Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, December 16, 2013
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை
இந்திய மக்களிடம் பேராதரவு பெற்றுள்ள விளையாட்டு எது என்றால், சந்தேகமில்லாமல் கிரிக்கெட்தான். கிரிக்கெட் விளையாட்டிற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அரசும் தனியார் அமைப்புகளும் வேறெந்த விளையாட்டிற்கும் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து சரியான பதில்களோ நடவடிக்கை களோ இல்லை என்றாலும், கிரிக்கெட் விளையாட்டை தேசத்தின் அடையாளம், புதிய மதம், பக்தி, கடவுள் என்றெல்லாம் உயர்த்திக்கொண்டே போகும் போக்கு நீடிக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாகப் பார்க்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ஆட்டத்திலிலிருந்து அவர் ஓய்வுபெற்றதும், அதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்பருவத்திலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட சச்சினுக்கு அவரது தந்தையும் அண்ணனும் அந்த ஆர்வத்தை வளர்க்கும் சக்திகளாக விளங்கினர். உரிய பயிற்சிகளின் மூலம் தன் திறமையை வளர்த்துக்கொண்டு மும்பையில் நடந்த போட்டிகளிலும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும் நன்றாக ஆடி ரன்களைக் குவித்தார். அதன் விளைவாக, 1989-ஆம் ஆண்டு தனது 16-வது வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆடினார்.
சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் திறமை நேர்த்தி யாகவும், புதுவிதமாகவும் அனைவரும் வியக்கும்படியும் இருந்தது. பந்துவீச்சிலும் அவர் தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களை விஞ்சும் வகையில் சச்சினின் ஆட்டம் அமைந்தது. டெஸ்ட் போட்டிகள் எனப்படும் 5 நாள் போட்டிகளிலும், 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிய டெண்டுல்கர் பல போட்டிகளிலும் சதங்கள், அரை சதங்கள் என ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். அதுவரை, கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகளை சச்சின் முறியடித்து புதிய சாதனைகளை அவர் படைத்தார்.
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 51 சதங்களையும் 68 அரை சதங்களையும் அடித்து 15ஆயிரத்து 921 ரன்களை எடுத்துள்ளார். அதுபோல 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும் 96 அரை சதங்களையும் அடித்து 18ஆயிரத்து 426 ரன்களைக் குவித்துள்ளார். உலகக் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இத்தனை ரன்களையோ சதங்களையோ அடித்ததில்லை. டெஸ்ட்டிலும் ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து டெண்டுல்கர் அடித்த சதங்களின் எண்ணிக்கை மட்டுமே 100. பந்துவீச்சின் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். கபில்தேவ், ஸ்ரீகாந்த் போன்ற மூத்த வீரர்களுடன் தொடங்கிய அவரது பங்கேற்பு, டோனி, ஷேவாக் என இளைய வீரர்கள் வரை 24 ஆண்டுகள் தொடர்ந்தது. இதில் அவருக்கு சரிவுகள் ஏற்பட்ட காலமும் உண்டு. அவற்றிலிலிருந்து தன் திறமைகளால் மீண்டு வந்து மீண்டும் மீண்டும் சாதனைகளைப் படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அதனால்தான் 40 வயது வரையிலும் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் நீடிக்க முடிந்தது.
சச்சினின் விருப்பப்படி அவர் பங்கேற்ற கடைசிப் போட்டி அவரது சொந்த மண்ணான மும்பையில் நடைபெற்றது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்து ரசிகர்களிட மிருந்தும் கிரிக்கெட் விளையாட்டிலிலிருந்தும் 2013 நவம்பர் 16-ந் தேதி பிரியா விடைபெற்றார் சச்சின். அன்றைய தினமே இந்திய அரசு அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதாக அறிவித்தது.
விளையாட்டு வீரர் ஒருவர் பாரத் ரத்னா விருது பெறுவது இதுவே முதல் முறை. 40 வயதில் ஒருவர் இந்த விருதை பெறுவதும் முதல் முறை. கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கர், விருது பெறுவதிலும் சாதனை படைத்திருக்கிறார். அவரைப் போல இன்னும் பல விளையாட்டுகளிலும் உள்ள சாதனையாளர்களை இந்திய அரசு கௌரவப்படுத்தி, அனைத்து விளையாட்டுகளுக்கும் சரிசமமான அளவில் ஊக்கம் அளித்து இளைஞர்களின் திறனை வளர்க்கவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment