Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, February 11, 2014
பர்மாவின் பழைய காட்சிகள் புதிய ஜனநாயக அமைப்பிற்குள் பொருந்த வில்லை- ஜேர்மன் ஜனாதிபதி ஜோகாகிம் கவுக்:
ஜேர்மன் ஜனாதிபதி ஜோகாகிம் கவுக் தன் ஆசிய விஜயத்தின் போது, பேர்மா நாட்டின் விடுதலை விக்கிரகமென அவரால் கருதப்படும் சன் சூகி (Aung San Suu Kyi) ஐச் சந்தித்த விநாடியில் எல்லை கடந்த உணர்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தார்.
ஓரினத்தின் பாரம்பரியங்கள் பற்றியும் அதன் விடுதலை பற்றியும் பேசும் சந்தர்ப்பங்களில் கவுக் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் காணப்படுவது வழக்கம். அரசியல் அடிமைகளாக மக்கள் கையாளப்பட்ட கிழக்கு ஜேர்மனின் குடிமகன் இவராவார். அமெரிக்கக் கறுப்பினத்தின் விடுதலைக்காகப் போராடிய மாட்டீன் லூதர் கிங், யூத இன அழிப்பைத் தடுக்க 1933 களில். ஜேர்மன் கிறிஸ்தவர்களுக்கும் கிட்லரின் தேசியப் பொதுவுடமை ஆட்சிக்கும் எதிராகப் போராடிய டீற்றிக் போன்ற பலர் தன் வாழ்க்கைப் பயணத்தின் முன்னோடிகளாக இருக்கிறார்களென்றும், இன்று இன்னொரு முன்னோடியான சுதந்திர விக்கிரகத்தை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டுப் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
தங்களையும் தங்கள் ஜனநாயக விடுதலைப் போராட்டத்தையும் முழுமையாகப் புரிந்து கொண்ட கவுக்கின் பெருந்தன்மைக்குத் தான் தலை வணங்கி நன்றி செலுத்துவதாக, பதினைந்து வருடங்கள் வீட்டுச் சிறை வாசம் அனுபவித்தவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான சன் சூகி தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------
அதே சமயம் தற்போதைய மியான்மாரில் ஜனநாயக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும், உலகிற் சகல சீர்திருத்த வழிமுறைகளும் மெதுவாக நகர்வது இயல்பெனப் புரிந்திருந்தும் மிகவும் தாமதமான முன்னேற்றத்தை ஜீரணிப்பது கடினமாகவுள்ளதெனவும் சன் சூகி தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------
அத்தோடு வருகின்ற வருடத்தில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சன் சூகி போட்டியிட உள்ளதாகவும் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------------------------
அதன் பின் கவுக் மியான்மாரின் ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசிய போது ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கும் அரசைப் புகழவும் தவறவில்லை. அதே வேளை பாராளுமன்றத்தில் 25 சத வீத அங்கத்தவர்கள் இன்னும் பழைய இராணுவ அதிகாரிகளாகக் காணப்படுவதையும், பழைய ஆட்சியில் செய்தித் தணிக்கைக் குழுவின் அதிகாரியாக இருந்தவர் இன்று தேசியத் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதல்வராக இருப்பதையும், பல இராணுவ அதிகாரிகள் தம் சீருடையைக்களைந்து சிவில் உடை அணிந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளதெனவும் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------------------------
பழைய காட்சிகள் புதிய ஜனநாயக அமைப்பிற்குள் பொருந்த வில்லையெனவும் சுட்டிக் காட்டிய கவுக், ஜனநாயகப் பாதையிற் பயணிக்கும் மியன்மாரின் முன்னேற்றத்திற்கு ஜேர்மன் நாட்டின் உதவியை சகல வழிகளிலும் எதிர்பார்க்கலாம் எனவும் கூறி ஜேர்மன் அரசின் சார்பில் 50 லட்சம் ஈரோக்களை மியன்மாரின் முன்னேற்றத் திட்டத்திற்கு இலவசமாக வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment