Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, February 28, 2014
கத்தரில் கேரள தூதரகம்?
இந்தியாவில் அரசு மற்றும் அதிகார வட்டத்தில் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் எவ்வளவு அதிகமோ அதற்குச் சிறிதும் குறைவின்றி, இன்னும் கூறினால் "கேரளா தான் இந்தியா" என்று அரபிகள் நினைக்கும் அளவுக்கான ஆதிக்கம் வளைகுடா நாடுகளில் உண்டு!
-----------------------------------------------------------------------------
எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசுப் பணிகளாக இருந்தாலும்சரி அதில் குறைந்தது ஒரு மலையாளியையாவது பார்த்துவிட முடியும்!
-----------------------------------------------------------------------------
"நாடு எது? மலபாரியா?", வளைகுடா நாடுகளில் வேலைக்கு வரும் புதியவர்களிடம் பெரும்பாலான அரபிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுள் ஒன்று இது! "இந்தியா எவ்வளவு பெரிய நாடு; அதில் கேரளா எவ்வளவு சிறிய மாநிலம்; வடகேரளத்தின் ஆறு மாவட்டங்கள் இணைந்த பகுதியே மலபார் என்பது; இவன் மலபார்தான் இந்தியா என்று நினைத்துள்ளானே" எனத் தோன்றும். வளைகுடா நாடுகளின் முன்னேற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் கேரள மாநிலத்தவரின் பங்கினைக் குறித்து ஆய்வு செய்தால், அரபிகளின் இந்த எண்ண ஓட்டத்திற்கான காரணம் ஓரளவு புரியும்!
-----------------------------------------------------------------------------
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அச்சமூகம் வாழும் பகுதியின் முன்னேற்றத்துக்கு எவ்வகையில் பங்களிப்பு செய்கிறது என்பதைப் பொறுத்து அமையும். பயன்பெறும் சமூகம் என்பதைத் தாண்டி, கொடுக்கும் சமூகமாக மாறுவது மட்டுமே அச்சமூகத்தினை முன்னேற்றப் பாதைக்குச் சீராக வழிநடத்திச் செல்லும். அவ்வகையில் கேரள மாநிலத்தவர்களிடமிருந்து படிக்கவும் தெரிந்து கொள்ளவும் பல விசயங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளன!
-----------------------------------------------------------------------------
ஆனால், அவர்களின் இம்முன்னேற்றம் இந்தியாவிலுள்ள பிற மாநில மக்களின் உரிமைகளையும் களவாடும் வகையில் தனி ஆதிக்கமாக வளர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல! அதற்கு இந்திய அரசும் துணைபோகுமெனில் அது மிகப்பெரிய அநியாயம்!
-----------------------------------------------------------------------------
இப்பதிவின் மூலம் கேரள மாநிலத்தவரின் அத்தகையதொரு அநியாய ஆதிக்கத்தினை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
வளைகுடா நாடுகளுள் ஒன்றான கத்தரிலுள்ள இந்திய தூதரகத்திலும் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் மிகைத்துள்ளதன் அடையாளமாக, தூதரக தினசரி நடவடிக்கைகளில் வாடிக்கையாளரின் புரிதலுக்காக வைத்துள்ள எல் சி டி ஸ்க்ரீன் அறிவிப்பினைக் கூறலாம்.
-----------------------------------------------------------------------------
அறிவிப்புப் பலகை ஆங்கிலம், அரபி மற்றும் மலையாள மொழிகளில் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------
இந்திய நாட்டு மக்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்திய தூதரகத்தில் பயன்பெறுவோராக இருப்பதால் அறிவிப்புப் பலகையில் ஆங்கிலம் இடம்பிடித்துள்ளது சரியானது!
-----------------------------------------------------------------------------
கத்தர் நாட்டின் மொழி அரபி என்பதாலும் அரபு நாட்டுக் குடிமகன்களுள் பெரும்பாலோருக்கு அரபியன்றிப் பிற மொழிகள் தெரியாது என்பதாலும் அறிவிப்புப் பலகையில் அரபி இடம்பிடித்துள்ளதும் சரியானது!
-----------------------------------------------------------------------------
இந்திய நாட்டின் மிகப் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக இருக்கும் இந்தி எங்கே போனது?
-----------------------------------------------------------------------------
ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பேசும் மலையாளத்தை மட்டுமே அறிவிப்புப் பலகையில் இந்திய தூதரகம் வைத்திருப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறது? "இந்தியா என்றால் மலபார்தான்" என்ற அரபிகளின் தவறான எண்ணம் சரியானதுதான் என சொல்ல வருகிறதா?
-----------------------------------------------------------------------------
கேரளம் மட்டுமன்றித் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா முதல் வடமாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் என அநேகமாக எல்லா மாநில மக்களுமே கத்தரில் வேலைபார்க்கும் நிலையில், அவர்கள் அனைவருமே ஒன்று ஆங்கிலம் படிக்கவேண்டும்; அல்லது அரபி படிக்கவேண்டும்; அல்லது ஒரேயடியாக எல்லோரும் மலையாளியாக மட்டும்தான் இருக்கவேண்டுமென விரும்புகிறதா? அல்லது மலையாளிகள் மட்டும்தான் இந்தியாவிலிருந்து அங்கே பணிபுரிகின்றனர் என்று நினைக்கிறதா?
-----------------------------------------------------------------------------
ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்தியத் தூதரகம் செயல்படுகிறது எனில், அதனைத் தெளிவாக "கேரளா தூதரகம்" என அறிவித்துவிடலாமே?
-----------------------------------------------------------------------------
- கத்தரிலிருந்து அப்துல் ரஹ்மான்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment