Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 28, 2014

சக சிப்பாய்கள் 5 பேரை சுட்டுக்கொன்று இந்திய சிப்பாய் தற்கொலை

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இந்திய சிப்பாய் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து படையினர் பலியானார்கள். -------------------------------------------------------------------------------------------------- தலைநகர் ஸ்ரீநகருக்கு சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் புதன் கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கியால் சுட்ட சிப்பாயும் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவம் தெரிவிக்கிறது. -------------------------------------------------------------------------------------------------- இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றுக்கு ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது. -------------------------------------------------------------------------------------------------- இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பகுதி, இந்திய மற்றும் பாகிஸ்தான் பகுதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறது. இரு நாடுகளும் தத்தம் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரப் பகுதியின் எல்லையில் துருப்புகளை நிலை நிறுத்தியிருப்பதால், அங்கு ஒரு பதற்ற நிலை நிலவுகிறது. -------------------------------------------------------------------------------------------------- இந்திய சிப்பாய்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றும், மோசமான பணி நிலைமைகள் நிலவுவதாகவும், விடுப்பில் செல்ல எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அடிக்கடி கூறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

No comments:

Post a Comment