Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, January 21, 2014

முள்ளி வாய்க்காலில் மூழ்கி கரை தேடி அலையும் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படும் அபத்தம் தொடர்கிறது:-

இறுதி யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் காணாமல் போகடிக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலையும் மக்களின் இயலாமைகளின் மேல் இலங்கை அரசாங்கத்தினதும் புலனாய்வுத் துறையினதும் சவாரி தொடர்கிறது. அந்த வகையில் பிள்ளைகளையும் உறவினர்களையும் பறிகொடுத்த மக்கள் மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அருகில் ஏமாற்றப்படும் அடுத்த அத்தியாயம் நேற்று (20.01.14) மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.இன்று காலை முதல் கிளிநொச்சியில் நீதிமன்றத்திற்கு பக்கத்தில் வங்கிக்கு அருகில் தனியான கொட்டகை அமைத்து ரீஐடியினர் மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து மக்கள் சிலர் தெரிவித்தனர். ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசாரணை என ஏமாற்றப்பட்டு அழைக்கப்பட்ட மக்களுக்கு காணாமல் போனவர்களுக்கான இறப்புச் சான்றிதல்களை வழங்க இலங்கைப் படையினரும் புலனாய்வாரள்களும் முனைந்து கொண்டு இருக்கின்றனர்.அத்துடன் இவர்களின் வங்கிப் புத்தகங்களில் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வைப்பில் இட முனைந்துள்ளதாக அங்கு சென்று திரும்பிய மக்கள்தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். ரோக்குண் கொடுத்து ஏமாற்றப்பட்டு அழைக்கப்பட்ட தம்மிடம் புலிகள் பலவந்தமாக ஆட்களைச் சேர்த்து போராட்டத்தில் ஈடுபடுத்தியமையினால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு அவர்களுக்காண இறப்புச் சான்றிதலும் பணமும் கொடுத்து கதையை முடிக்க அரசாங்கம் முனைவதாக மக்கள் கடுமையான கோபம் அடைந்துள்ளனர்.இதேவேளை குடும்பங்களாக சரணடைந்து இப்போ படையினரும் அரசாங்கமும் கைவிரித்துள்ள, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் செயற்பாட்டாளர்கள் சிலரின் உறவினர்கள் தமது பதிவை மேற்கொள்ள சென்ற போது அதனை படையினர் ஏற்க மறுத்துள்ளனர். திருமணம் முடித்த குடும்பங்கள் தனியானவர்கள் எனவும் அவர்களின் தாய் தந்தையர்கள், மாமன் மாமி என உறவினர்கள் பதிய முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment