Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 24, 2014

உக்ரெயின் அரசாங்கம் பதவி விலகாவிடில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்க முடியாது - எதிரணி எச்சரிக்கை:-

Ukraine இன் முன்னாள் ஜனாதிபதி ரி (T)மோஷெங்கோ (Timoschenko), அரசாங்கம் ராஜினிமா செய்வதற்காக இறுதிச் சந்தர்பமாக இன்று மாலை வரை நேரம் குறித்துள்ளார். தரப்பட்ட காலக்கெடுவிற்குள் அரசாங்கம் ராஜினாமா செய்து கொள்ளத்தவறின் இரத்தாறு Kiew நகரில் பெருகுவதைத் தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். ருஷ்ய நாட்டின் உடைவிற்குப் பின் இதுவரையில் காணாத சனத்திரள் வீதிகளில் இறங்குமென்றும், சுதந்திரத்திற்கான உத்வேகம் ( Janukowitsch ) ஜனுக்கோவிற்ச் இன் ஆயுத மிரட்டலைவிடப் பலம் பொருந்தியதென உணரவைக்கப்படும் என விற்றலி கிலிற்ஷ்கோ தெரிவித்துள்ளார் சுதந்திர சதுர்க்கத்தில் குழுமி உள்ள மக்கள் தங்களைச் சுற்றி வெண்பனியால் நிரப்பப்பட்ட கோணிகள், தகரப்பீப்பாக்கள், வேறு பல தளபாடங்கள் கொண்டு தற்காலியப் பாதுகாபுத்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர், மைதானத்தைச் சுற்றி tyre கள் எரிக்கப்படுவதால் விளையும் கரும் புகை, சுதந்திர சதுர்க்கத்தை நிரப்பியும், விரும்பத்தகாத மணத்திப் பரப்பியும் நிற்கும் நிலையில் மைதானம் ஒரே பரபரப்பாகக் காணப்படுகிறது. முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலரும், கிலிற்ஷ்கோ போன்ற எதிர்கட்சி அரசியல் பிரமுகர்களும் மூன்று மணி நேரமாக, ஜனுக்கோவிற்ச்சுடன் நடாத்திய பேச்சு வார்த்தை எவ்வித பயனும் அளிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியும் தற்சமயம் சிறையில் இருக்கும் பெண் ஜனாதிபதியுமான Timoschenkao, எதிரணிக்கு சகலரும் ஒத்தாசையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டதோடு, பாதுகாப்புப் படையினரை எதிரணிக்கு சார்பாக அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்களைத் திருப்பி இப்புரட்சியின் வெற்றிக்கு உதவி புரியுமாறும் அறை கூவல் விடுத்துள்ளார். இறுதியாகக் கிடைக்கப்பெற்ற செய்திகளின் பிரகாரம் புரட்சி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், பாதுகாப்புப் படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. அத்தோடு பல இளம் யுவதிகளும் இளம் வாலிபர்களும் படையினரால் கடத்தப்பட்டு இரகசியமான சிறைகளில் அடைக்கப்பட்டும் வருகின்றனர்.
உக்ரேனின் பிரதமர் நிக்கோலை அஷரவ் ராஜினாமா செய்யக்கோரி, உக்ரேன் பாராளுமன்றத்தின் அவசரகாலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, கீயிலுள்ள ( Kiew ) ஜனாதிபதி விக்ரர் ஜானுகோவிற்ச்சிற்கு அறியத்தரவும் பட்டுள்ளது. ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி:-

No comments:

Post a Comment