Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, January 20, 2014

இலங்கை வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம் -அ.நிக்ஸன்-

ஆட்சிமாறினால் இலங்கையில் அமைதி ஏற்படும் இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என கருதுகின்ற மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பான தங்கள் சிந்தனையில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்--- -ஆட்சியை தக்க வைக்கின்ற நீண்ட நிகழ்ச்சி நிரலும் அதற்கு ஏற்ப சர்வதேச நாடுகளை தங்கள் பக்கம் வரவைக்கின்ற ஏற்பாடுகளுடன் மாத்திரமே வெளியுறவு அணுகு முறை நகர்ந்து செல்கின்றது. தொடர்ச்சியான சர்வதேச அழுத்தங்களும், ஜெனீவா மனித உரிமைச் சபை மாநாடும் இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் தற்போது மாற்றங்களை எற்படுத்தி வருகின்றன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைப் போன்று இலங்கை அரசாங்கத்திற்கு நிரந்தரமான வெளிநாட்டுக் கொள்கை என ஒன்று இல்லை. இலங்கை அரசியலமைப்பில் வெளிநாட்டு கொள்கை என கூறப்பட்டிருந்தாலும் அரசாங்கம் மாறுகின்போது அந்த கொள்கையும் மாற்றமடையாத முறையில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அதாவது எழுதப்பட்ட ஒரு நெகிழாத் தன்மையை வெளியுறவுக் கொள்கை கொண்டிருக்கவில்லை. ஆனாலும்; ஜே.ஆர் ஜயவர்த்தனா காலத்தில் இருந்து சந்திரிகா பண்டாரநாயக்கா காலம் வரை இனப்பிரச்சினை விடயத்தில் வெளியுறவு கொள்கை என்பது ஒர் நேர் கோட்டில்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. கட்சி அரசியல்: இலங்கையில் தேசிய கட்சிகள் என்று கூறப்படுகின்ற இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளன. ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது ஐக்கிதேசிய கட்சி. இந்த இரு கட்சிகளும்தான் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இன்று வரை மாறி மாறி ஆட்சி புரிந்துவருகின்றன. வெளிநாட்டுக் கொள்கை என்ற விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் சீனச்சார்பு அதிகமாக இருக்கும். ஐக்கிய தேசிய கட்சியிடம் அமெரிக்காவை முதன்மைப்படுத்திய மேற்குல நாடுகளுக்கு வளைந்து கொடுக்கும் கொள்கை அதிகமாக காணப்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடம் சீனச்சார்பு இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கும் ஏற்ப செயற்படும் பண்பும் காணப்பட்டது. இனப்பிரச்சினை ஆயுதப்போராட்டமாக மாறிய 1983ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அரவனைத்துச் செல்ல வேண்டிய ஒரு நிலை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பங்கரவாத பிரச்சினையாக முதலில் காண்பித்தவர் ஜே. ஆர்; ஜயவர்த்தனா. அதன் நீட்;சிதான் இன்றுவரையுள்ள அரசாங்கத்தில காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்பது இரண்டு பிரதான விடயங்களை கொண்டிருந்தது. ஒன்று பொருளாதார ரீதியிலான தேடல், இரண்டாவது வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஒற்றை ஆட்சி தன்மைக்குள் ஒரு தீர்வை உருவாக்குதல். சர்வதேசம் ஆதுரவு இலல: சர்வதேச ரீதியாக ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா 1983 ஆண்டு இனக்கலவரம் நடைபெற்று ஓய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு அன்று கூறியிருந்தார். அதனடிப்படையில்தான்; இலங்கையின் எதிர்கால வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும் எனவும் கூறினார். 18 திருத்தங்களுடன் 1978ஆம் அவரால் உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அந்த யாப்பின் கீழான ஒற்றை ஆட்சியை மேலும் பலப்படுத்த முற்படுகின்றது. ஜே.ஆரை தொடர்ந்து பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதிகளும் அதைத்தான் விரும்பினார்கள். ஆனாலும் முன்னாள் ஜனாதிபதிகள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட தன்மை ஒன்றை கொண்டிருந்தன. ஜே.ஆர் ஜயவர்த்தனாவும் சந்திரிகாவும் வௌ;வேறுபட்ட கடசிக் கொள்கைகளை கொண்டிருந்தாலும் அரசாங்கம் என்ற தளத்தில் இருந்துகொண்டு இனப்பிரச்சினை தொடர்பாக ஒரே பார்வையில் சிந்தித்தனர். ஆனால் அந்த சிந்தனை இனப்பிரச்சினைக்கு நேர்த்தியான தீர்வை கொண்டு வர வேண்டும் என்று இருந்ததாக கூற முடியாது. ஆனாலும் இலங்கையின் சர்வதேச நாடுகளை ஆத்திரமடையச் செய்யும் அளவிற்கு அல்லது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்தும் முறையில் அந்த சிந்தனைகள் இருக்கவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர்தான் இலங்கை வெளியுறவுக் கொள்கையின் நிலை தலைகீழாகியது. ஜெனீவா தீர்மானத்தின் பின்னர்:- 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர்தான் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் தளர்வு ஏற்பட்டு அது அமெரிக்க எதிர்ப்புவாத நாடுகளுடன் கூட்டுச் சேர்கின்ற நிலைக்கு மேலும் தள்ளியது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அமெரிக்க எதிர்ப்பு கொள்ளை ஆரம்பித்தது என கூறினாலும் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அமெரிக்க உதவி தேவைப்பட்ட காரணத்தினால் எதிhப்பை கொஞ்சம் அமர்த்தி வாசிக்க வேண்டிய நிலை உருவானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்பதற்காக அமெரிக்காவும் போருக்கு உதவவில்லை. மாறாக விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என அமெரிக்கா வெளியுறவுக் கொள்கையில் 1997ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுதான் அது. அமெரிக்க இராஜதந்திரி ரிச்சாட்ஆமிரேஜ் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகளை சேர்த்தமைக்கு காரணம் சொன்னபோது அந்த தகவல் தெளிவாக புரிந்தது. 2004 ஆம் ஆண்டு ரிச்சாட் ஆமிரேஜ் கொழும்புக்கு வந்தபோது சர்வதேச ரீதியாக அச்சறுத்தல் விடுக்கக்கூடிய பயங்கரவாதிகளை அழிப்போம் என கூறியிருந்தார். இதுதான் இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதனால் இலங்கை அமெரிக்காவுக்கு எதிரான கொள்கையை பின்பற்றினாலும் அமெரிக்கா விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவியது. ஆனால் போர் முடிந்ததும் தாங்கள் சொல்வதை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் கேட்கும் என அமெரிக்கா நம்பியது. ஆனால் அது நடக்கவில்லை.

No comments:

Post a Comment