Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, January 24, 2014
சிரியாவின் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியும் ஒமாமாவின் மௌனமும் - அவர் மீதான விமர்சனங்களும்:-
அமெரிக்க ஜனாதிபதி Barack Obama இன் அரசியல் நிலை பலதரப்பட்ட விமர்சனங்கள் மத்தியில் மிகவும் இக்கட்டான கட்டத்தை அடைந்துள்ளது.
சிரியா யுத்தத்தை ஒரு முடிவிற்குக் கொண்டு வர நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை எவ்விதத்திலும் வெற்றி அளிக்காததும், Barack Obama தன் அதிகாரத்தை உபயோகிக்காது மெளனம் சாதித்ததும் விமர்சனங்களுக்கு முக்கிய கருவாக அமைந்துள்ளது.
வெளிவிவகாரச் செயலராக முன்னைய அமெரிக்க அரசாங்கத்திற் கடமையாற்றிய Hillary Clinton, சர்வதேச விடயங்களில் அமெரிக்கா சற்று தீவிர ஊக்கத்தோடு செயற்பட வேண்டிய காலகட்டமிது எனக் குறிப்பிட்டுள்ளார். இரசாயன ஆயுதங்களைத் தன் சொந்த மக்கள் மேல் உபயோகித்துக் கொல்லும் நாட்டு அரசாங்க விடயங்களில் தலையிடுவதற்கும், அச் செயலை உடனடியாக நிறுத்தாது போகின் ஆயுதத் தாக்குதலை நிச்சயம் நட்ததப் போவதாக மிரட்டுவதற்குமான சரியான நியாயம் அமெரிக்கா பக்கம் இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டில் Barack Obama ஆல் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தது. மத்திய கிழக்கு அரசியற் பிரச்சனைகளில் அமெரிக்கா தீவிரமாக இயங்குமென்றும், அணு ஆலைப் பிரச்சனை சம்பந்தமாக ஈரானுடன் நெருங்கிய பேச்சு வார்த்தையை நடத்துமென்றும் Irak - Afghanistan நாடுகளிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்ளுமென்றும் கூறிய விடயங்களை, அந்த விஞ்ஞாபனத்தில் சுட்டிக் காட்டியதுபோல் நடந்து கொண்டமையும் எவ்வித எதிர்வாதமுமில்லாத Obama வின் வெற்றிகளாகும்.
சுதந்திரத்திற்கான Noble பரிசு பெற்ற போது பேசிய பேச்சிலும் Obama வின் அரசியல் சித்தாந்தம் தெளிவாக அமைந்திருந்தது. அப் பேச்சின் போது ஆயுதம் தரியாத சொந்த மக்களைக் கொல்லும் அரசாங்கத்தின் கொடூரத்தை அல்லது உள்நாட்டுக் கலகத்தை ( Civil War ) நிறுத்துவதற்கு மனிதாபிமான முறையிலான பிற நாட்டின் இரானுவ நடவடிக்கை தேவைப்படுகிறது என்று அழுத்தமாகக் கூறியிருந்தார். மேற் கூறிய போர்ச் செயலிற்கெதிராக எவ்வித நடவடிக்கைகளையம் கையாளாது இருந்தால் நம் அறிவிற்கு உகந்த்தாக அமையாது,. அல்லாமலும் அது மிகவும் மோசமான இழப்புக்கள் மலிந்த நேரம் தாமதித்த தலையீட்டிற்கும் வழி வகுக்கும் என்றும் கூறியிருந்தார்.
மத்திய கிழக்கில் குறிப்பாக ஈராக் யுத்தத்திலும், Afghanistan இலும் நடாத்திய அர்த்தமற்ற போர்களினால் பெற்ற கசப்பான அனுபவத்தால், சொந்த தேசத்தைக் கட்டியெழுப்பி, அதில் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களையும், கல்வி மருத்துவ வசதிகளையும், சம உரிமையையும் பெற்றுத்தரும் வேலைத்திட்டத்தில் Obama அரசாங்கம் அதிக ஊக்கமெடுப்பது நியாயமாகப் படினும், அமெரிக்கா தன் அரசியல் இரானுவப் பலத்தை முறையாகப் பாவிப்பின் சிரியா யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வரலாமெனும் உண்மையை அலட்சியம் செய்வது மனிதாபிமானமில்லை என்கிறது மேற்கத்தேய சார்பு விமர்சகர்களின் பார்வை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment