Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 29, 2013

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

மாவீரர் நாள் தமிழீழ விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள்ஆகும். இம்மாவீரர்கள் எம் வரலாற்றின் அழியா நினைவுச் சின்னங்கள். எம்மினம் வாழ தம் வாழ்வை தியாகம் செய்த தியாச்சுடர்கள்.இவர்களின் உன்னத தியாகத்தை போற்ற எமக்கு கிடைத்த ஒரு உன்னத நாளே இம் மாவீரர் நாள். இம்மாவீரர் நாள் வழமை போல்இம்முறையும் நியூசிலாந்து மண்ணிலே கார்த்திகை மாதம் 27ம் திகதி புதன்கிழமை இ மாலை 6.30 மணியளவில் , Owairaka Primary School, 113-115 Richardson Road, Mt Albert, Auckland மண்டபத்தில் நடைபெற்றது. மாவீரர் கேப்டன் கண்ணன் அவர்களின் அன்னை திருமதிகணபதிப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்துதேசியக் கொடியினை மகளீர் அணியின் பொறுப்பாளர் சுமதி அவர்கள் ஏற்றிவைத்தார்இ தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை மாவீரர்திலகா அவர்களின் சகோதரன் துறை மாஸ்டர் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் ஆரதனைஅவர்களின் சகோதரர் கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் எழுந்து அகவணக்கம்செலுத்தினர். அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் மலர் தூவி தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்துமாவீரர்நாள் அறிக்கையினை குமரன் அவர்கள் வாசித்தார். தொடர்ந்து தேசிய தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டின் மாவீரர் நாள்உரையின் ஒரு பகுதி திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்ட ளுஆநு-வாசினாதன் அவர்களின்உரையும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து எமக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கேட்கும் விதமாய் அமைந்த சிறார்களின் நடனம்இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சிறுவன் யிப்சன் அவர்களின் பேச்சும் இ அதனை தொடர்ந்து ஹரிணி அவர்களின் கவிதையும் இ பிரசாத்அவர்களின் பேச்சும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பினால் ஒருங்கமைக்கப்பட்ட மாவீரர் தின ஓவியப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் யாவும் இடைவேளை தொடர்ந்துஇடம்பெற்றது.இடைவேளையை தொடர்ந்து கேசவன் அவர்களின் உரையும்இ தொடர்ந்து கீர்த்தனன் அவர்களின் உரையும் இ தொடர்ந்துபிரேம் அவர்களின் உரையும் இடம்பெற்றதுஇ இறுதிக்கலை நிகழ்வாக "உறங்காத விழிகள்" என்ற நாடகம் அரங்கேறியது. அதனைதொடர்ந்து தமிழ் ஒருங்கமைப்பு நிர்வாக பொறுப்பாளர் கௌரீசன் அவர்களால் நியூசிலாந்துக் கொடியும் தமிழ் ஒருங்கமைப்பு பொறுப்பாளர் அசோக் அவர்களால் தமிழீழ தேசியக் கொடியும் இறக்கப்பட்டது. இறுதியாக தமிழீழ எழுச்சிப்பாடல் இசைத்ததை தொடர்ந்துநிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. இந்நிகழ்வில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment