Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, March 13, 2013

நெல்லையில் 3-வது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதம்: மேலும் ஒரு கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்

இலங்கை போரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது குறித்து ஐ.நா சபை பொது விசாரணை நடத்தி ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமாக முடியும் வகையில் இருப்பதால் சர்வதேச தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் சேவியர் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். பல்கலை கழக மாணவர்கள் நேற்று 2-வது நாளுடன் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டனர். நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் இன்று கல்லூரி முன்பு 3-வது நாளாக தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அவர்கள் கல்லூரி முன்பு போடப்பட்டுள்ள பந்தலில் இன்று சோர்வடைந்த நிலையில் படுத்துள்ளனர். இதுபோல நெல்லை புது பஸ் நிலையம் அருகே உள்ள சேவியர் காலனி பகுதியில் சேவியர் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இன்று 3-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் இன்று பல்கலைகழக மாணவர் ஒருவரும், பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் கூடுதலாக கலந்து கொண்டனர். இதனால் அங்கு 15 மாணவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதில் 11 பேர் சோர்வடைந்து பந்தலிலேயே படுத்த நிலையில் உள்ளனர். நெல்லை சட்டக்கல்லூரி முன்பும், நெல்லை புது பஸ் நிலையம் முன்பும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று ஜான்ஸ் கல்லூரி, இந்து கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத பந்தல் முன்பு கூடி ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், இலங்கை தமிழர் ஆதரவு அமைப்பினரும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த பிரச்சினையால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபையில் வலியுறுத்த வேண்டும் என்றும் இல்லாவிடில் உண்ணாவிரத போராட்டம் சாகும் வரை தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஐ.நா. நடவடிக்கை கோரி பேட்டை ம.தி.தா. கல்லூரி மாணவர்களும் இன்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். 3-ம் ஆண்டு மாணவர் முத்துராஜ் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் மாணவர்கள் சக்திவேல் முருகன், சுதாகர், மாடமகாராஜா, மாணவிகள் சத்யா, செல்வி, மாரிசெல்வி, பிரேமா உள்பட 20 மாணவிகளும், 30 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment