Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, February 11, 2014
வடக்கில் அதிகளவான மாணவர்கள் இடைவிலகிச் செல்கின்றனர்:
யுத்தத்தின் பின்னர் வடக்கில்ழ அதிகளவான மாணவ மாணவியர் இடைவிலகிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு மாணவ மாணவியர் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையானது மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தியை மோசமாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரே அதிகளவில் இடைவிலகுகின்றனர்.
மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத பல குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் பாடசாலைக் கல்வியை கைவிட்டு விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதியளவு தொழில் வாய்ப்பு இன்மை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றினால் இவ்வாறு பாடசாலை மாணவ மாணவியர் இடைவிலகிச் செல்வதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிவலிங்கம் சத்தியசீலன் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர்வதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக் கல்வியை சிரமப்பட்டு பூர்த்தி செய்து கொள்ளும் மாணவ மாணவியர் இரண்டாம் நிலைக் கல்வியைத் தொடர முடியாது, தொழில்களைச் தேடிச் சென்றுவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் உடல் ரீதியான உழைப்பை வழங்கி வாழ்க்கையைக் கொண்டு நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் வறிய குடும்பங்களுக்குக் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் 40,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை பெண்களே வழிநடத்தி வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தின் பொறுப்புக்களை பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் போதியளவு வருமானம் இல்லாத காரணத்தினால் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment