Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, October 31, 2014
மீனவர் தூக்கு: நள்ளிரவு வரை சமாதான பேச்சுவார்த்தை- போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
ராமேஸ்வரம்: இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து போர்க்கோலம் பூண்ட ராமேஸ்வரம் மீனவர்களை சமாதானப்படுத்தும் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த சமாதானத்தை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
---------------------------------------------------------------------
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் அவர்கள் 5 பேரும் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை அரசு வழக்கு தொடர்ந்தது.
--------------------------------------------------------------------
இந்த வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்தது. இந்த அநியாயத் தீர்ப்பைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்தது.
------------------------------------------------------------------------------------
ராமேஸ்வரம் பகுதியே போர்க்களமானது. சாலை மற்றும் ரயில் பாதைகளில் மரங்களைப் போட்டும் டயர்களைக் கொளுத்தியும் போக்குவரத்தை மீனவர்கள் முடக்கினர்.
-----------------------------------------------------------------------------
மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டன.
-------------------------------------------------------------------------------
இதனால் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தங்கச்சிமடத்தில் ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
---------------------------------------------------------------------------
பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது. உச்சகட்ட கொந்தளிப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
-----------------------------------------------------------------------------
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழு மீனவர் பிரதிநிதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 மீனவர்கள் அப்பாவிகள்; அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகமே மேல்முறையீடு செய்யும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தைக் கைவிடுமாறு அரசுத் தரப்புக் கேட்டுக் கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
-------------------------------------------------------------------------------
இதனை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment