Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, December 16, 2013
மரண தண்டனைக்கு எதிரான உயிர்வலி
மன்னார்குடி, டிச.16–
மன்னார்குடியில் தமிழின உணர்வாளர்கள் அமைப்பு சார்பில் மரண தண்டனைக்கு எதிரான உயிர்வலி என்ற ஆவணப்படத்தின் குறுந்தகடு (சி.டி.) வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வெங்கட்ராமன் தலைமை தாங்கினர். லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் செந்தில் குமார் வரவேற்றார்.
முன்னாள் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொங்கு தமிழர் இயக்க செயலாளர் பாரதிச்செல்வன், திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் காளிதாஸ், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் அய்யப்பன், அகில இந்திய தலித் மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள் கலந்து கொண்டு ஆவண படத்தை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் வெளியிட்டுள்ள கருத்தால் எனது மகனுக்கும் ராஜீவ்காந்தி கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது 23 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த பின்னர் தெரியவந்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க காரணமாக இருந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நாடு முழுவதும் தூக்குதண்டனை பெற்ற பலர் அப்பாவிகளாக உள்ளனர். அவர்களிடம் மறுவிசாரணை செய்து தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக போராட முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment