Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, December 11, 2013

மன்னாரில் காணாமல் போனவர்களது உறவினர்கள் கண்டன ஊர்வலம்

சர்வதேச மனித உரிகைள் தினமான இன்று செவ்வாய்க்pழமை மன்னார் பிரஜைகள் குழு வின் தலைமையில் மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் காணாமல் போனவர்களுடைய உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தினுடன் இணைந்து காணமால் போனவர்களை கண்டு பிடிக்கக்கோரி கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். குறித்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிலும் இடம் பெற்றது. இன்று காலை 11 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவில் இருந்து குறித்த ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணமல் போனவர்களது உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதன் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் தலைவர் ஹேமன் குமார, வாழ்வதற்கான உரிமை அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெனாண்டே,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் ஜே;.பி.சிந்தாத்துரை,அருட்தந்தை எஸ்.நேரு,அருட்பனி எஸ்.டெரன்,மற்றும் காணமால் போன சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் போது குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய முன்னிலையில் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜரில் மேலும் குறிக்கிடுகையில்,,, 1990 வன்செயல் தோன்றிய காலம் தொடக்கம் இன்று வரை காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரும் மன்னார் மக்களின் வேண்டுகோள் 1990ம் ஆண்டு வன்செயல் இந்நாட்டில் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரையான 23 வருடகாலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment