இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டுத் தராவிட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தமிழகம் தழுவிய அளவில் மீனவர் சமுதாயம் கூட்டாகச் சேர்ந்து புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவர்களது அவசர கூட்டம் நடைபெற்றது.
இதில் மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதோடு தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தியd-இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக 1938 இற்கு முன்பாக இரு கடற்பரப்பிலும் மீன்பிடித்து வந்தது போல் பரஸ்பரமாக மீன்பிடித் தொழில் செய்ய மத்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து இருநாட்டு மீனவ பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாத பட்சத்தில் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் ஒருங்கிணைந்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, October 25, 2013
நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவெடுப்பு
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டுத் தராவிட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை தமிழகம் தழுவிய அளவில் மீனவர் சமுதாயம் கூட்டாகச் சேர்ந்து புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவர்களது அவசர கூட்டம் நடைபெற்றது.
இதில் மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதோடு தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தியd-இலங்கை இரு நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக 1938 இற்கு முன்பாக இரு கடற்பரப்பிலும் மீன்பிடித்து வந்தது போல் பரஸ்பரமாக மீன்பிடித் தொழில் செய்ய மத்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து இருநாட்டு மீனவ பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாத பட்சத்தில் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் ஒருங்கிணைந்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment