Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, February 8, 2014
விளையாட்டுப்போட்டிக்கு விருந்தினராக யாரை அழைப்பது - தர்மசங்கடத்தில் கிளிநொச்சி அதிபர்கள் :
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது எல்லா பாடசாலைகளிலும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.; பாடசாலைகளின் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அந்த கல்விச் சமூகமே விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளில் மகிழ்ச்சியாக இருக்க அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மிகவும் தர்மசங்கடத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி கல்வி வலயத்தில் பல அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் யாரை விருந்தினராக அழைப்பது என்பதிலேயே அதிபர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பலர் அதிபர்கள் தெரிவி;துள்ளனர். வடக்கு மாகாண சபையை சேர்ந்தவர்களை அழைப்பதா அல்லது மத்திய அரசின் ஆளும்தரப்பைச் சேர்ந்தவர்களை அழைப்பதா என்பது தொடர்பிலேயே பாடசாலை அதிபர்கள் இந்த பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
வடக்கு மாகாண சபை தெரிவு செய்வதற்கு முன் மத்திய அரசின் ஆளும்தரப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் தங்கள் பாடசாலைக்கு பௌதீக வளம் மற்றும் பல்வேறு உதவிகளை பெற்று பாடசாலையின் கல்விச் செயற்பாட்டை முன்னேற்றியுள்ளதாகவும் பாடசாலைகளில் நிலவிவந்த பல தீர்க்க முடியாத பிரச்சினைகளை இவர்களைகொண்டு தீர்வுகளை பெற்றுக்கொண்டதாகவும் இதற்கான நன்றியுணர்வாக அவர்களை சார்ந்தவர்களை விருந்தினராக அழைத்தால் தாங்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி நிலை ஏற்படலாம் என தெரிவிக்கும் பல அதிபர்கள் மறுபுறம் மத்திய அரசின் ஆளும்தரப்பை சார்ந்தவர்களை விடுத்து வடக்கு மாகாண ஆளும்தரப்பை சேர்நதவர்களை விருந்தினராக அழைத்தால் தங்களிடம் உதவிகளை பெற்று பாடசாலையினை வளர்த்துவிட்ட நிலையில் தற்போது நன்றி மறந்தவர்களாக அதிபர்கள் உள்ளனர் என்ற குறைக்கு உள்ளாக வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கும் பல அதிபர்கள் இந்த வருடாந்த இல்ல மெய்வலுநர் போட்டி நிகழ்வுகள் மூலம் தாங்களே மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அழைக்காமலும் செய்ய முடியாது அழைத்தாலும் நிம்மதியாக செய்ய முடியாது என்றநிலையில் தங்களின் நிலைமை காணப்படுவதாக பல அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment