Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, March 29, 2014
பாட்டில் குடிநீர் - நமது அடுத்த தலைமுறையை காப்போம்
உலகிலேயே முதன்முறையாக சான் பிரான்சிஸ்கோ மாநகராட்சி, பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரை 100% தடை செய்துள்ளது. இது முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆமாம், அதாவது உலகின் பெருவாரியான கிட்னி சிறுநீரக தொடர்பான அத்தனை பிரச்சனைகளுக்கும், மிக முக்கிய காரணங்கள் பதப்படுத்தப்பட்ட / குளோரின் கலந்த பாட்டில் குடிநீர்களே!! இது பெருவாரியான நாடுகளுக்கும் அதை ஆளும் அரசுகளுக்கும் நன்றாக தெரிந்திருந்தாலும், கொக்ககோலா, பெப்சி போன்ற பெரும்பணக்கார முதலாளிகளின் பணத்திற்காக நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை அடமானம் வைக்கிறது. அதை பற்றி எனக்கு தெரிந்ததை சிறு கட்டுரையாக கீழே பார்ப்போம்.18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் பாட்டில் குடிநீர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், 20ஆம் நூற்றாண்டான 80களிலேயே பரவலாக பாட்டில் குடிநீர் அறிமுகமானது. உலகில் அதிகமாக சந்தைப் படுத்தப்படும் பொருட்களில் நீரும் ஒன்று!! உலகம் முழுக்க ஆண்டிற்கு 20,000 கோடி பாட்டில்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் சுமார் RS. 4 லட்சம் கொடி ரூபாய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாட்டில் குடிநீர் வர்த்தகம் உலகம் முழுதும் நடக்கிறது. அதில் சராசரியாக 15% அமெரிக்காவில் மட்டும் நடைபெறுகிறது. அந்த குடிநீர் பாட்டில்கள் கீழ்கண்ட வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. Artesian water, Fluoridated Water, Ground water, Mineral water, Purified water, Sparkling water, Spring water, Sterile water, Well water.
உண்மையில் பாட்டில் குடிநீரை உற்பத்தி செய்யும் MNC பன்னாட்டு நிறுவனங்கள் பிற நாட்டின் மண்ணின் நீர் அளவை பெரிதாக கருத்தில் கொள்வதில்லை. முடிந்தவரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு பாட்டில் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.அவற்றிற்கு பிறநாட்டு நிலத்தடி நீர்மட்டம் குறித்தான அக்கறை தேவையற்றதாக இருப்பதால், இந்த தொழிலே ஒரு ஆரோக்கியமற்ற தொழிலாகவே காணவேண்டியுள்ளது. அதாவது ஒவ்வொரு நாட்டிற்கும் சீதோஷ்ண நிலைப்படி தண்ணீரின் தரமும், அளவும் இருக்கும். அதில் தென்னிந்தியா போன்ற அதிக நீர்வரத்துள்ள பகுதிகளில் இதுபோன்ற ஆழ்துளை போர்கள் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் போது அந்த சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும். சென்னையின் ஒருபகுதியின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்ல இந்த பாட்டில் குடிநீர் உற்பத்தி காரணம் என ஆய்வுகளும் சொல்கிறது. இந்த நிலத்தடி நீர்மட்டம் குறைவு நேரடியாக விவசாயத்தை பாதித்தாலும், மறைமுகமாக மண்ணின் ஆரோக்கியத்தை அறவே அழித்துவிடுகிறது.இது வளர்ந்த நாடுகளை சார்ந்த பாட்டில் குடிநீர் தயாரிப்பு கம்பெனிக்கு தற்காலிக லாபமாகவும், அவர்கள் சார்ந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கரன்சி மதிப்பு உயர்வுக்கு காரணமாக இருந்தாலும் பின்னாளில் மனித இனம் ஆரோக்கியமில்லாத குடிநீரை குடிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு இட்டு செல்லும் என்பது உறுதி. பணம் பொருளாதாரம், வர்த்தகம், தொழில் நாடு, எல்லாவற்றையும் விடு ஒவ்வொரு மனிதனின் அடிப்படை தேவைகள் என்பதுவே உலகில் மிக முக்கியமான ஒன்று அதில் எவர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த மனித இனமும் பலிகடா ஆக வேண்டியது விதி. மேலும் தொடர்ந்து இயற்கை கொள்கைகளுக்கு முரண்படுவது மனிதனின் உடல் ஆரோக்கியம் ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும். கெமிக்கல் கலப்பினாலான குடிநீர் மனித இனத்தின் அடுத்தடுத்த சந்ததியினரை பலவீனமாக்கும்.மனித மரபணுவின் வயது சுமார் 2 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது மனித இனம் பூமியில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளாக முன்பிருந்து தொடர்ந்து இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சம்மந்தம் இருக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்த மனித மரபணுவின் ஆரோக்கியம் கடந்த சில நூற்றாண்டுகளாக இல்லை. அதற்கு காரணம் முன்பு நிறைய குழந்தைகள் பிறந்தது அதாவது ஒரு ஆண்-பெண் X-Y இணைந்து பெற்றுக்கொள்ளும் 5 அல்லது 7குழந்தைகளில் குறைந்தது 1 (அ) 2 குழந்தைகள் மரபணு ரீதியாக முழு ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் சமீபத்தில் பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தையுடன் நிறுத்தி கொள்வதால், சராசரி மனித மரபணுவின் முழு ஆரோக்கியம் பெருவாரியாக தடைபட்டுவிட்டது. இதனால் தான் உலகமுழுக்க மருத்துவமனைகள் கூடிக்கொண்டே இருக்கிறது. இது கண்ணுக்கு தெரியாத ஆபத்து. ஆனால் அதற்கும் பாட்டில் தண்ணீருக்கும் என்ன சம்மந்தம்னு யோசிக்கிறீங்களா?!? இருக்கு! அதாவது ஏற்கனவே ஒருபுறம் மரபணு ரீதியாக மனித இனம் பலவீனமடைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இயற்கை நீரை உறிஞ்சி எடுத்து அதில் செயற்கை வேதிப்பொருட்களை கலந்து அருந்துவது, அடுத்தடுத்த தலைமுறையை மிகப்பெரிய நோயாளிக் கூட்டமாக மாற்றிவிடும்.
ஆகையால் இப்போதே விழிப்புணர்வு கொண்டு நமது அரசு நிறுத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் கவுரவத்திற்காக பாட்டில் நீரை குடிக்கும் நாம், இனி அதை குடிக்காமல், இயற்கையான சுனை நீர் அல்லது கிணறு, போர் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை குடிப்போம். நமது அடுத்த தலைமுறையை காப்போம்
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment