சென்னை: "இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது,'' என, அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர்களை, சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் சம்பந்தன் நேற்று காலை சந்தித்தார். இதில், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன், எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பு குறித்து, சம்பந்தன் அளித்த பேட்டி: இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தேன். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துக் கூறி, அவர்களின் ஆதரவைத் திரட்ட உள்ளோம்.
புதிய முதல்வர்:
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, விக்னேஷ்வரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளோம். இந்திய பிரதமர் மற்றும் பிற கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நாங்கள் சந்திப்போம். இலங்கைத் தமிழர் சம உரிமையுடன் வாழ, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டியது, இந்தியாவின் கடமை. இந்திய நாட்டைத் தவிர, பிற நாடுகளுக்கு இந்த பொறுப்பு இல்லை.
தமிழக கட்சிகளுக்கு ஆதரவு:
போர் முடிந்து பல ஆண்டுகளாகியும், இலங்கைத் தமிழர்களின் நிலையில் மாற்றமில்லை. இலங்கை அரசு, இந்தியா மற்றும் ஐ.நா., சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த ஒப்புக் கொண்டு, அதை நிறைவேற்ற விடாமல் தற்போது தடுத்து வருகிறது. போரில் வீடுகளை இழந்து, வெளியேறிய தமிழர்களை, மீண்டும் மறு குடியமர்த்த, இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், போரின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்களித்தது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. தமிழர்கள் மறுவாழ்வுக்கு, இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது நியாயமானது. இக்கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கிறது.
மார்ச்சில் அறிக்கை:
ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவரது வருகையால், போர் பாதிப்பு குறித்து வெளிவராத பல விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், 2014, மார்ச் மாதம், நவநீதம் பிள்ளை தாக்கல் செய்ய உள்ளார். அதில், இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, சம்பந்தன் கூறினார். சம்பந்தனுடனான சந்திப்பு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு, பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் மோடி ஆகியோரும், இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த, முழு கவனம் எடுத்து வருகின்றனர். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என்றார்.
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, October 23, 2013
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தல்
சென்னை: "இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது,'' என, அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர்களை, சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் சம்பந்தன் நேற்று காலை சந்தித்தார். இதில், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன், எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பு குறித்து, சம்பந்தன் அளித்த பேட்டி: இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தேன். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துக் கூறி, அவர்களின் ஆதரவைத் திரட்ட உள்ளோம்.
புதிய முதல்வர்:
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, விக்னேஷ்வரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளோம். இந்திய பிரதமர் மற்றும் பிற கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நாங்கள் சந்திப்போம். இலங்கைத் தமிழர் சம உரிமையுடன் வாழ, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டியது, இந்தியாவின் கடமை. இந்திய நாட்டைத் தவிர, பிற நாடுகளுக்கு இந்த பொறுப்பு இல்லை.
தமிழக கட்சிகளுக்கு ஆதரவு:
போர் முடிந்து பல ஆண்டுகளாகியும், இலங்கைத் தமிழர்களின் நிலையில் மாற்றமில்லை. இலங்கை அரசு, இந்தியா மற்றும் ஐ.நா., சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த ஒப்புக் கொண்டு, அதை நிறைவேற்ற விடாமல் தற்போது தடுத்து வருகிறது. போரில் வீடுகளை இழந்து, வெளியேறிய தமிழர்களை, மீண்டும் மறு குடியமர்த்த, இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், போரின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்களித்தது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. தமிழர்கள் மறுவாழ்வுக்கு, இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது நியாயமானது. இக்கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கிறது.
மார்ச்சில் அறிக்கை:
ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவரது வருகையால், போர் பாதிப்பு குறித்து வெளிவராத பல விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், 2014, மார்ச் மாதம், நவநீதம் பிள்ளை தாக்கல் செய்ய உள்ளார். அதில், இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, சம்பந்தன் கூறினார். சம்பந்தனுடனான சந்திப்பு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு, பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் மோடி ஆகியோரும், இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த, முழு கவனம் எடுத்து வருகின்றனர். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என்றார்.
சென்னை: "இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது,'' என, அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறினார்.
தமிழக பா.ஜ., தலைவர்களை, சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் சம்பந்தன் நேற்று காலை சந்தித்தார். இதில், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் இல.கணேசன், தமிழிசை சவுந்திரராஜன், எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பு குறித்து, சம்பந்தன் அளித்த பேட்டி: இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தேன். தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்துக் கூறி, அவர்களின் ஆதரவைத் திரட்ட உள்ளோம்.
புதிய முதல்வர்:
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, விக்னேஷ்வரன் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளோம். இந்திய பிரதமர் மற்றும் பிற கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நாங்கள் சந்திப்போம். இலங்கைத் தமிழர் சம உரிமையுடன் வாழ, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டியது, இந்தியாவின் கடமை. இந்திய நாட்டைத் தவிர, பிற நாடுகளுக்கு இந்த பொறுப்பு இல்லை.
தமிழக கட்சிகளுக்கு ஆதரவு:
போர் முடிந்து பல ஆண்டுகளாகியும், இலங்கைத் தமிழர்களின் நிலையில் மாற்றமில்லை. இலங்கை அரசு, இந்தியா மற்றும் ஐ.நா., சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க, 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த ஒப்புக் கொண்டு, அதை நிறைவேற்ற விடாமல் தற்போது தடுத்து வருகிறது. போரில் வீடுகளை இழந்து, வெளியேறிய தமிழர்களை, மீண்டும் மறு குடியமர்த்த, இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால், தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், போரின் போது, நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்களித்தது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடக்கவில்லை. தமிழர்கள் மறுவாழ்வுக்கு, இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத நிலையில், கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசு பங்கேற்கக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துவது நியாயமானது. இக்கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரிக்கிறது.
மார்ச்சில் அறிக்கை:
ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவரது வருகையால், போர் பாதிப்பு குறித்து வெளிவராத பல விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கையை, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், 2014, மார்ச் மாதம், நவநீதம் பிள்ளை தாக்கல் செய்ய உள்ளார். அதில், இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, சம்பந்தன் கூறினார். சம்பந்தனுடனான சந்திப்பு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு, பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் மோடி ஆகியோரும், இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த, முழு கவனம் எடுத்து வருகின்றனர். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment