitsch ) உள் நாட்டு மந்திரி விற்றலி சகாற்ஷெங்கோவும் (Vitali Sachartschenko) பொறுப்பாளிகளென எதிரணி கூறுகிறது. அராஜகப் புரட்சியையும் நாட்டைத் துண்டாடும் நடவடிக்கைகளையும் எந்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென்றும், பயங்கரவாதப் புரட்சியாளர்கள் தங்கள் நடவடிக்கையின் விளைவிற்குப் பொறுப்பாக வேண்டுமெனவும், முதன் மந்திரி நிக்கொலி அசரோ ( Nikoli Asarow ) கூறியுள்ளார். புதன் கிழமை காலை Ukraine இன் Dynamo Stadium இல் குழுமி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்த எதிரணியினரை Ukraine இன் பிரத்தியேகப் பொலிஸ் பிரிவினர் கண்ணீர்ப் புகை சகிதமும், மின்னும் கைக்குண்டு கொண்டும் ( Flash Granate ) தாக்கிக் கலைக்க முயன்றனர். எதிரணியினர் கற்களையும் எரிகுண்டுகளையும் வீசிப் பொலிசாரைத் தாக்க, பொலிசார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜந்து பேர் இறந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களை நிலை குலையச் செய்துள்ளது. எதிரணியினரை மைதானத்திலிருந்து கலைக்கும் நடவடிக்கை இன்று இரவு நிகழலாம் என, அங்கு இன்னும் கூடி நிற்பவர் மத்தியில் கலவரம் கலந்த நம்பிக்கை தோன்றியுள்ளது.. மனித குல சுதந்திரம் குலையும்போது சட்டமும் சம்பிரதாயமும் நிலை தளர்வது இயல்பாக இருப்பினும் இரு தரப்பினரும் இரத்தப் பெருக்கு ஏற்படும் செயலில் ஈடுபடாது பொறுமை காத்து பேச்சு வார்த்தைக்குத் தயாராக வேண்டுமென ஜேர்மன் வெளிவிவகார செயலர் வி(F)ராங் வோல்ரர் ஸ்ரைன் மயர் ( Frank Waltar Steinmeir ) கூறியுள்ளார்.

No comments:

Post a Comment