Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, February 26, 2014

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை: தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜெயலலிதா

மக்களவை தேர்தலுக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார். ------------------------------------------------------------------------------------------------- இந்த விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறியமை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- அத்துடன் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும், தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்பபட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ------------------------------------------------------------------------------------------------- தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அ.தி.மு.க வலியுறுத்தும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment