Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 31, 2013

மறைந்த நம்மாழ்வார் உடல் கரூர் அருகே 'வானகம்' வேளாண் பண்ணையில் அடக்கம் செய்யப்பட உள்ளது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நம்மாழ்வார் (74). மே 10, 1938ல் பிறந்த அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. (விவசாயம்) பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள வேளாண் மண்டல ஆய்வு நிலையத்தில் 1963 ஆம் ஆண்டில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து 6 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயன உரம், ரசாயன பூச்சிக் கொல்லி பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகினார். தொடர்ந்து, வேளாண்மையில் வீரிய மிக்க விதைகள், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு எதிராகவும், இயற்கை வழி வேளாண்மையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். மேலும், பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான மாற்றுக் கருத்துகளையும் நம்மாழ்வார் முன் வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2002 ஆம் ஆண்டில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், 2003 ஆம் ஆண்டில் பூம்புகாரிலிருந்து கல்லணை வரையும், புதுக்கோட்டையிலும் நடைபயணம் சென்றார். இதுபோல, வாழ்நாள் இறுதிவரை அவர் மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும், இயற்கை விவசாயத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும் பாடுபட்டு வந்தார். கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார். இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. 253 அமைப்புசாரா அமைப்புகளுக்கு அமைப்பாளராகவும் இருந்தார், இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும், மீனா என்ற மகளும் உள்ளனர், பேரிகை என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார், சமீப காலமாக மத்திய அரசு அறிவித்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்தும், கிராமப்புற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களாக, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அத்திவெட்டி கிராமத்தில் உள்ள, லெனின் என்பவர் வீட்டில் தங்கி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலம் பாதித்தது. திங்கள்கிழமை இரவு, 8 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மரணமடைந்தார். அவரது உடல், கரூர் மாவட்டம், சுருமான்பட்டி, 'வானகம்' வேளாண் பண்ணையில் 01.01.2014 புதன்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரது உடல் தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment