அய்யா பழ நெடுமாறன், வழக்கறிஞர் நல்லதுரை, புதுக்கோட்டை ஜெயசீலன் உள்ளிட்ட 83 பேரும் இன்று காலை 9:௦௦க்கு விடுதலையாகினர்.. ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் வரவேற்க சென்றனர் தற்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்பட 83 பேருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை பிணை வழங்கியது. இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை 9.05 மணிக்கு பழ.நெடுமாறன் உள்பட 83 பேர் விடுதலையானார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன்,
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய பிரிட்டன் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டதில் விதிமீறல் இல்லை என்றும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடித்தது சட்டவிரோமானது என்றும் கூறினார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment