Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, September 2, 2015
ஏரிப்பாசனம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான நீர் ஆதாரம்
தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசனம்தான் பெருமிதமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வரலாற்று நோக்கில் ஏரிப்பாசனம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான நீர் ஆதாரம். ஏனெனில், 73 சதவிகிதம் பாறைப்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டில், ஆண்டு முழுவதும் மழை பெய்வது இல்லை. ஆகவே, பெய்யும் மழையைச் சேமித்து வைத்தாக வேண்டிய கட்டாயம், தமிழர்களுக்குப் புவியியல்ரீதியாகவே இருக்கிறது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏரிகளை உருவாக்கி ஏரிப் பாசன முறையில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தனர்.
பொதுப்பணித் துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 38,202 ஏரிகள் இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் மேற்பட்ட ஏரிகள் அழிக்கப்பட்டு, இப்போது சுமார் 18 ஆயிரம் ஏரிகள் மட்டுமே மிச்சம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழக ஏரிகளின் சிறப்பு, இதன் சங்கிலித்தொடர் தன்மைதான். ஓர் ஏரி நிரம்பினால் அதில் இருந்து நீர் வழிந்து இன்னொன்றில் நிரம்பும். அதுவும் நிரம்பினால் அடுத்த ஏரி. இப்போது இந்தச் சங்கிலி அறுக்கப்பட்டு ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் அவை நிரம்புவதும் இல்லை; வழிந்து ஓடுவதும் இல்லை.
மாநிலம் முழுக்க பரந்துபட்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே ஏரியில் நீர் தேங்கி நிற்கும்போது நிலத்தடி நீர்வளம் சீராக இருக்கும். ஏரிக்கரைகளில் நிற்கும் மரங்கள், சூழலைக் குளிர்விக்கும். ஏரியில் நீர் இல்லை; கரையில் மரங்களும் இல்லை என்பதால் நிலத்தடி நீர்வளமும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
ஏரிகளுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்களும் சிற்றோடைகளும், ‘ஏரி’ என்னும் உடலின் நரம்புகள். இவை மாநிலம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக ஓடி, நீரை ஏரிக்குச் சுமந்துவரும். இந்த நரம்புகள் அறுத்து வீசப்பட்டுவிட்டதால், உயிரற்றச் சடலமாகக் கிடக்கிறது ஏரி.
தண்ணீர் வழக்குகள்!
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில், குடிதண்ணீர் பிரச்னை அடிதடிகளில் முடிந்து சட்டம்-ஒழுங்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஒரு பெண்ணுக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. கந்தர்வக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியில் நடந்த தண்ணீர் அடிதடியில் இரண்டு பேருக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. கீரனூர் அருகே உள்ள வெம்மேனியில் ஏற்பட்ட குடிநீர் மோதலில் ஒருவருக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. அறந்தாங்கி அருகே களப்பக்காட்டில் நடந்த தண்ணீர் மோதலில் ஒரு பெண் காயம் அடைய, ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இவை எல்லாம் காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். இவை போக, நாள்தோறும் மக்களிடையே சச்சரவுகளை உருவாக்கிப் பெரும் மனக்கசப்புகளையும் பகையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தத் தண்ணீர்த் தட்டுப்பாடு.--------------------------
நீர் பஞ்சத்தின் சாட்சிகள்!-----------------------
கடந்த இரு வாரங்களில் மூன்று குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் நம் அலட்சியத்தை மட்டும் உணர்த்தவில்லை… கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், நமது நீர் பஞ்சத்தின் கொடிய சாட்சிகள். தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறுகள், தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் அப்படியே கைவிடப்பட்டுள்ளன. இப்படி மாநிலம் முழுக்க ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் இருக்கின்றன. ஒரு போர்வெல் தோண்ட, பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போதைய நிலையில் 300 அடி வரைக்கும் தோண்ட ஓர் அடிக்கு 65 ரூபாய். அதன்பிறகு ஒவ்வொரு 100 அடிக்கும் 10 ரூபாய் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதன்படி, ஒரு போர்வெல் அமைக்க சராசரியாக 35,000 ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவழித்துத் தோண்டியும் தண்ணீர் இல்லை என்ற நிலையில் மக்கள் மனம் வெறுத்து, துளையை அப்படியே விட்டுவிடுகின்றனர். வெறும் 50 ரூபாய், 100 ரூபாய் செலவில் அதை மூடிவிட முடியும் என்ற நிலையில், மூடாமல் விடுவது மிகவும் தவறானதுதான். எனினும் இந்தப் பிரச்னையின் ஆணிவேர் தண்ணீர் சிக்கலில்தான் இருக்கிறது!----------------------------
தமிழகப் பொதுப்பணித் துறை, கடந்த மார்ச் மாதத்தில், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறித்த வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதன்படி மாநிலத்தின் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் முந்தைய ஆண்டைவிட 2 மீட்டருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 6-7 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது!---
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment