Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 9, 2014

"சர்வதேச அழுத்தம் என்பது எறும்புக் கடி போன்றது' ஸரீபன்ரெப்ற்கு சவால் விடுத்துள்ள மகிந்த – கோத்தா

இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஸரீபன்ரெப்பிற்கு சவால் விடுக்கும் அல்லது அவமதிக்கும் நடவடிக்கைகளாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுப் பயனத்தை ஆரம்பித்தார். மறுமுனையில் ஸரீபன்ரெப் இலங்கையில் இருக்கும் போதே வடக்கில் புதிய இராணு முகாம் திறப்பு, படையினரை பலப்படுத்தல், முகாம்களுக்கான பயணங்களும் கலந்துரையாடல்களும் என வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்}ச மேற்கொள்கின்றார்.
கடந்த காலங்களிலும் சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்கும் பிரதிநிதிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி பறந்து செல்வது வழமையான நடவடிக்கையாகவே அமையும். இம்முறை அமெரிக்காவுக்கு ஒரு செய்தியாக அந்நாட்டின் பிரதிநிதி இலங்கையில் இருக்கும் போதே இராணுவமுகாம் திறப்பு உள்ளிட்ட படைத்தரப்பு நடவடிக்கைகரள பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்ச மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் சர்வதேச அழுத்தம் என்பது எறும்புக் கடி போன்றது' என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் என்கின்றனர் அவதானிகள்.யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை பயணம் மேற்கொண்டுள்ள ஐனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்ச புதிதாக அமைக்கப்பட்ட இரானுவ முகாம்களைத் திறந்து வைத்துள்ளார்.
இதற்கமைய இன்று காலை விசேட விமானம் முலமாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஐபக்ச கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு இரானுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் இரானுவ நிலைமைகளையும் பார்வையிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து யாழிற்கு பயணம் மேற்கொண்ட பாதுகாகப்பு செயலாளர் ஏ 9 வீதியின் மிருசுவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரானுவத்தின் 52 ஆவது படைத் தலைமையகத்தையும் திறந்த வைத்தார்.அத்தோடு அங்குள்ள இரானுவ நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததுடன் இரானுவத்தின் முகாம்களையும், பார்வையிட்டதுடன் குறித்த முகாம் தொடர்பாகவும் மாவட்டத்தின் ஏனைய நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். தோடர்ந்து இராணுவ வைத்தியசாலையையும் பார்வையிட்டுள்ளார்.
இதன் போது மாகாண ஆளுநர் சந்திரசிறி இரானுவத் தளபதி மற்றும் மாவட்ட இரானுவத் தளபதி உள்ளிட்ட இரானுவ அதிழகாரிகள் தளபதிகள் எனளப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment