Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 23, 2014

பா.ஜ., மாநில தலைவர் வலியுறுத்தல் :வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்'

ஈரோடு: தமிழகத்தில் வறட்சி நிலவுவதால், அனைத்து வேளாண் கடன்களையும், தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும், தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், ஈரோட்டில், உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: வாஜ்பாய் ஆட்சியில், 58 சதவீத நிதி, விவசாயம், கிராம முன்னேற்றத்துக்கு செலவிடப்பட்டது. அதில், விவசாயிகள் கடன் நிவாரணம், இன்சூரன்ஸ் திட்டம் உள்ளிட்ட, ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 120 கோடி மக்களுக்கு, உணவளிக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு, வெற்றி பெற முடியாது. அரசியல்வாதிகள், மக்களின் வேலைக்காரர்கள். அவர்களை, முறையாக வேலை வாங்க வேண்டியது, விவசாயிகளின் கையில்தான் உள்ளது. விவசாயிகள் கடன் கட்டவில்லை என, அவர்களது வீடு, டிராக்டர்களை, அரசு, ஜப்தி செய்கிறது. ஆனால், முன்னாள் எம்.பி.,க்கள் பலர், பதவி இல்லாத நிலையிலும், அரசாங்க வீடுகளை காலி செய்யாமல் உள்ளனர். அவர்களை, காலி செய்ய வைக்க முடியாத மத்திய அரசு, விவசாயிகளின் சொத்துக்களை, ஜப்தி செய்கிறது. வேளாண் தொழில் பாதிக்கப்பட்டால், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, கொலை, கொள்ளை அதிகரித்து, நாடு சீரழியும். திருச்சியில், டிராக்டர் ஜப்தியை எதிர்த்து, சாலை மறியல் செய்த, 250 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களை விடுவிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில், வறட்சி நிலவுவதால், அனைத்து, வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். உண்ணாவிரதத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாஜலம் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment