Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, December 30, 2013

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை முன்வைக்க ஏற்பாடு? -அ.நிக்ஸன்-

சர்வதேச அழுத்தம் என்பது அரசாங்கத்துக்கு அவ்வப்போது சிறிய அச்சத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அமைந்து விடுகின்றன. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச்சேர்க்கின்றன. அதன் காரணமாக சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைககள் தீவிரமடைந்து வருகின்றன. வெளியுறவு அமைச்சுக்கும் மனித உரிமைகள் அமைச்சுக்கும் ஜனாதிபதி கடும் உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றார். விசேட அதிகாரிகள் குழு ஒன்றை அமைப்பது, வடக்கு கிழக்கில் இருக்கும் பொது நிலையினர், கல்விமான்கள் அடங்கிய குழு மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அமைப்பது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இம்முறை ஜெனிவாவுக்கு செல்லும் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் போருக்கு பிந்திய செயற்பாடுகளை ஆதரங்களுடன் நிரூபிக்கும் வகையில் பேச வேண்டும் என்ற உத்தரவு ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கொழும்பிலும் சந்திப்புகள்:- மார்ச் மாதத்திற்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து போருக்கு பிந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் மனித உhமைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் அதற்காக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்றை அமைச்சர் பேராசியர் பீரிஸ் நியமித்துள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த செயற்திட்டம் நடைபெறுவதாகவும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 2014 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகள் முன்வைக்கவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்கும் எனவும் அது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டம் கருகின்றது. அந்த பாதிப்புகள் பொருளாதார ரீதியில் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் தங்கள் பக்க நியப்பாடுகளை முடிந்தவரை எடுத்துரைக்க அரசாங்கம் திவீரமாக ஈடுபடவுள்ளது என்ற தகவல் வெளியில் கசிந்துள்ளன. ஆணைக்குழு அறிக்கை புடிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழவின் அறிக்கையில் உள்ள முக்கியமான நான்கு சிபாரிசுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தன. கடந்த வருடம் ஜெனீவா தீர்மானத்திலும் கூறப்பட்டிருந்தது. ஆனால் உரிய முறையில் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணு எண்ணிக்கைகளை குறைப்பது. சிவிலி நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகளை நீக்குவது போன்ற விடயங்கள் அரசாங்கத்தினால் செய்யப்படவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, முன்னாள் போராளிகளின் விடுதலை, விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் பலவீனமான செயற்பாடுகள் காணப்படுகின்றன. குறித்த இந்த விடயங்களில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கம் ஒப்பாசாரத்தக்கேனும் சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன. நிரந்தர அரசியல் தீர்வு குறித்த விடயங்களிலும் முன்னேற்றம் இல்லை என்ற காரணத்தினால் தென் ஆபிரிக்க மத்தியஸத்தம் பற்றிய பேச்சுக்கள் அடிப்பட்டன. அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்ளவுள்ள அரசாங்கம் மேற்படி அணுகுமுறைகள் மூலம் குறைந்த பட்சமான சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முற்படுகின்றது. ஆனாலும் அது காலம் கடந்துவிட்ட அணுகுமுறை என்றுதான் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் கூறுகின்றனர். ஆயர்கள் அழைக்கப்படலாம்:- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் அரசாங்கங்களின் பிரதிநிதிகள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும். வேறு அரசியல் கட்சிகள் அல்லது வேறு பிரதிநிதிகள் யாரும் அதிகாரபூர்மாக பங்குபற்ற முடியாது. ஆனால் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில்; மண்டபத்துக்கு வெளியே அரசசார்பற்ற நிறுவனங்களின் விளக்கமளிக்கும் சிறிய கூட்டங்கள், செயற்பாட்டு திட்டங்கள், ஆலோசணைக் கூட்டங்கள் நடைபெறும். அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு இம்முறை வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையினால் சிலர் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் அவ்வாறு அழைக்கப்படுபவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் எழுகின்றமையினால் அந்த முயற்சியை மனித உரிமைச் சபை கைவிடக்கூடிய நிலையும் உண்டு. எனினும் ஆயர்களை அழைப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வட்டாரங்கள்; குறிப்பிட்டன. மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்தும் நேரடியாகவும் பக்கச்சார்பு அற்ற முறையிலும் அறிந்து கொள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை முயற்சிக்கின்றார் என்பதுதான் உள்ளக தகவல்கள். அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதிகள் இந்த வாரம் கொழும்புக்கு வரவுள்ளமைக்கான காரணங்களும் அதுதான். அரசாங்கத்தக்கு சாதாகம்:- மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைச் சபையின் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள்; முக்கியம் பெறவுள்ளன. ஒன்று அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை. இரண்டாவது ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் நிபந்தனைகள், தீர்மானங்கள். ஆனால் அவற்றை அரசாங்கம் எவ்வாறு ஏற்கும் என்பதும் அந்த இரண்டு விடயங்களும் அனைத்து நாடுகளினாலும் முழுமையாக ஏற்கப்படுமா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் இம்முறை சினா மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளமை இலங்கைக்கு சாதகமான விடயம். ஆகவே அடுத்த ஆண்டு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைச் சபையும் அமெரிக்காவும் இன்னும் கூடுதல் வேலைத்திட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் உலக அரசியல் ஒழுங்கு அதற்கு இடமளிக்குமா என்பது மற்றுமொரு கேள்வி. இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தாலும் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க அனுமதிக்கமாட்டர்கள் என்பது கண்கூடு. ஏனெனில் அது இந்திய வெளியுறவுக் கொள்கையுடன் சம்மந்தப்பட்டது. எனவே ஜியோ பொலிற்றிக்ஸ் எனப்படும் பிராந்திய அரசியல் நலனில் இருந்து விடுபட்டு இலங்கையில் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் சிந்தித்தால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தின் போக்கில் மாற்றத்தை எற்படுத்த முடியும்? இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் என்பது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு சிறிய அச்சங்களை அவ்வப்போது ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அது அமைந்து விடுகின்றது. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச் சேர்க்கின்றன. அதன் காரணமாகவே சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment